எதிர்பார்த்த மாதிரியே காங்கிரசுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்! எனது பார்வையில் இந்த தேர்தலில் மக்கள் யோசித்தே ஒட்டு போட்டு இருக்கிறார்கள்...
-பா.ம.கவுக்கு தகுந்த இடம்.( இதன் மூலம் வட தமிழகத்திற்கும், தமிழகத்தின் ரயில்வே பணிகளுக்கும் பாதிப்புதான் , ஆனால் பொதுவாய் பார்க்கும்போது இந்த தோல்வி பா.ம.கவிற்கு தேவையான ஒன்று)
-தமிழ்நாட்டில் காங்கிரசை ஜெயிக்க வைத்தும் தோற்க வைத்தும் இருக்கிறார்கள் , எதிர்ப்பை கட்டின மாதிரியும் ஆயிற்று , சப்போர்ட் செய்த மாதிரியும் ஆயிற்று.
-வழக்கம் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய இடம் பிடித்தாயிற்று (என்ன 2004 போல நாம் விரும்பிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த காபினட் துறை கிடைக்காது.. ஏனினில் வடக்கிலும் காங்கிரசுக்கு நல்ல பலம்)
-தி.மு.க விற்கு எதிர்பாராத வெற்றி, ஈழப்பிரச்சினைக்கு மக்கள் கொடுத்த முக்கியத்துவம் எல்லோரையும் யோசிக்க வைத்து இருக்கிறது.
-போன பதிவில் தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர் என்று எழுதினேன், இப்போது தமிழ்நாட்டின் பாவப்பட்ட அரசியல்வாதியாக வை.கோவை சொல்லலாம் என்று தோன்றுகிறது.
-ஜெ.கே.ரீதிஷ் ஜெயித்து இருக்கிறார் , வைகோ தோற்று இருக்கிறார், இப்போவே கண்ணை கட்டுதே....
-சிதம்பரம் செய்தது தனிக்கதை, தோற்று அதன் பிறகு ஜெயித்து இருக்கிறார் , இதற்க்கு கோர்ட்டில் கேஸ் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் , பார்ப்போம். ஒரு வகையில் அராஜகமாகத்தான் தெரிகிறது, விவரம் தெரியவில்லை
-எல்லோரையும் விட பெரிய ஆப்பு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியதுதான், முதல் நாள் வரை ஆட்சி அமைக்க முடியும் என்று நினைத்துக்கொண்டவரை சொந்த தொகுதியிலேயே மூன்றாவதாக வரச்செய்து விட்டார்கள். இனிமேலயும் கூட்டம் கூடின நம்பாதிங்கப்பா.
-தெளிவாக மாயாவதி, லாலு, சி.பி.எம், முலாயம், ராம் விலாஸ் பஸ்வான், போன்றவர்களுக்கு செய்தி சொன்ன மக்களுக்கு சலாம்.
-அடுத்து நாம் பார்க்க வேண்டியது மத்திய அமைச்சரவையில் அழகிரி, ப.சிதம்பரம், தயாநிதி மாறன் , போன்றவர்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதுதான். இந்த லிஸ்டில் ஜெ.கே.ரீதிஷ் அவர்கள் இடம் பெறுவாரா என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.
-புரட்சி தலைவியை இந்த அளவிற்கு நோகச்செய்த புரட்சி கலைஞருக்கு ஒரு ஜெ ,, ஆங்... (கேப்டன் பாணியிலேயே படிக்கவும்)
- மத்தியில் பா.ஜ. தோல்வியை ஏற்றது போன்று ஜெயலலிதாவும் நாகரீகமாகஏற்று இருக்கலாம், பணநாயகம் வென்று விட்டது என்று ஒரு சொதப்பல் statement.
-மக்கள் கொடுத்தது தெளிவான தீர்ப்பு, தமிழனாய் ஒரே வருத்தம் தமிழகத்தின் முக்கியத்துவம் அகில இந்திய அளவில் குறையும் , ஏனினில் hindhi belt என சொல்லப்படும் ஏரியாவிலேயே காங்கிரசுக்கு நல்ல come back. ஆனால் இந்தியாவிற்கு இது நல்லதே.
Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts
Sunday, 17 May 2009
தேர்தல் 2009
Thursday, 14 May 2009
தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர்
இன்று தேர்தல் - ஒரு செய்தி
கமல் ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, எனவே அவர் வாக்களிக்க முடியாமல் சென்றார். இது பற்றி அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
தமிழகத்தின் இதனை சமூக வாழ்வோடு பொருத்தி பார்த்தால் கமல் என்ற நடிகர் தமிழகம் என்ற மாநிலத்தில் எவ்வளவு அன்னியப்பட்டு இருக்கின்றார் என்று தெரிய வரும்.
