Thursday 20 January 2011

நாம் சமுதாய குடிமகனா(ளா)?

சமீப காலமாக திரு ஜெயமோகன் அவர்களின் எழுத்தை படித்த பின் வந்த சிந்தனை இது.அவரது கூற்றுப்படி நம்மை சுற்றி உள்ளவர்கள் (உங்களையும், என்னையும் சேர்த்துதான்) நவீன குடிமக்களாக ஆகவில்லை, இன்றும் மனதளவில்  சுமார் 100 வருடங்கள் பின்தங்கியே இருக்கின்றனர். இது எனக்கு சரியாகவே படுகிறது , இந்த பெங்களூரில் கார் ஓட்டினால் இந்த எண்ணம் சந்தேகமில்லாமல் ஊர்ஜிதமாகிறது.

நான் தகவல் தொழில்நுட்பத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு அறிமுகமான அமெரிக்க ஆங்கில வார்த்தை "community". இதற்கு அர்த்தமாக In human communities, intent, belief, resources,preferences, needs, risks, and a number of other conditions may be present and common, affecting the identity of the participants and their degree of cohesiveness. என்று கூறுகிறது Wikipedia.

மேலும் சுருக்கமாக, A community has been defined as a group of interacting people living in a common location என்று கூறுகிறது Wikipedia.

ஆனால் நாம் community என்பதற்கு ஒரு சிறப்பான பொருள் வைத்து இருக்கிறோம், அது நம்மை சுற்றி உள்ள மனிதர்கள் அல்ல, நாம் வாழும் இடம் அல்ல, சில பல நூற்றாண்டுகளுக்கு முன் பிரிந்த ஒரு clan என்பதே நாம் நமது community என்பதற்கான அர்த்தமாக கொண்டுள்ளோம்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம், என்னை பொறுத்தவரை wikipedia-வின் தரும் விளக்கம் சில நூற்றண்டுகளுக்கு முன்பு இந்த சாதிகளுக்கு பொருந்தி வந்து இருக்கிறது.ஆனால் இந்த 21-ஆம் நூற்றாண்டில் அல்ல!

இந்த நிலை மாறாதவரை ஊழலை, பொது சுகாதாரத்தை , மனித உரிமையை, உண்மையான ஜனநாயகத்தை, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை, மற்றும் பல பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாது.

இந்த மாற்றத்தை எப்படி கொண்டு வருவது? இது சாதாரண மாற்றம் அல்ல, இது மிக மிக உறுதியான சாதியத்தையும் , படித்தவர் படிக்காதவர் வித்தியாசத்தையும் , இன்னும் பல புரையோடி போன விஷயங்களை மாற்ற வல்லது, இதற்கு வரும் தலைமுறையினரை ஒரு 'குடிமகனாக' , நம் நாட்டின் அங்கத்தினனாக அதன் நிர்வாக இயந்திரத்தின் சிக்கல்கள் தெரிந்தவனாக , ஒரு நவீன கால கட்ட குடிமகனின் கடமையையும் , உரிமையையும் அறிந்தவனாக உருவாக்க வேண்டும். அதற்கு கல்லூரி பாட திட்டத்தில் குடிமையியலை (civics) ஒரு பாடமாக வைக்க வேண்டியது அவசியம்.

இப்போது இது பள்ளிக்கூடங்களில் பாடமாக இருக்கிறது. அதாவது பத்தாவது வரைக்கும். இது உச்ச நீதிமன்றம் / இது நாடாளுமன்றம் என்ற அளவில். ஆனால் அதை கல்லூரி காலங்களில் மாணவர்களுக்கு குடுத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் பயனை தரும்.

நாம் நம் கல்லூரிகளில் ஏன் குடிமையியலை (civics) ஒரு கட்டாய பாடமாக வைக்க கூடாது? இன்று கல்லூரி முடித்து வரும் 100-க்கு 5 மாணவர் கூட ஒரு குடிமகனாக , நவீன சமூகத்தின் அங்கமாக வாழ தகுதி கொண்டவர் இல்லை என்று துணிந்து கூறலாம். நான் சொல்வது பணம் சம்பாதிக்கும் திறமையையோ , பிற கருவிகளான வாகனம் , வங்கி , அரசு இயந்திரம் போன்றவற்றை உபயோகபடுத்துவதிலோ இல்லை , மாறாக தன்னுடைய இனம், மொழி, வட்டாரத்தை தன்னுடைய அடையாளமாக கொள்ளாமல் தான் வாழும் ஊரின், மாநிலத்தின், மாவட்டத்தின், தேசத்தின் ஒரு அங்கத்தினனாக தன்னை அடையாளம் கண்டு கொள்வதில் இருந்து ஆரம்பிக்கறது.

