Sunday 27 April 2008

கர்நாடக தமிழர்-3

திராவிட இயக்கத்தினரின் மனோ நிலையை இங்கலிஷில் "Euphoria" என்று கூறுவார்கள்.இன்று சக்தி என்பது வாள்முனையில் அல்ல பணப்பெட்டியில் உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கு சந்தை தேவைப்படுகிறது, சந்தை எவ்வளவு பெரியதோ அவ்வளவு பணம். நாம் நம்முடைய வறட்டு ஜம்பத்தால், ஒரு போதையால் கற்பனையால் இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை கோட்டையை விட்டு விட்டோம்.

நான் ஒரு சமயம் தெலுங்கு சேனலில் news பார்க்க நேரிட்டது, அங்கே சட்டசபை நிகழ்ச்சிகளை காணும் போது முதல் அமைச்சரில் இருந்து MLA வரை எல்லோரும் தெலுங்கு பேசினர் நடுவே நடுவே english-உம் இருந்தது. அது ஆந்திராவில் ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை நடுத்தும் மக்கள் பேசும் மொழியாக இருந்தது.

அதை பார்த்த போதுதான் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் சாதாரண மக்களிடம் இருந்து விலகி உள்ளனர் என்பது தெரிந்தது.

கடந்த 40-50 வருடங்களில் செய்த இடைவிடாத திராவிட பிரச்சாரத்தின் விளைவே தமிழர் கர்நாடகாவில் வாங்கும் அடி.

வினை விதைத்தவன் வினையை அறுத்தே தீர வேண்டும்.

நம் தமிழ்நாட்டில் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் காது இருந்தும் செவிடறாய் இருக்கின்றனர்.

நான் சொல்லும் கருத்துக்கள் சில பெரியோர்களுக்கு தோன்றியே இருக்கும் ஆனால் அவை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு இங்கே ஒரு கொடூரமான கருத்து அடக்குமுறை உள்ளது.கர்நாடகாவில் இருக்கும் பல கற்றறிந்த தமிழர்களும் இந்த கருத்தினை பிரதிபலிப்பர்.

இங்கே இருக்கும் பல தீவிர தமிழ் அபிமானிகளுக்கு தமிழ்நாட்டை இலங்கையின் யாழ்ப்பாணம் போல ஆக்குவதில் மிகுந்த விருப்பம் உள்ளது.

இதே போல இந்தியாவின் வட கிழக்கிலும் நிலைமை உள்ளது, ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அங்கே உள்ளவர்களின் கோபம் நியாயமானது இங்கே உள்ளவர்களின் கோபம் அநியாயமானது.

தமிழர்களுக்கு மத்திய அமைச்சரவையில் மிகுந்த இடம் உள்ளது, செல்வாக்கும் இருக்கிறது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு நிறைய விஷயங்களை செய்ய முடிகிறது. ஆனாலும் இவர்கள் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பண்பாட்டு ரீதியாக பிரிப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.

இப்போது கர்நாடகாவில் அடி வாங்கியவுடன் இந்திய ஒருமைப்பாடு பற்றியும் இந்திய இறையாண்மை பற்றியும் வாய் கிழிய பேசும் இவர்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் பண்பாட்டு தளத்தில் செய்தது என்ன? தமிழ் புத்தாண்டை சித்திரையில் இருந்து தைக்கு மாற்றியதே இவர்கள் பண்பாட்டு தளத்தில் செய்த்தது.

அரசியல் தளத்தில் தனி நாடு கேட்கும் அளவிலும், நமது பாரத பிரதமரை கொலை செய்தவர்களை ஆதரிக்கும் அளவிலும் அது இருக்கிறது.

கர்நாடக என்னும் அமைதியான பூமியை கலவர பூமி ஆக்கியதில் தமிழர்க்கு மிகப்பெரும் பங்கு உண்டு, இதை யாரும் மறுக்க முடியாது.

கர்நாடக தனி நாடா என்று இப்போது கேள்வி கேட்பவர்கள் விடுதலை புலிகளை ஆதரிப்பது எதனால்? தமிழ்நாடு தனி நாடா?