பொதுவாக Film crazy என்று அறியப்படும் தமிழ்நாட்டில்தான்,இந்திய அளவில் ஏன் உலக அளவிலும் நடிகர்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் அவர்களை கடவுள்களாக கொண்டாடப்படும் நிலையும் இருக்கிறது. அவர்களுக்கு எந்த கூட்டத்திலும் மரியாதை அளிக்கபடுகின்றது , அவர்கள் அரசியலில் மிகப்பெரிய சக்திகளாக மதிக்கபடுகின்றனர், அவர்கள் கையில் ஆட்சியே கொடுக்கபடுகின்றது.
எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திற்கு பின்பு வந்த பெரும்பாலான நடிகர்கள் (பெரும்பாலும் கதாநாயகர்கள் ) அரசியல்வாதிகளாகவும் , அரசியல்
தொடர்பு இருப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
-விஜயகாந்த் , சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் நேரடி அரசியலில் இருக்கின்றனர்.
-ரஜினி அரசியலுக்கு வருவேன் , மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார் மேலும் அவர் ஒரு அரசியல் சக்தியாகவும் பார்க்கபடுகின்றார்.
-சத்யராஜ் ஈழப்பிரச்சினையிலும் மற்ற தமிழக பிரச்சினைகளிலும் தன்னை ஒரு தமிழனாக காண்பிக்க தவறுவதில்லை, மேலும் அவர் சீமான் , பாரதிராஜா போன்ற குழுக்களில் தன்னை இணைத்துக்கொண்டும் உள்ளார்.
-பிரபு , கூட தன் அரசியலில் நுழைவேன் என்று பேட்டி கொடுத்துள்ளார்.
இப்போது கமலை பார்ப்போம், தான் 'எந்த காலத்திலும் அரசியலில் நுழைய மாட்டேன்' என்று தீர்மானமாக சொன்னவர் , அதை செயலிலும் காட்டுபவர்.
இவ்வாறு நேர்மையாக சொன்னதன் பலன்தான் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் இருப்பது, அதாவது தமிழ்நாட்டில் முக்கிய பிரமுகர் அரசியலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இல்லாமல் இருப்பது எவ்வளவு ஆபத்து என்பதையே இன்று நடந்த சம்பவம்
காட்டுகின்றது, இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருக்கலாம் நாளை அவர் வாங்கிய சொத்து அவர் பெயரில் இல்லாமல் இருக்கும்.ஏன், அவர் படமே அவர் பெயரில் இல்லாமல் கூட இருக்கும்.
இதுவே மற்ற நடிகருக்கு ஆகி இருந்தால் அவரது ரசிகர் மன்றத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு இருப்பார் , ஒரு ரகளை நடந்து இருக்கும் , இப்போது கமல் "தேர்தல் அதிகாரியிடம் புகார் தந்து இருக்கிறார், அந்த அதிகாரியும் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார்"
கமல் கமலுக்கு அவரது ரசிகர்கள் சொல்லவேண்டும்நான் "அரசியல் பின்புலம் கொஞ்சம் வைத்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் ஓட்டளிக்ககூட வர வேண்டாம். வந்து அவமானப்பட வேண்டாம் , எத்தனையோ விஷயங்களில் middle class மதிப்பீடுகளை மீறி இருக்கிறீர்கள் , ஒட்டு போடும் விஷயத்திலும் மீறினால் தவறே இல்லை. "
கமல் ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, எனவே அவர் வாக்களிக்க முடியாமல் சென்றார். இது பற்றி அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
தமிழகத்தின் இதனை சமூக வாழ்வோடு பொருத்தி பார்த்தால் கமல் என்ற நடிகர் தமிழகம் என்ற மாநிலத்தில் எவ்வளவு அன்னியப்பட்டு இருக்கின்றார் என்று தெரிய வரும்.
பொதுவாக Film crazy என்று அறியப்படும் தமிழ்நாட்டில்தான்,இந்திய அளவில் ஏன் உலக அளவிலும் நடிகர்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் அவர்களை கடவுள்களாக கொண்டாடப்படும் நிலையும் இருக்கிறது. அவர்களுக்கு எந்த கூட்டத்திலும் மரியாதை அளிக்கபடுகின்றது , அவர்கள் அரசியலில் மிகப்பெரிய சக்திகளாக மதிக்கபடுகின்றனர், அவர்கள் கையில் ஆட்சியே கொடுக்கபடுகின்றது.
எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திற்கு பின்பு வந்த பெரும்பாலான நடிகர்கள் (பெரும்பாலும் கதாநாயகர்கள் ) அரசியல்வாதிகளாகவும் , அரசியல்
தொடர்பு இருப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
-விஜயகாந்த் , சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் நேரடி அரசியலில் இருக்கின்றனர்.
