Thursday 1 January 2015

இந்தியத் தத்துவம்

நண்பர் ஒருவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் "Indian Philosophy" புத்தகம் இரண்டு பாகங்களையும் ஆறு மாதம் முன்பு பரிசளித்தார். நேற்று தான் முதல் பாகத்தை படிக்கத் துவங்கினேன். அற்புதமான ஆங்கிலம். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆசிரியர் நாள் தவிர ஒரு போதிலும் நாம் நினைப்பதில்லை. அவர் எவ்வளவு பெரிய மேதை என்பதை விக்கிபீடியா படித்து தெரிந்து கொண்டேன்.

புத்தகத்தின் முதல் சில பக்கங்களிலேயே எத்தனை ஐரோப்பியர்கள் இந்திய தத்துவத்தை ஆராய்ந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் பெயர்களையும் தருகிறார் ராதாகிருஷ்ணன். Monier Williams என்ற பெயரை பார்த்தவுடன் ஜெயமோகன் நினைவு வந்தது. வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவில் அவரை சிலாகித்து பேசினார் ஜெயமோகன்.முழு நூலையும் படித்து விட்டு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.