தமிழகத்தின் Elementary Education ஆன B.E , மற்றும்  M.B.B.S, B.Com, B.Sc, B.A, B.B.A என்று இருக்கும் எல்லாம் மாணவர்களும் இதனை படிக்க வேண்டும் , அதன் மூலமே , அவன் / அவள் கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது அரசு எதிர்பார்க்கும் குடிமகனாக வருவார்கள், இல்லை என்றால் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகத்தான் வருவார்கள். இதில் B.L படிப்பவர்கள் இப்போதே அதனை படிக்கிறார்கள்.

அந்த பாடதிட்டத்தில் குடிமகனது கடமை, உரிமை, பொது சொத்து பராமரிப்பு, அரசு நிர்வாக இயந்திரத்தின் பாதைகள்,அடிப்படை சட்ட அறிவு , ஜனநாயகம் குடிமக்களுக்கு குடுக்கும் உரிமைகள் என்று அனைத்தும் இருக்க வேண்டும், மேலும் தனி மனித உரிமை , தனி மனித விடுதலை, ஜாதி பற்றிய விழிப்புணர்வு , Consumer Rights , மனித உரிமை மீறல் பற்றிய case study, குறிப்பாக Right to Information Act (RTI)/ அது போன்ற சட்டங்கள்  போன்றவை இடம் பெற வேண்டும். நம்மை சுற்றி media கட்டும் பிம்பம் , mass media-வை எப்படி அணுகுவது போன்றவையும் பாடமாக இருக்கலாம்.இந்திய ஏன்  ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தது? அது ஏன் கம்யூனிஸ்ட் நாடாக இல்லை , நக்சலைட்டுகள்  என்றால் யார், அவர்கள் ஏன் உருவானார்கள்? நாம் ஏன் சோசியலிசம் என்ற கொள்கையில் இருந்து liberalization முறைக்கு மாறினோம், அதற்கு என்ன காரணம்?  அதற்கான எதிர்ப்பு ஏன் வருகிறது? ஆதரவு ஏன்? இன்றைய சூழ்நிலையில் ஒரு அரசுக்கான கடமைகள் என்ன?இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? மற்ற நாடுகளில் ஜாதி உள்ளதா? ஜாதியின் நன்மை தீமை என்ன? ஒட்டு போடுவதின் நன்மை , நமது எம்.எல்.ஏ-வின் கடமை என்ன, எம்.பி.யின் கடமை என்ன? ஒரு தானியம்/உணவு பொருள் எப்படி விலை நிலத்தில் இருந்து நமது வாய்க்கு வருகிறது? இவற்றை பற்றிய ஒரு தெளிவான பார்வை கல்லூரி விட்டு வெளியே செல்லும் மாணவனுக்கு வரவேண்டும். மேலும் ஒரு மாணவனுக்கான உரிமை, கடமை பற்றியும் அவனுக்கு ஒரு புரிதல் வேண்டும்.

இது ஒரு optional paper-ஆக இருக்காமல் , 4/5 வருடம் படிக்கும் ஒரு compulsory paper-ஆக இருக்க வேண்டும். இதற்கான ஒரு real time project paper வைத்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்! இதன் மூலம் நிச்சயம் ஒரு சமூக மாற்றம் கொண்டு வர முடியும்.

Tuesday 18 January 2011

"பஞ்ச்" பாண்டி



செய்தி:
=======
வீர செயல்கள் புரிந்த குழந்தைகளுக்கு தேசிய விருதுகளை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வழங்கினார்.

