Sunday 17 April 2011

The White Tiger

2008 ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகாவின் "The White Tiger" படித்துக் கொண்டிருக்கிறேன். இது வரை படித்த பகுதிகள் முழுதும் இந்தியா மீதான தாக்குதல் தான். சில நாட்களுக்கு முன்பு தான் ஜெமோ தனது பதிவு ஒன்றில் காசியில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல என்று எழுதியிருந்தார். அதற்கு மாறாக கங்கை நோய்களின் மொத்த வடிவம் போன்ற வரிகள் இதில்.

இந்த புத்தகத்திற்கு எதற்காக புக்கர் பரிசு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. புக்கர் வென்ற மற்ற இந்தியர்களான அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், நைபால் போன்றவர்களும் அரவிந்த் போல "india bashing" செய்து தான் அதை வென்றார்களா
என்று தெரிந்து கொள்ள அவர்களையும் படிக்க வேண்டும்.படிக்க முடியாவிட்டாலும் ஜெமோவிற்கு ஒரு மின்னஞ்சல் எழுதியாவது கேட்க வேண்டும்