Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Saturday, 28 November 2009

எந்த வேளை?

இங்கே பெங்களூரில் வீடு பார்த்து ஒருவழியாக செட்டில் ஆகியாச்சு (ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ...செட்டில் ஆவது என்றால் என்ன?) , அதன் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணி தேவை, இங்கே உள்ள அபார்ட்மெண்டில் சொல்ல ஒரு பெண் வந்தார் , சுத்தமான கர்நாடக தமிழ்..பேரம் ஆரம்பித்தது மனைவி ஒவ்வொவொரு வேலையாக சொல்லிக்கொண்டே வர அவர் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார் ஒரு வேளைக்கு 500 ரூபாய் , மனைவி யோசித்து பரவாயில்லை நீ ஒரு வேளை வந்தால் போதும் என்று சொன்னாள், பதில் கேள்வி "எந்த வேளை?" ..சற்று யோசித்து மனைவி சொன்னது "காலை" . சற்று நேரம் மௌனம் , "இல்லம்மா எந்த வேளை செய்யணும்?" இப்படி சில தத்துவ விசாரணைகள்  நடந்து முடிந்த பின் தெரியவந்த செய்தி,அந்த பெண் சொன்னது வேளை அல்ல வேலை, அதாவது வீடு பெருக்க 500 பாத்திரம் கழுவ 500 , துணி துவைக்க 500....

ok, bye, எனக்கு நிறைய வேளை sorry வேலை இருக்கு (துணி துவைக்கணும், பாத்திரம் கழுவனும் ...) , அடுத்த பதிவில் பார்ப்போம்.

Sunday, 27 April 2008

கர்நாடக தமிழர்-2

இங்கே ஹிந்தி என்பது ஒரு மொழி அல்ல, அது ஒரு ஆயுதம், ஹிந்தி என்பது ஒரு அறிவு,ஹிந்தி படிப்பது என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சேர வைக்கும் ஒரு பாதை.எளிய பாதை, செலவில்லா பாதை. Science படிக்காதே maths படிக்காதே என்று யாரேனும் சொல்ல முடியுமா, english படிக்காதே என்று யாரேனும் சொல்வார்களா? அதே போல்தான் ஹிந்தியும்.

இன்று பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த ஒருவன் அவன் (தமிழகத்தை தவிர) எந்த மாநிலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் இந்தியாவில் எந்த நகரத்திலும் வேலை செய்ய முடியும், காரணம் ஹிந்தி.

நரசிம்மன், கோபால் போன்ற பெயர்களில் உள்ள குழப்பம் கன்னடர்களுக்கு செந்தில், இளங்கோ, அருள் போன்ற பெயர்களில் இல்லை. தெளிவாக தெரிந்து,அறிந்து போட்டு தாக்கி விடுகிறார்கள்.இங்கே அக்ரகாரத்திலும் சவுகார் பேட்டையிலும் செய்ததை மேலும் வண்மையாக்கி வாட்டாள் நாகராஜ் செய்து விட்டான்.

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு என பேசியும் எழுதியும் தமிழர்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தபட்டது வெளியே தெரியாத வரலாறு.உண்மையில் இந்த கருத்து பிரச்சாரத்திற்கு அடிபட்டது வழக்கம் போல விளிம்பு நிலை மக்களே.

அதே போல் தமிழகத்தில் இருக்கும் கன்னடர்களின் சொத்து மதிப்பு, கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களின் சொத்து மதிப்பை ஒப்பிட்டு பார்த்தல் மிகவும் குறைவு என்று தெரியும்.

தமிழ்நாட்டில் மொழி அபிமானம் போய் மொழி வெறி வந்து இருக்கிறது.அந்த மொழி வெறியினால்தான், பிற மொழி படங்கள் தமிழில் ஓடுவதில்லை. உதாரணமாக, தெலுங்கில் வெற்றி பெற்ற போக்கிரியை அப்படியே டப் செய்தால் இங்கே நாய் கூட சீண்டாது ஆனால் அதையே scene by scene காப்பி அடித்து விஜய் நடித்தால் 250 நாட்கள் வூடு கட்டி ஓடும்.உண்மையில் நாமும் தெலுங்கு படங்களை ஆதரிப்போமனால் திரைப்பட சந்தை இருமடங்காகும். ஏறக்குறைய இந்த இரண்டு திரை உலகங்களும் ஹிந்தி பட உலகிற்கு சவால் விடலாம்.