மொழி, இனம், பிராமண துவேஷம், தென்னிந்திய மற்றும் இந்திய பண்பாட்டுக்கும், கலாச்சரதிற்கும் எதிரே எடுத்த "எதிர் கலாச்சார" நிலை ஆகியவற்றின் நீண்ட கால விளைவே இந்த கர்நாடக பிரச்சினை.

இது ஹோகேனக்கள் பிரச்சினையே அல்ல , இது கர்நாடகாவில் தமிழர் மேல் உள்ள வெறுப்பை காட்டும் ஒரு வாய்ப்பு. இந்த பிரச்சினை இல்லை என்றால் வேறு பிரச்சினை, ஆனால் தமிழர்களும் அதன் தலைவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆனால் தெரியப்போவதே இல்லை என்ற கேள்வி என்னவென்றால்

"பெங்களூரில் தெலுங்கர்களும் மலையாளிகளும் அமைதியாக வசிக்கும்போது தமிழர்கள் மட்டும் ஏன் தாக்கப்படுகிறார்கள்?"

இதற்கான பதிலை மனசாட்சிக்கு உண்மையாக, நேர்மையாக எந்த வித அரசியல் நோக்கின்றி உண்மையிலேயே தமிழ் அழிந்தாலும் தமிழர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்தால் தமிழரால் வருங்காலத்தில் வாழ முடியும். இல்லை என்றால் இதே போல் சென்ற இடமெல்லாம் அடி என்று வாழ வேண்டியதுதான்.

கர்நாடக தமிழர்-2

இங்கே ஹிந்தி என்பது ஒரு மொழி அல்ல, அது ஒரு ஆயுதம், ஹிந்தி என்பது ஒரு அறிவு,ஹிந்தி படிப்பது என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சேர வைக்கும் ஒரு பாதை.எளிய பாதை, செலவில்லா பாதை. Science படிக்காதே maths படிக்காதே என்று யாரேனும் சொல்ல முடியுமா, english படிக்காதே என்று யாரேனும் சொல்வார்களா? அதே போல்தான் ஹிந்தியும்.

இன்று பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த ஒருவன் அவன் (தமிழகத்தை தவிர) எந்த மாநிலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் இந்தியாவில் எந்த நகரத்திலும் வேலை செய்ய முடியும், காரணம் ஹிந்தி.

நரசிம்மன், கோபால் போன்ற பெயர்களில் உள்ள குழப்பம் கன்னடர்களுக்கு செந்தில், இளங்கோ, அருள் போன்ற பெயர்களில் இல்லை. தெளிவாக தெரிந்து,அறிந்து போட்டு தாக்கி விடுகிறார்கள்.இங்கே அக்ரகாரத்திலும் சவுகார் பேட்டையிலும் செய்ததை மேலும் வண்மையாக்கி வாட்டாள் நாகராஜ் செய்து விட்டான்.

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு என பேசியும் எழுதியும் தமிழர்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தபட்டது வெளியே தெரியாத வரலாறு.உண்மையில் இந்த கருத்து பிரச்சாரத்திற்கு அடிபட்டது வழக்கம் போல விளிம்பு நிலை மக்களே.

அதே போல் தமிழகத்தில் இருக்கும் கன்னடர்களின் சொத்து மதிப்பு, கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களின் சொத்து மதிப்பை ஒப்பிட்டு பார்த்தல் மிகவும் குறைவு என்று தெரியும்.

தமிழ்நாட்டில் மொழி அபிமானம் போய் மொழி வெறி வந்து இருக்கிறது.அந்த மொழி வெறியினால்தான், பிற மொழி படங்கள் தமிழில் ஓடுவதில்லை. உதாரணமாக, தெலுங்கில் வெற்றி பெற்ற போக்கிரியை அப்படியே டப் செய்தால் இங்கே நாய் கூட சீண்டாது ஆனால் அதையே scene by scene காப்பி அடித்து விஜய் நடித்தால் 250 நாட்கள் வூடு கட்டி ஓடும்.உண்மையில் நாமும் தெலுங்கு படங்களை ஆதரிப்போமனால் திரைப்பட சந்தை இருமடங்காகும். ஏறக்குறைய இந்த இரண்டு திரை உலகங்களும் ஹிந்தி பட உலகிற்கு சவால் விடலாம்.

