Sunday 3 February 2013

கமல் ....போதும்


 












சில வருடங்களாகவே கமலை பற்றி எதுவும் சிந்திப்பதில்லை என்று முடிவெடுத்து இருந்தேன், அதை மாற்றி விட்டது விஸ்வரூபம். இந்த படம் பற்றிய / தடை பற்றிய பதிவு அல்ல , முக்கியமாக கமலை சிலாகித்து / புகழ்ந்து எழுதும் பதிவும் இல்லை.

இப்போது கமலின் வாழ்வை பார்த்தல் (அதாவது பொதுவாக public தெரிந்த அளவில்)

-கமல் இரண்டு முறை திருமணம் செய்து , இரண்டு முறையும் விவாகரத்து செய்தவர். எனவே இப்போது மனைவி இல்லை .


-கௌதமி பற்றி இப்போது செய்தியில்லை, சேர்ந்து வாழ்கிறார்களா என்று தெரியவில்லை, விஸ்வரூப சர்ச்சையில் அவரை பார்க்கவே முடியவில்லை.


-இரண்டு பெண்கள், அதில் இரண்டாவது பெண் மும்பையில் இருக்கிறார் , முதல் பெண் பெரும்பாலும் ஹைதராபாத்தில் இருக்கிறார் (தெலுகு படங்களுக்காக).


-அண்ணன் சாரு ஹாசன் / அவர் மகள் சுஹாசினி / மணிரத்னம் போன்றவர்களுடன் அவ்வளவு நல்ல rapport கிடையாது.  நடுவில் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது.


-கமலின் வயது 58 .இனிமேல் அவரது கதாநாயக வாழ்வு maximum 2 வருடம்.


-கமல் நடிகர் சங்க கூட்டதை மதிப்பதே இல்லை, சமீபத்தில் நடந்த சேவை வரி பிரச்சினையில் அவர் வரவே இல்லை , வர முடியாததை பற்றி ஒரு அறிக்கையும் இல்லை. அரசியல் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் / போராட்டம் இருந்தால் மட்டுமே கலந்து கொள்கிறார்.


-நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போட வருவதே இல்லை.


-ஆக நடிகர் சங்க ஆதரவு இல்லை. [சில நடிகர்களின் தனிப்பட்ட ஆதரவு தவிர].


-இப்போது பெரும் பண நஷ்டம் , கையில் உள்ள வீடு கூட கடன்காரரிடம் போகப்போகிறது.



ஆக  வாழ்க்கை துணையில்லை , ஓய்ந்து சாய தோளில்லை , பணம் இல்லை , வயதில்லை , வெற்றி எங்கோ தூரத்தில் இருக்கிறது , 

பின்பு ஏன் இந்த ஓட்டம்? 
எதை நோக்கி? 
58 வயதில் 95 கோடியில் படமா? 
எந்த நம்பிக்கையில் 95 கோடியில் ஒரு படம்? ஓய்வு பெறும்  வயதில் எதற்கிந்த போராட்டம்?
யாரிடம் எதை நிரூபிக்க?
எதற்காக இஸ்லாத்தை வைத்து ஒரு சினிமா? அதில் சச்சரவுகள்?

உங்களையே  வருத்தி வருத்தி சில பயிற்சிகள் , தெளிவில்லாத, குழப்பமான output , அதை கிழித்து தொங்கவிட ஒரு கூட்டம் ...

எதற்கிந்த சுமை கமல்?


ஞானி கலைஞரை பார்த்து கேட்டதை , நான் கமலை பார்த்து கேட்கிறேன், தயவு செய்து மற்றவர்கள் உங்களை dismiss செய்யும் முன் ராஜினாமா செய்து விடுங்கள் , இனிமேல் உங்களால் ஒரு படம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை, அப்படி முடிந்தாலும் இன்னொரு சினிமா வேண்டாம், please.உங்களின் பொற்காலம் முடிந்து விட்டது.
 
இளையராஜா , சிவாஜி கணேசன் போன்றவர்களை பின்பற்ற வேண்டாம் , ஜெயகாந்தனை பார்த்தாலே போதும்.

உங்களுக்கு கவிதை,நடனம்,பாடல்,
ஓவியம்,இலக்கிய சிந்தனை,சங்கீத பயிற்சி, தமிழார்வம் , பிறமொழி அறிவு போன்றவை உண்டு , ஒரு நல்ல கலாச்சார ambassador ஆக இருக்க எல்லாவித தகுதியும் உண்டு.

You need rest. you need peace. If you want cinema, write books on cinema, take short films, take documentary films on tamil cinema, do some exhibhition with your paintings,start some film society...உங்களுக்கு சொல்லியா குடுக்க வேண்டும்..?


கடைசியாக  விஸ்வரூபம் பற்றி...

-கமல் இயக்கிய படங்களை வைத்து பார்த்தல் , விஸ்வரூபம் பற்றி என்னால் ஒன்றை கூற முடியும் [இன்னும் படம் பார்க்கவில்லை],
-அது நல்ல படமோ / கெட்ட படமோ /
-இஸ்லாமியர்களுக்கு எதிரான படமோ/ இல்லையோ
-அது வியாபார ரீதியாக ஓடுமோ / ஓடாதோ
ஆனால் நிச்சயமாக அது சுவாரஸ்யமான படமாக இருக்க முடியாது.

ஏன் எனில் கமலால் ஒரு great movie கூட குடுக்க முடியலாம் ஆனால் நிச்சயம் ஒரு interesting movie குடுக்க முடியாது.அவரின்  படிப்பும்  அதன் மூலம் அவரை ஆக்ரமிக்கும் information overflow-உம் அவரை intellectual arrogant ஆக்கி அவரின் படத்தை சுவாரஸ்யமில்லாமல் செய்யும்.அவர் நடித்து வெளி வந்த சுவாரஸ்யமான படங்கள் அவரின் கைவண்ணத்தில் உருவானவை இல்லை.


ஆக  இதுவும் அப்படியேதான் இருக்க போகிறது.  ஜெயலலிதா புண்ணியத்தில் மிக பிரமாண்டமான பப்ளிசிட்டி , எந்திரனுக்கு கலாநிதி மாறனின்/ஷங்கரின் /ரஜினியின்   money power/muscle power-இல் கிடைத்த விளம்பரத்தை  , இதில் கமல் வழக்கம் போல தன்னை வருத்தி /அழுது பெற்று இருக்கிறார்.