-ரஜினி அரசியலுக்கு வருவேன் , மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார் மேலும் அவர் ஒரு அரசியல் சக்தியாகவும் பார்க்கபடுகின்றார்.
-சத்யராஜ் ஈழப்பிரச்சினையிலும் மற்ற தமிழக பிரச்சினைகளிலும் தன்னை ஒரு தமிழனாக காண்பிக்க தவறுவதில்லை, மேலும் அவர் சீமான் , பாரதிராஜா போன்ற குழுக்களில் தன்னை இணைத்துக்கொண்டும் உள்ளார்.
-பிரபு , கூட தன் அரசியலில் நுழைவேன் என்று பேட்டி கொடுத்துள்ளார்.
இப்போது கமலை பார்ப்போம், தான் 'எந்த காலத்திலும் அரசியலில் நுழைய மாட்டேன்' என்று தீர்மானமாக சொன்னவர் , அதை செயலிலும் காட்டுபவர்.
இவ்வாறு நேர்மையாக சொன்னதன் பலன்தான் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் இருப்பது, அதாவது தமிழ்நாட்டில் முக்கிய பிரமுகர் அரசியலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இல்லாமல் இருப்பது எவ்வளவு ஆபத்து என்பதையே இன்று நடந்த சம்பவம்
காட்டுகின்றது, இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருக்கலாம் நாளை அவர் வாங்கிய சொத்து அவர் பெயரில் இல்லாமல் இருக்கும்.ஏன், அவர் படமே அவர் பெயரில் இல்லாமல் கூட இருக்கும்.
இதுவே மற்ற நடிகருக்கு ஆகி இருந்தால் அவரது ரசிகர் மன்றத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு இருப்பார் , ஒரு ரகளை நடந்து இருக்கும் , இப்போது கமல் "தேர்தல் அதிகாரியிடம் புகார் தந்து இருக்கிறார், அந்த அதிகாரியும் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார்"
கமல் கமலுக்கு அவரது ரசிகர்கள் சொல்லவேண்டும்நான் "அரசியல் பின்புலம் கொஞ்சம் வைத்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் ஓட்டளிக்ககூட வர வேண்டாம். வந்து அவமானப்பட வேண்டாம் , எத்தனையோ விஷயங்களில் middle class மதிப்பீடுகளை மீறி இருக்கிறீர்கள் , ஒட்டு போடும் விஷயத்திலும் மீறினால் தவறே இல்லை. "
Labels:
Election,
kamal,
kamalhassan,
ஒட்டு,
கமல் அரசியல்,
கமல் ஹாசன்,
தேர்தல்,
நடிகர்,
நடிகன்
Sunday, 5 April 2009
49-O
ஞானியின் ஒ பக்கங்களை பல பேர் அறிவார்கள். பார்லிமென்ட் தேர்தல் அருகில் வர ஞானி 'யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' எனத்தெரிவிக்கும் '49-O' என்ற option-ஐ பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்.
ஆனால் இதனை பயன்படுத்தினால் என்ன ஆகும் , என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தி தெரியலாம் அதாவது இத்தனை பேர் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று , அது அவர்களுக்கு நன்றாகாவே தெரியும் இப்போது கூட.
எனவே 49-O என்பது எதிர்ப்பை காண்பிக்கும் சரியான வழி அல்ல. நமது ஓட்டுக்கள் எல்லாம் செல்லாத ஒட்டுக்களாகும் கதி தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை, அதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியவே முடியாது.
மேலும், ஞானி எழுதுவது அச்சு ஊடகத்தில் (printing media), நமக்கே தெரியும் ஓட்டுப்போடும் பெரும்பான்மையான மக்கள் வாசிப்பவர்கள் அல்ல என்று, எனவே அவர்களுக்கு இந்த 49-O கொஞ்சம் ஓவர்.
எனவே இப்போது தேவை,
1. படித்தவர் எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும்.
2. இருப்பதிலேயே நல்லவர்களாக பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.
இரண்டுமே முக்கியம். முதல் விஷயமே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் இரண்டாவது விஷயம் பற்றி யோசிக்கும்போது நமக்கு பல கேள்விகள் வரலாம் 'யார் அந்த 'இருப்பதிலேயே' நல்லவர் என்று.
ஒருவர் தன் மகளையோ மகனையோ கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை பேரை விசாரிக்கிறார்கள், ஒரு வேலை வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், ஒரு வீடு கட்டுவதற்கு, வீட்டை ரிப்பேர் செய்வதற்கு, ஒரு செல் போன் வாங்குவதற்கு, வெளியூரில் தங்குவதற்கு, என பல தகவல் பரிமாற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம் தொகுதியில் இருக்கும் இருப்பதிலேயே நல்லவர் (அவர் சுயேட்சையாக இருந்தாலும்) எவர் என விசாரித்து , பத்திரிக்கைகளை படித்து, போஸ்டர்களை பார்த்து , தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து அவருக்கு ஓட்டுப்போட வேண்டும்.