இதுவே ஆந்திரத்தில் இந்த நிலைமை இல்லை, அங்கே தமிழ் படங்களை அப்படியே ரசிக்க கற்று கொண்டு இருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் தமிழர்கள் மிக மிக குறைவு, ஆனாலும் ஆந்திராவிலும் தமிழர்கள் அடிவாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

கர்நாடக தமிழர்-1

சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு கர்நாடக பார்டரில் உள்ள ஹோகேனக்கல் என்ற water resource தொடர்பாக சில பிரச்சனைகள் ஏற்பட்டது.தமிழர்களின் சொத்துக்கள், தமிழ் திரைப்படங்கள் பெங்களூரில் தாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒரு கூட்டம் போட்டனர் அதில் சிலர் ஆவேசமாக பேசினர்.
சினிமாவில் இருப்பவர்களே இப்படி என்றால் தமிழ் தமிழ் என்று கட்சி நடத்துபவர்கள் இன்னும் ஆவேசமாக பேசுவர், பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
உதாரணம் : திருமாவளவன், பழ. நெடுமாறன்,ராமதாஸ் போன்றவர்கள்.


எனது கட்சி என்னவென்றால்

கர்நாடகா தமிழகத்தை விட 50-60 வருடங்கள் பின் தங்கி இருக்கிறது.எப்படி,
தமிழகத்தில் 1930-களில் ஆரம்பித்த இந்து மத துவேஷமும், நாத்திகவாதமும், பிராமண துவேஷமும் தமிழ், தமிழர் என்ற கோஷமும் 1960-ல்/ 70-ல் உச்சகட்டத்தில் இருந்ததோ அதே போல அதே போல் கர்நாடகாவில் 1980-களில் ஆரம்பித்து ஆரம்பித்த தமிழர் துவேஷம் இப்போது உச்சகட்டத்திற்கு சென்று உள்ளது.


ஒன்று புரிந்து கொள்ளுங்கள், ஒரு தெலுங்கருக்கோ அல்லது ஒரு மலையாளிக்கோ இந்த நிலைமை பெங்களூரில் இல்லை, தமிழர்க்கு மட்டுமே உண்டு. ஏன் என்றால் தமிழருக்கு மட்டுமே தாய்மொழி தவிர்த்து மற்ற மொழி பேச வராது.அதாவது "தமிழுக்கு அமுதென்று பேர் மற்ற எல்லா மொழிக்கரர்களும் தமிழ் மொழியை கற்று அதன் பழமையை போற்றி நம்முடன் உறவாட வேண்டும்" என்ற கோரிக்கையை சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஊரிலும் வைப்பதற்கு தமிழன் தயக்கபடவே மாட்டான். இதில் சந்தேகமே வேண்டாம்.
ஆனால் இந்த சந்தர்ப்பம் அவனுக்கு சில ஊர்களில் தான் அமைகிறது. அவற்றில் பிரதானமானது பெங்களூர்.


கன்னடரின் பிரதான குற்றச்சாட்டே "இங்கே வந்து இத்தனை வருடம் ஆகியும் கன்னடம் கற்றுக்கொள்ள வில்லையே" என்பதுதான். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது விளிம்பு நிலை மக்களையே!

தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து கன்னடர்களுக்கும் தமிழ் தெரியும்ஆனால் கர்நாடகவிளுருக்கும் 75% சதவித தமிழர்களுக்கு கன்னடம் தெரியாது, (அதாவது கன்னடம் பேசும்போதே இவர்கள் தமிழர் என மற்ற கன்னடர் தெரிந்து கொள்ளலாம் - அந்த அளவில்தான் இருக்கும்).அவர்கள் தனித்து தெரிவதால் அவர்களை அடையாளமும் கண்டு கொள்வது மிகவும் எளிது.இதுதான் இங்கே பிராதன பிரச்சினை, ஆனால் இங்கே ஊதும் தமிழ் என்ற சங்கில் எல்லோரும் செவிடர் ஆகிவிட்டனர்.

எனவே கன்னடர்களை தமிழ் நாட்டில் அடையாளமும் கண்டு கொள்வது மிகவும் கடினம். கன்னடர்களை ஒரு நிறுவனமாகவே அடையாளமும் காண முடியும். அதனால் வன்முறையும் மிக அதிக அளவில் இருக்காது, போலீசாருக்கும் அதை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது.

60 வருட திராவிட அரசியல் நமக்கு தந்து இருக்கும் சொத்து இது, அதாவது ஹிந்தியை படிக்கவேட்டாமல் செய்து தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழர்களை விலக செய்து, துய தமிழ், தனித்தமிழ் என்றெல்லாம் கூறி கூறி தமிழர்களுக்கு ஒருவிதமான superiority complex வளரச்செய்து அதன் மூலம் அவர்களை மற்ற மொழி கற்கும் ஆற்றலை அல்லது ஆவலை நிறுத்தியதால் வந்த வினை இது.
-