Saturday 12 July 2008

தசாவதாரத்தின் கதை

தசாவதாரத்தின் கதை புரியவில்லை என்று பல பேர் சொல்கிறார்கள், எனவே அவர்களுக்காகவும் அப்படி சொல்லாத மற்றவர்காகவும் தசாவதாரத்தின் climax மட்டும் இங்கே கதையாக தருகிறேன், அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்,

கமல் அந்த பயோ ஆயுதத்தை எடுத்து கொண்டு கடலில் போட முயற்சிக்கும்போது கமல் வந்துவிடுகிறார்.அந்த ஆயுதத்தை எடுத்து போக கமல் முயற்சிக்கும்போது அதை கமலால் தடுக்க முடியவில்லை இந்த நிலையில் தன் தங்கையை கொன்றவர் கமலில்லை என்ற உண்மை கமலுக்கு தெரிய கமலும் அங்கு வருகிறார், உடனே கமலுக்கும் கமலுக்கும் சண்டை ஆரம்பிக்கிறது கமல் "you know hiroshima?" என்று கேட்க அதற்க்கு கமல் "you know pearl harbour?" என்று கேட்கிறார், இருவருக்கும் சண்டை மூள்கிறது அதை கமல் வேடிக்கை பார்க்கிறார். அப்போது ஹெலிகாப்டரில் கமல் வருகிறார் அவர் சண்டை போடும் கமலிடம் சரணடைந்து விடுமாறு கேட்கிறார் , அதை கவனிக்காது சண்டை போடும் கமலுக்கு கமல் எச்சரிக்கை விடுக்கிறார்.

அப்போது கமல் சண்டையில் ஜெயித்து விடுகிறார்.தோற்றுப்போன கமல் அந்த vial-இல் இருக்கும் மருந்தை குடித்து விடுகிறார், அதனை கமல் கமல் மற்றும் கமல் ஆகியோர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர், கமலின் முகம் அழுக தொடங்குகிறது , அப்போது சுனாமி வர கமலும் கமலும் பயந்து ஒரு படகுக்குள் ஏறி விடுகின்றனர், கமல் ஹெலிகாப்டரில் தப்பித்து செல்கிறார்,கமல் மேல் இந்தியக்கொடி இறங்கி கமல் இறந்து விடுகிறார்,


இதற்கிடையே குழந்தைகளை காப்பற்றும் கமல் சுனாமியில் இறந்து விடுகிறார், அதனை பார்த்து கமல் அழுகிறார், அதனை கமல் வேதனை போங்க பார்க்கிறார்.

இவ்வளுவுதாங்க climax. முழு படத்தோட கதையை கூடிய சீக்கிரம் சொல்றேன். bye bye...