அன்புள்ள சாருவிற்கு,
49-O குறித்து உங்களின் எதிர்வினை மிகவும் மிகவும் தவறான நிலைப்பாடு.நீங்கள் உங்கள் பதிலில் அரசியல்வாதியை பற்றி கொலைகாரர்கள் , கொள்ளைகாரர்கள் , பயங்கரவாதிகள் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தீர்கள் , எதையும் யாரும் மறுக்க முடியாது, ஆனால் ஜனநாயகத்திற்கு மேலான ஒரு அமைப்பை உலகம் இன்னும் காணவில்லை.
ஒரு அமைப்பை (system) எதிர்ப்பவர் அதனினும் மேலான ஒரு அமைப்பை காட்டியே இப்போதுள்ள அமைப்பை எதிர்க்க வேண்டும், அது இல்லாமல் மிக விரக்தியான மன நிலையில் வோட்டு போடாமல் இருப்பது நீங்கள் சொன்ன அதே அரசியல்வாதிகளுக்கு துணை போவது போல் இல்லையா?
இதனை மற்றவர் யாரவது சொல்லலாம் ஆனால் எழுத்தாளராகிய நீங்கள் சொல்லக்கூடாது.
உங்களை போன்றவர் ஜனநாயகத்திற்கு மேல் நம்பிக்கை இழக்க கூடாது.இந்த சிஸ்டத்தை உள்ள கெட்டவைகளை களைவதை பற்றியே நீங்கள் எழுதவேண்டுமே (நீங்கள் மாயாவதியை பற்றி எழுதியதை போன்று..best among the worst) தவிர வோட்டு போட மாட்டேன் என்று கூறுவது மிகவும் தவறு.
நீங்கள் இருக்கும் மைலாப்பூர் தென்சென்னை தொகுதி.தென்சென்னை தொகுதியில் சரத்பாபு என்ற ஒருவர் இந்த நாடளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறார் , இவர் யார் என்றால் IIM-இல் MBA படித்துவிட்டு மிகப்பெரிய MNC வேலைகளை விட்டுவிட்டு சொந்தமாக உணவு தயாரித்து விநியோகிக்கும் தொழிலை செய்கிறார், அதனை வெற்றிகரமாகவும் செய்கிறார், இவர் மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்து வாழ்ந்து வந்தவர்.தென்சென்னை தொகுதியில் நிற்கும்
சரத்பாபு பற்றி மேலும் அறிய,
http://idlyvadai.blogspot.com/2009/04/2009_15.html
http://sarathbabu.co.in/in/
எனக்கு தெரிந்து இவர் ஒருவர், தெரியாமல் எத்தனையோ பேர் ராமர் பாலத்தின் அணிலை போல செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இவர் எந்த நம்பிக்கையில் தேர்தலில் நிற்கிறார்? நம்மை போன்றவர்களை நம்பித்தான். இந்த நேரத்தில் இவர் தேர்தலில்
ஜெயிப்பார் என சொல்வது ஒரு joke ஆனால் நம்பிக்கை இழக்காமல் இவரை இவரை போன்றவர்களை ஆதரிக்க வேண்டும், இன்று, இல்லாவிட்டால் நாளை இல்லை மற்றொரு நாள் விடிந்தே தீரும், ஆனால் அதற்கு நாம் எல்லோரும் வோட்டு போட வேண்டும்.
நீங்கள் ஒரு நக்சலைடாக இருக்க கூடாது, என் என்றால், என்னை பொறுத்தவரை தனி மனித உரிமைகள்தான் எல்லாவற்றிலும் முக்கியமானது , கம்யுனிசத்தில் அதற்கான உத்தரவாதம் மிகவும் குறைவு, நீங்கள் சொல்லும் நக்சல்பாரிகள் ஆட்சி செய்தால் charuonline-இல் நீங்கள் எழுதுவதை கூட எழுத முடியுமா என்பதே சந்தேகம்தான்.
ஆகையால் 49-O பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுங்கள் தயவு செய்து ignore செய்துவிடாதீர்கள். அதே போல் அதை விட மேலான ஒரு tool இருந்தால் அதனை பற்றி எழுதுங்கள், இதனால் மாற்றம் வந்துவிடுமா என்பதை பற்றியெல்லாம் நினைக்காமல் எழுதுங்கள்.ஏன் என்றால் எந்த நிலையிலும் நம்பிக்கையை கைவிடக்கூடாது, போராட்டத்தை கைவிட கூடாது.
இந்தியாவில் உள்ள Human Rights activist-கள், RTI-activits-கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ , அதே நம்பிக்கையில் நாமும் இருப்போம்.
Showing posts with label 49-O. Show all posts
Showing posts with label 49-O. Show all posts
Sunday, 19 April 2009
Sunday, 5 April 2009
49-O
ஞானியின் ஒ பக்கங்களை பல பேர் அறிவார்கள். பார்லிமென்ட் தேர்தல் அருகில் வர ஞானி 'யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' எனத்தெரிவிக்கும் '49-O' என்ற option-ஐ பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்.
ஆனால் இதனை பயன்படுத்தினால் என்ன ஆகும் , என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தி தெரியலாம் அதாவது இத்தனை பேர் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று , அது அவர்களுக்கு நன்றாகாவே தெரியும் இப்போது கூட.
எனவே 49-O என்பது எதிர்ப்பை காண்பிக்கும் சரியான வழி அல்ல. நமது ஓட்டுக்கள் எல்லாம் செல்லாத ஒட்டுக்களாகும் கதி தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை, அதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியவே முடியாது.
மேலும், ஞானி எழுதுவது அச்சு ஊடகத்தில் (printing media), நமக்கே தெரியும் ஓட்டுப்போடும் பெரும்பான்மையான மக்கள் வாசிப்பவர்கள் அல்ல என்று, எனவே அவர்களுக்கு இந்த 49-O கொஞ்சம் ஓவர்.
