Friday 7 March 2008

தினமலர் செய்தி



சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேற்று காலை திடீரென்று, சென்னை அரசு பொது மருத்துவமனை வந்தார்.

மருத்துவமனை சரிவர பராமரிக்கப்படாததைப் பார்த்து, கடும் கோபம் அடைந்து, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மாறு வேடத்தில் சென்று சோதனை செய்யப் போகிறேன்' என்று அறிவித்தார்.

அரசு பொது மருத்துவமனைக்கு திடீர் விசிட் செய்த அமைச்சர் பன்னீர்செல்வம், சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட கட்டண வார்டுகளை பார்வையிட்டார். நரம்பியல் துறை கட்டடத்திற்கு சென்றார். அங்கு ஐந்து மற்றும் ஆறாவது மாடிகளில் மின் விசிறிகள் ஓடாமல் இருப்பதை பார்த்து, அதிகாரிகளிடம் கேட்டார். பொதுப்பணித் துறை யினர் சரி செய்ய வேண்டும்' என்று, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுப்பணித் துறை அதிகாரிகளை அழைத்து, அமைச்சர் கேட்ட போது,மின் விசிறி போடுவது மட்டும் தான் எங்கள் வேலை; பராமரிப்பை, மருத்துவ மனையின் மின்சாரத் துறையினர் தான் கவனிக்க வேண்டும்' என்று கூறினர். அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த அமைச்சர், எல்லை விவகாரத்தை எல்லாம் வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்; எனக்கு இப்போது மின்விசிறி ஓட வேண்டும்; இல்லையேல் நீங்கள் ஓடி விடுவீர்கள்' என்று எச்சரித்தார்.

பின்னர் அமைச்சர், மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை பார்த்து, இதுபோல, உங்கள் வீட்டில் சமைப்பீர்களா?' என்று ஊழியர்களை கடுமையாக எச்சரித்தார். அதோடு,நோயாளிகளுக்கு மதிய நேரத்தில் வழங்க தயாரிக்கப்பட்ட, உணவு வகைகளை முகர்ந்து பார்த்துவிட்டு, முகம் சுளித்தார்.

உணவு தயாரிக்க உபயோகப்படுத்தும் அரிசி, பருப்பு வகைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர், `நீங்கள் சமைக்கும் உணவை சாப்பிட்டால், நோயாளி மேலும் நோயாளி ஆகிவிடுவார் போல் இருக்கே' என்று கூறி, உணவு பொருள் வழங்கும் கான்ட்ராக்டை உடனடியாக ரத்து செய்து, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை, உணவு பொருள் வழங்கும் துறை மூலம் வழங்க, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதோடு, சமையல் கூடத்தில் பணி புரியும் டயட்டீஷியனுக்கு, நோட்டீஸ் கொடுக்கும்படி உத்தரவிட்டார் அமைச்சர்.பின்னர் நிருபர்களிடம், மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். இனி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நானே மாறுவேடத்தில் சென்று சோதனை செய்வேன்' என்றார்.இதை கேட்ட மருத்துவர்களும், அதிகாரிகளும் கலவர முகத்துடன் காணப்பட்டனர்.

Wednesday 5 March 2008

இன்று சில எண்ணங்கள்

1. Need to write more on sujatha!சுஜாதாவின் அஞ்சலி கூட்டம்,அதன் உரைகள் மனதை நெகழ்த்தியது.ஆனால் சாருவின் பேச்சு வியக்க வைத்தது,கனிமொழிக்காக கொள்கை தளர்ந்ததோ?

2. ஜெயமோகனனின் எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரை உண்மையிலேயே சிரிக்க வைத்தது! இதற்கு இத்தனை எதிர்ப்பா?

3. இந்திய மக்கள்தொகை பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுத வேண்டும் என தோனுது, பார்ப்போம்!

Monday 3 March 2008

சுஜாதா சில நினைவுகள்

மிக நிச்சயமாக தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளத்தை இழந்து இருக்கிறோம்.
புத்தகங்கள் மூலமே ஸ்பரிசித்தவர், கண்ணிர் விட வைத்துவிட்டார்.கண்ணீர் விட்டவன் நான் மட்டுமில்லை என இனையத்தை துழாவினால் தெரிகிறது.


I started reading sujatha during 92-93, if I guess correct, I read "En Eniya Iyandhira", a science fiction novel as a book (not during aananda vigadan தொடர்).

How to say it? வாசகனை புத்தகத்தை கீழே வைக்கா வண்ணம் பார்துக்கொள்வதில் நிகரற்றவர்.

After thinking about his whole career, I can say he is an optimist.

காதலையும்,வறுமையையும் மற்ற ஆண் பெண் உறவுகளை மட்டுமே விவரித்து கொண்டிருந்த காலத்தில் அதை தாண்டி அறிவியலை பார்க்க வைத்தார்.காதலர்களையும் மிக இயல்பாக பழக வைத்தார்!

He had a very good interest over science and new inventions and passion over implementing in his writing.

நித்தம் நித்தம் உண்மையை புதுமையை தேடியதாலோ,அதை கண்டதாலொ, என்னவோ அவர் கர்வம் கொள்ளவில்லை, புறம் பேசவில்லை மற்ற எழுத்தாளர்களுடன் சண்டை போடவில்லை.

அவரிடம் கவர்ந்த விஷயங்களில் ஒன்று அவர் ஒரு புதிய தளத்தை காண்பித்தார், உரையாடல்களில் பிரமிக்க வைத்தார்.நாயகனை,IIT B.Tech;MBA in IIM Ahmedabad;Chess champion;Karate Black Belt என்று சொல்லி கிறுகிறுக்க வைத்தார்.

As kamal said, he did compramise both in his profession as well as writings.
We should notice on what period he started writing, he overcome all the nasty politics of tamilnadu and showed a new world to youth.

A world, where no emotional or political correctness are discussed, a casual world, a world where many things were to be explored.

One more thing, I would like to tell is, as far as I know, this is the first time an author's death has been so widely covered and got respect from politics leaders.

அவர் எழுத்தில் அகவயமான தேடல் இல்லை என்ற ஒரு குற்றசாட்டு,என்னை பொறுத்த மட்டில் அது எல்லோருடைய எழுத்திலும் வரவேண்டிய அவசியமில்லை. Variety is the spiece of life!

இவ்விடத்தில் ஒரு பழந்தமிழ் பாடலின் வரியை நிணைவுறுகிறேண்.."விணையே ஆடவர்கு உயிரெ"..ஆம் சுஜாதா அப்படித்தான் வாழ்ந்து இருக்கின்றார்.சுஜாதா விதைத்த விதைகள் அணேகம்..சிஷ்ய பரம்பரை உருவாகி தொடரும் என நம்புவோம்
.

அவருக்கு வந்த இறுதி மரியாதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிக புதியது..புதுமையை பழகுவோம்!

இன துவேஷத்தை, அரசியலை, பொறாமையை மேதமையுடன் கூடிய கடும் உழைப்பு வெற்றி கொண்டு இருக்கின்றது.

இழப்பையும் மீறி,களிப்பேருவகைகொள்ளும் நேரமிது.கொள்வோம்!