"பஞ்ச்" பாண்டி:
==============
தைரியமா யோசிக்கிற/செயல்படற ஒருத்தர் கிட்டேந்து இந்த விருதை வாங்கியிருந்தா எங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கும்னு பசங்க நினைக்கறாங்க போல இருக்கு

Sunday 16 January 2011

வேளுக்குடி கிருஷ்ணன்,கிரேசி மோகன், கமல் ஹாசியம்

கலைஞர் தொலைகாட்சியில் "நான் கடவுள்" பார்த்துக்கொண்டே விளம்பர இடைவேளையில் பொதிகை அலைவரிசை வந்த போது வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் கிரேசி மோகனின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேர நிகழ்ச்சியின் கடைசி இருபது நிமிடங்களை தான் பார்த்தேன். வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஞானம் நாம் அறிந்தது தான் என்றாலும் பாமரர்களுக்கும் புரியும்படி அவர் கூறிய உலக அழிவை பற்றிய விளக்கம், பூர்வ ஜென்ம வினைகள் போன்றவை அற்புதம். கீழே உள்ள சுட்டியில் அந்த நிகழ்ச்சியை காணலாம்.
http://www.youtube.com/watch?v=fcIV2IegHtY&feature=mfu_in_order&list=உல்

மறுநாள் பொங்கலன்று ஜெயா டிவியில் "கமல் ஹாசியம்" நிகழ்ச்சியிலும் கிரேசி தான். கமலும் கிரேசி மோகனும் சிறப்பு விருந்தினர்களுடன் நகைச்சுவை பற்றி பேசினார்கள். சிறப்பு விருந்தினர்களாக சோ, மௌலி, "சித்ராலயா" கோபு, பாலச்சந்தர் ஆகியோர். மௌலி பேசியவை தான் நிகழ்ச்சியின் highlight. தன் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்த ஒரு காலகட்டத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கு மரண செய்தி தெரிவிக்க சிறுவனாக தான் சென்ற அனுபவங்களை அவர் விவரித்த விதம் கேட்டு வயிறு புண்ணாகி விட்டது.

சில நாட்களுக்கு முன் ரா. கி. ரங்கராஜன் அவர்களின் "ஹாஸ்யக் கதைகள்" புத்தகத்திற்கு கிரேசி மோகன் எழுதிய முன்னுரை படித்தேன். அதிலிருந்து சில பகுதிகள்.

எழுத்தாளர்களில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள் ஒரு 'ஆயிரங்காலத்துப் பயிர்..' நானோ நேற்று முளைத்த ஹாஸ்யகாரன். தன்னுடைய 'ஹாஸ்யக் கதைகளுக்கு' என்னை அவர் முன்னுரை எழுதச் சொன்னபோது, அதுவே எனக்கு ஒரு மிகப் பெரிய ஹாஸ்யமாகப் பட்டது. அதனால் என்ன இப்போ? சரித்திரக் கதைகளில் மன்னர் வருவதற்கு முன், கட்டியக்காரன் வருவதில்லையா..? அவனிடம் என்ன பாண்டித்தியமா எதிர்ப்பார்க்கிறோம்? 'பராக் பராக்' சொல்லத் தெரிந்தால் போதாதா, என்று என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்.

ஹாஸ்யம் ஜோஸ்யம் இரண்டுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை உண்டு..இரண்டும் எப்போது பலிக்கும் அல்லது லபிக்கும் என்று சொல்ல முடியாது..ஹாஸ்ய புத்தகத்தை படிப்பது முதலிரவை போல.. "சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை..."

கலைஞர்களின் காலம்.

ஒரு கலைஞனின் பொற்காலம் எப்போது இருக்கும்? சிலருக்கு அவர்கள் துறைக்கு வந்த ஆரம்ப காலமாக இருக்கலாம் , சிலருக்கு வந்து சில பல வருடங்கள் கழித்து இருக்கலாம் , சிலருக்கு மிக வயதான பிறகு அமையலாம். ஆனால் எந்த ஒரு கலைஞனுக்கும் ஆரம்பம் முதல் இறுதி வரை பொற்காலமாக , அவனது அவளது சிருஷ்டி தன்மை உச்சமாக இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது ஒரு வரம், அது கோடி கலைஞர்களில் ஒருவருக்கே அமையும்.