எனவே இப்போது தேவை,
1. படித்தவர் எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும்.
2. இருப்பதிலேயே நல்லவர்களாக பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.
இரண்டுமே முக்கியம். முதல் விஷயமே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் இரண்டாவது விஷயம் பற்றி யோசிக்கும்போது நமக்கு பல கேள்விகள் வரலாம் 'யார் அந்த 'இருப்பதிலேயே' நல்லவர் என்று.
ஒருவர் தன் மகளையோ மகனையோ கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை பேரை விசாரிக்கிறார்கள், ஒரு வேலை வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், ஒரு வீடு கட்டுவதற்கு, வீட்டை ரிப்பேர் செய்வதற்கு, ஒரு செல் போன் வாங்குவதற்கு, வெளியூரில் தங்குவதற்கு, என பல தகவல் பரிமாற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம் தொகுதியில் இருக்கும் இருப்பதிலேயே நல்லவர் (அவர் சுயேட்சையாக இருந்தாலும்) எவர் என விசாரித்து , பத்திரிக்கைகளை படித்து, போஸ்டர்களை பார்த்து , தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து அவருக்கு ஓட்டுப்போட வேண்டும்.
அந்த நல்ல வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் ஒரு பார்லிமென்ட் தொகுதியில் 25,000 வோட்டுகள் வாங்கட்டும் (அதே தொகுதியில் வெற்றிபெற்றவர் 3 லட்சம் வோட்டுக்கள் வாங்கினால்!), இதே போல் முதலில் படித்தவர் அதிகம் கொண்ட தொகுதிகளிலாவது சுயேச்சை வேட்பாளர் குறிப்பிடத்தகுந்த வோட்டுக்களை வாங்கட்டும், அப்போது தெரியும் மாற்றம், அரசியல்வாதிகளுக்கு இந்த 25,000 வோட்டுகள் முக்கியம் அதனை பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதனை பயன்படுத்தி மேலும் பல நல்ல வேட்பாளர்கள் காலத்தில் குதிக்க வேண்டும், இப்போதுள்ள பா.மா.க மாதிரி அணி மாறியாவது இந்த 'நல்ல வேட்பாளர்கள்' பதிவிகளை கைப்பற்ற வேண்டும்.
இதுவே மற்றம் பெற ஒரே வழி.
ஆனால் இதனை பயன்படுத்தினால் என்ன ஆகும் , என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தி தெரியலாம் அதாவது இத்தனை பேர் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று , அது அவர்களுக்கு நன்றாகாவே தெரியும் இப்போது கூட.
எனவே 49-O என்பது எதிர்ப்பை காண்பிக்கும் சரியான வழி அல்ல. நமது ஓட்டுக்கள் எல்லாம் செல்லாத ஒட்டுக்களாகும் கதி தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை, அதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியவே முடியாது.
மேலும், ஞானி எழுதுவது அச்சு ஊடகத்தில் (printing media), நமக்கே தெரியும் ஓட்டுப்போடும் பெரும்பான்மையான மக்கள் வாசிப்பவர்கள் அல்ல என்று, எனவே அவர்களுக்கு இந்த 49-O கொஞ்சம் ஓவர்.
எனவே இப்போது தேவை,
1. படித்தவர் எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும்.
2. இருப்பதிலேயே நல்லவர்களாக பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.
இரண்டுமே முக்கியம். முதல் விஷயமே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் இரண்டாவது விஷயம் பற்றி யோசிக்கும்போது நமக்கு பல கேள்விகள் வரலாம் 'யார் அந்த 'இருப்பதிலேயே' நல்லவர் என்று.
ஒருவர் தன் மகளையோ மகனையோ கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை பேரை விசாரிக்கிறார்கள், ஒரு வேலை வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், ஒரு வீடு கட்டுவதற்கு, வீட்டை ரிப்பேர் செய்வதற்கு, ஒரு செல் போன் வாங்குவதற்கு, வெளியூரில் தங்குவதற்கு, என பல தகவல் பரிமாற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம் தொகுதியில் இருக்கும் இருப்பதிலேயே நல்லவர் (அவர் சுயேட்சையாக இருந்தாலும்) எவர் என விசாரித்து , பத்திரிக்கைகளை படித்து, போஸ்டர்களை பார்த்து , தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து அவருக்கு ஓட்டுப்போட வேண்டும்.
அந்த நல்ல வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் ஒரு பார்லிமென்ட் தொகுதியில் 25,000 வோட்டுகள் வாங்கட்டும் (அதே தொகுதியில் வெற்றிபெற்றவர் 3 லட்சம் வோட்டுக்கள் வாங்கினால்!), இதே போல் முதலில் படித்தவர் அதிகம் கொண்ட தொகுதிகளிலாவது சுயேச்சை வேட்பாளர் குறிப்பிடத்தகுந்த வோட்டுக்களை வாங்கட்டும், அப்போது தெரியும் மாற்றம், அரசியல்வாதிகளுக்கு இந்த 25,000 வோட்டுகள் முக்கியம் அதனை பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதனை பயன்படுத்தி மேலும் பல நல்ல வேட்பாளர்கள் காலத்தில் குதிக்க வேண்டும், இப்போதுள்ள பா.மா.க மாதிரி அணி மாறியாவது இந்த 'நல்ல வேட்பாளர்கள்' பதிவிகளை கைப்பற்ற வேண்டும்.
இதுவே மற்றம் பெற ஒரே வழி.
Labels:
49-O,
Election,
Tamilnadu Politics,
ஓட்டு,
தேர்தல்
Subscribe to:
Posts (Atom)