அந்த நல்ல வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் ஒரு பார்லிமென்ட் தொகுதியில் 25,000 வோட்டுகள் வாங்கட்டும் (அதே தொகுதியில் வெற்றிபெற்றவர் 3 லட்சம் வோட்டுக்கள் வாங்கினால்!), இதே போல் முதலில் படித்தவர் அதிகம் கொண்ட தொகுதிகளிலாவது சுயேச்சை வேட்பாளர் குறிப்பிடத்தகுந்த வோட்டுக்களை வாங்கட்டும், அப்போது தெரியும் மாற்றம், அரசியல்வாதிகளுக்கு இந்த 25,000 வோட்டுகள் முக்கியம் அதனை பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதனை பயன்படுத்தி மேலும் பல நல்ல வேட்பாளர்கள் காலத்தில் குதிக்க வேண்டும், இப்போதுள்ள பா.மா.க மாதிரி அணி மாறியாவது இந்த 'நல்ல வேட்பாளர்கள்' பதிவிகளை கைப்பற்ற வேண்டும்.
இதுவே மற்றம் பெற ஒரே வழி.
ஆனால் இதனை பயன்படுத்தினால் என்ன ஆகும் , என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தி தெரியலாம் அதாவது இத்தனை பேர் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று , அது அவர்களுக்கு நன்றாகாவே தெரியும் இப்போது கூட.
எனவே 49-O என்பது எதிர்ப்பை காண்பிக்கும் சரியான வழி அல்ல. நமது ஓட்டுக்கள் எல்லாம் செல்லாத ஒட்டுக்களாகும் கதி தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை, அதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியவே முடியாது.
மேலும், ஞானி எழுதுவது அச்சு ஊடகத்தில் (printing media), நமக்கே தெரியும் ஓட்டுப்போடும் பெரும்பான்மையான மக்கள் வாசிப்பவர்கள் அல்ல என்று, எனவே அவர்களுக்கு இந்த 49-O கொஞ்சம் ஓவர்.
எனவே இப்போது தேவை,
1. படித்தவர் எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும்.
2. இருப்பதிலேயே நல்லவர்களாக பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.
இரண்டுமே முக்கியம். முதல் விஷயமே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் இரண்டாவது விஷயம் பற்றி யோசிக்கும்போது நமக்கு பல கேள்விகள் வரலாம் 'யார் அந்த 'இருப்பதிலேயே' நல்லவர் என்று.
ஒருவர் தன் மகளையோ மகனையோ கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை பேரை விசாரிக்கிறார்கள், ஒரு வேலை வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், ஒரு வீடு கட்டுவதற்கு, வீட்டை ரிப்பேர் செய்வதற்கு, ஒரு செல் போன் வாங்குவதற்கு, வெளியூரில் தங்குவதற்கு, என பல தகவல் பரிமாற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம் தொகுதியில் இருக்கும் இருப்பதிலேயே நல்லவர் (அவர் சுயேட்சையாக இருந்தாலும்) எவர் என விசாரித்து , பத்திரிக்கைகளை படித்து, போஸ்டர்களை பார்த்து , தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து அவருக்கு ஓட்டுப்போட வேண்டும்.
அந்த நல்ல வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் ஒரு பார்லிமென்ட் தொகுதியில் 25,000 வோட்டுகள் வாங்கட்டும் (அதே தொகுதியில் வெற்றிபெற்றவர் 3 லட்சம் வோட்டுக்கள் வாங்கினால்!), இதே போல் முதலில் படித்தவர் அதிகம் கொண்ட தொகுதிகளிலாவது சுயேச்சை வேட்பாளர் குறிப்பிடத்தகுந்த வோட்டுக்களை வாங்கட்டும், அப்போது தெரியும் மாற்றம், அரசியல்வாதிகளுக்கு இந்த 25,000 வோட்டுகள் முக்கியம் அதனை பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதனை பயன்படுத்தி மேலும் பல நல்ல வேட்பாளர்கள் காலத்தில் குதிக்க வேண்டும், இப்போதுள்ள பா.மா.க மாதிரி அணி மாறியாவது இந்த 'நல்ல வேட்பாளர்கள்' பதிவிகளை கைப்பற்ற வேண்டும்.
இதுவே மற்றம் பெற ஒரே வழி.
Labels:
49-O,
Election,
Tamilnadu Politics,
ஓட்டு,
தேர்தல்
Subscribe to:
Posts (Atom)