இங்கே தமிழனான நான் மற்ற கலைகளான நடனம், வாய்ப்பாட்டு, வாத்திய இசை , மேற்கத்திய இசை , சாஸ்திரிய சங்கீதம் தற்காப்பு கலைகள், ஓவியம் , சிற்பம் , சிந்தனையை தூண்டும் பேச்சு,இலக்கியம், கவிதை , எழுத்து,நாடகம்  போன்றவற்றை எழுத வாய்ப்பு மிகவும் குறைவு என்று இதை படிக்கும் பிற தமிழர்களான நீங்கள் அறீவிர்கள்.

இப்போது நான் சொல்ல வருவது தமிழ் சினிமா புள்ளிகள் பற்றிதான், அதிலும் சமீப காலமாக மணிரத்தினம், கமல் போல சில பல வருடங்கள் முன்பு பெரும் கலைஞர்களாக மதிக்கப்பட்டு வந்தவர்களின் படம் இப்போது வந்த சுவடே தெரியாமல் போவதை பார்க்கும்போதுதான் இதை பற்றி நினைத்து பார்த்தேன்!

தமிழில் (இது எந்த மொழிக்கும் பொருந்தும்) இது வரை எந்த பெரும் கலைஞனும் 15 ஆண்டுகளுக்கு மேல் ப்ராகசித்ததில்லை என்று துணிந்து கூறலாம்.

பாலசந்தர்
பாரதிராஜா
பாலு மகேந்திரா
மகேந்திரன்
சிவாஜி கணேசன்
கமல் ஹாசன்

போன்றவர்கள் உதாரணம்!

ஒரு காலத்தில் தென்னாட்டின் சத்யஜித் ரே என்று சொல்லுமளவு புகழ் பெற்றிருந்த பாலச்சந்தரின் கடைசி படமான பொய் - படத்தை வாங்க ஆளில்லை.

பாரதிராஜா கடைசி இரண்டு வெற்றி படங்கள் என்ன தெரியுமா (கிழக்கு சீமையிலே மற்றும் ....)

பாலு மகேந்திரா கடைசியாக கொடி நாட்டிய படம் மறுபடியும்.

சிவாஜி கணேசன் பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம், தங்க பதக்கம் (1975) படத்திற்கு பிறகு வெளிவந்த அவரது சுமார் 100 படங்களில் பார்க்க முடிவது சுமார் 3 படங்கள் மட்டுமே ! மற்றவற்றில் பெரும் தொப்பையுடன் அதை மறைக்க ஒரு கோட் அணிந்து மக்களை சித்ரவதை படுத்தி இருப்பார்.

இப்போது மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசனும் அந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார்கள். இப்போது கமல் மற்றும் மணிரத்தினம் படத்தை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு இந்த செய்தி. நீங்கள் இவர்களை விமர்சனம் செய்வதை விட்டு விடலாம் , ஏனெனில் நாம் அவர்களின் கடந்த கால சாதனைகளுக்கு செய்யும் மரியாதை நிகழ்கால மவுனம் மட்டுமே.

இதையும் மீறி இவர்கள் நாளைக்கு சிறந்த படங்களை அளிக்கலாம் , ஆனால் அதற்கான probability மிகவும் குறைவு. (சிவாஜிக்கு ஒரு முதல் மரியாதை அமைந்த மாதிரி)

இப்போது opposite camp இல் இருக்கும் எம்.ஜி.ஆர் , ரஜினி போன்றோரை பார்ப்போம்! அவர்கள் கடைசி வரை super hits குடுப்பார்கள் , ஏனெனில் அவர்களின் பதவி ஒரு கட்டத்திற்கு மேல் பெரும் சிருஷ்டிகரதன்மை தேவை படாத பதவி. மேலும் அவர்கள் முதலில் இருந்தே மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையே தன் வெற்றிக்கு காரணமாக வைத்து இருப்பவர்கள் அதன் மூலம் அவர்களின் பிம்பம் சினிமாவை தாண்டிய பிம்பமாகவே இருக்கிறது. இதனால் இந்த 'கடைசி கட்ட' தோல்விகளில் இருந்து அவர்கள் லேசாக தப்பிப்பார்கள்.

கவுண்டமணி Vs சாரு

சமீபத்திய சாரு பதிவு (http://charuonline.com/blog/?p=1697) படிக்கும்போது கீழே குடுக்கபட்டுள்ள வீடியோ ஏன் நினைவுக்கு வருகிறது என்றே தெரியவில்லை  ..