Friday 28 May 2010

இதுதான்டா நியூசு

சென்னை ஏர்போர்ட்டில் நமீதாவுக்கு முன்னுரிமை கொடுத்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.

பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை சைகை மூலம் அருகில் அழைத்து, ‘நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’ என்று கேட்டார். உடனே அந்த பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு நடிகை நமீதாவை அழைத்து சென்றார். பெண் அதிகாரிகள், நமிதாவை சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பினர். இதை பார்த்த மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். “நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது?’’ என்று வாக்குவாதம் செய்தனர்.

உடனே “இந்த பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம். இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று பாதுகாப்பு வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நன்றி: தினமலர்


இதுல நமக்கென்ன வருத்தம்னா,அந்த பாதுகாப்பு படை வீரரையே விட்டு நமிதாவை சோதனை போட சொல்லியிருக்கலாம். மற்ற பயணிகள் கிட்ட வாங்கின திட்டுக்கு ஒரு மனத் திருப்தியாவது இருந்திருக்கும்.

Thursday 27 May 2010

அசத்தும் ஆந்திரா

IIT-யில் முதல் பத்து ராங்கில் ஏழு பேர் தெலுகுவாடுகள், இப்போது IIT-yil சேரும் நான்கில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர். எப்படி சாதிக்கிறார்கள் மனவாடுகள்? ஆனாலும் , SAP/ABAP கோர்சை குடிசை தொழில் ஆக்கியோர் என்பதால் முழு மனதோடு பாராட்டுவதற்கு தயக்கமாக இருக்கிறது, என்றாலும் சாதனை சாதனைதான். +2-வில் முட்டி மோதும் தமிழ் மாணவர்கள் IIT சேர முயற்சித்தால் , +2 மார்க் குறைந்து எங்கே சாதாரண BE கூட சேர முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கமே காரணம் என்று நினைக்கிறேன்.


Monday 24 May 2010

கோலிவுட் டு பாலிவுட்



நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து தமிழ் திரையுலகிற்கு ஹீரோயின்கள் இறக்குமதி நடக்கிறது. ஆனால், அங்கிருந்து வரும் ஹீரோக்கள் இங்கு பெரிய அளவில் பெயர் பெற்றனர் என்று சொல்ல முடியாது. அதே நிலை தான் இங்கிருந்து அங்கு செல்லும் ஹீரோக்களுக்கும். ஹேமமாலினி, ஸ்ரீதேவி, தபு என்று சில நடிகைகள் தெற்கில் இருந்து சென்று அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அசின் "One film wonder". அவரை இந்த பட்டியலில் இப்போது சேர்க்க முடியாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். த்ரிஷா கூட தற்போது பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ப்ரியதர்ஷன் இயக்கத்தில் "Khatta Meeta" என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் பாலிவுட்டில் வெற்றி பெறுகிறாரா என்பதையும் பார்ப்போம்.

ஹீரோக்களை பொறுத்த வரை கமல், அரவிந்த்சாமி என்று நிறைய பேர் பாலிவுட்டில் தங்களை நிலை நாட்டிக்கொள்ள முயற்சித்தனர் ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை. ரஜினி கூட சில பாலிவுட் படங்களில் நடித்தார். அந்த வரிசையில் இப்போது சூர்யா. சூர்யா மும்பையில் நுழைய முயற்சிகள் எடுக்கவில்லை. ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கம் "ரத்த சரித்திரம்" என்கிற படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் எடுக்கப்படுகிறது. விவேக் ஓபராய் கதாநாயகனாக நடிக்க சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் பெரிய ரௌடிகளாக இருந்த பரிதள ரவி மற்றும் மட்டலசெருவு சூரி பற்றிய கதை இது. இதில் ரவி வேடத்தை விவேக் ஓபராயும் சூரி பாத்திரத்தில் சூர்யாவும் நடிக்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ரவியை கொன்று விட்டு ஜெயிலுக்கு சென்ற சூரி சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலையானார். மறைந்த ராஜசேகர ரெட்டி அவர்கள் குடும்பத்திற்கு கூட இந்த கொலையில் தொடர்பிருந்தது என்று கூறப்படுகிறது. இதே படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் ஆக சத்ருகன் சின்ஹா நடிக்கிறார்.

சூர்யாவின் நடிப்பை ராம் கோபால் வர்மா தனது வலைமனையில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். Mr.Eyes, Mr.Body என்று ஏகத்திற்கு சூர்யாவை வர்ணித்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. கடும் உழைப்பால் இத்தனை தூரம் வந்துள்ள சூர்யா பாலிவுட்டிலும் வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.