இதுவே ஆந்திரத்தில் இந்த நிலைமை இல்லை, அங்கே தமிழ் படங்களை அப்படியே ரசிக்க கற்று கொண்டு இருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் தமிழர்கள் மிக மிக குறைவு, ஆனாலும் ஆந்திராவிலும் தமிழர்கள் அடிவாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

கர்நாடக தமிழர்-1

சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு கர்நாடக பார்டரில் உள்ள ஹோகேனக்கல் என்ற water resource தொடர்பாக சில பிரச்சனைகள் ஏற்பட்டது.தமிழர்களின் சொத்துக்கள், தமிழ் திரைப்படங்கள் பெங்களூரில் தாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒரு கூட்டம் போட்டனர் அதில் சிலர் ஆவேசமாக பேசினர்.
சினிமாவில் இருப்பவர்களே இப்படி என்றால் தமிழ் தமிழ் என்று கட்சி நடத்துபவர்கள் இன்னும் ஆவேசமாக பேசுவர், பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
உதாரணம் : திருமாவளவன், பழ. நெடுமாறன்,ராமதாஸ் போன்றவர்கள்.


எனது கட்சி என்னவென்றால்

கர்நாடகா தமிழகத்தை விட 50-60 வருடங்கள் பின் தங்கி இருக்கிறது.எப்படி,
தமிழகத்தில் 1930-களில் ஆரம்பித்த இந்து மத துவேஷமும், நாத்திகவாதமும், பிராமண துவேஷமும் தமிழ், தமிழர் என்ற கோஷமும் 1960-ல்/ 70-ல் உச்சகட்டத்தில் இருந்ததோ அதே போல அதே போல் கர்நாடகாவில் 1980-களில் ஆரம்பித்து ஆரம்பித்த தமிழர் துவேஷம் இப்போது உச்சகட்டத்திற்கு சென்று உள்ளது.


ஒன்று புரிந்து கொள்ளுங்கள், ஒரு தெலுங்கருக்கோ அல்லது ஒரு மலையாளிக்கோ இந்த நிலைமை பெங்களூரில் இல்லை, தமிழர்க்கு மட்டுமே உண்டு. ஏன் என்றால் தமிழருக்கு மட்டுமே தாய்மொழி தவிர்த்து மற்ற மொழி பேச வராது.அதாவது "தமிழுக்கு அமுதென்று பேர் மற்ற எல்லா மொழிக்கரர்களும் தமிழ் மொழியை கற்று அதன் பழமையை போற்றி நம்முடன் உறவாட வேண்டும்" என்ற கோரிக்கையை சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஊரிலும் வைப்பதற்கு தமிழன் தயக்கபடவே மாட்டான். இதில் சந்தேகமே வேண்டாம்.
ஆனால் இந்த சந்தர்ப்பம் அவனுக்கு சில ஊர்களில் தான் அமைகிறது. அவற்றில் பிரதானமானது பெங்களூர்.


கன்னடரின் பிரதான குற்றச்சாட்டே "இங்கே வந்து இத்தனை வருடம் ஆகியும் கன்னடம் கற்றுக்கொள்ள வில்லையே" என்பதுதான். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது விளிம்பு நிலை மக்களையே!

தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து கன்னடர்களுக்கும் தமிழ் தெரியும்ஆனால் கர்நாடகவிளுருக்கும் 75% சதவித தமிழர்களுக்கு கன்னடம் தெரியாது, (அதாவது கன்னடம் பேசும்போதே இவர்கள் தமிழர் என மற்ற கன்னடர் தெரிந்து கொள்ளலாம் - அந்த அளவில்தான் இருக்கும்).அவர்கள் தனித்து தெரிவதால் அவர்களை அடையாளமும் கண்டு கொள்வது மிகவும் எளிது.இதுதான் இங்கே பிராதன பிரச்சினை, ஆனால் இங்கே ஊதும் தமிழ் என்ற சங்கில் எல்லோரும் செவிடர் ஆகிவிட்டனர்.

எனவே கன்னடர்களை தமிழ் நாட்டில் அடையாளமும் கண்டு கொள்வது மிகவும் கடினம். கன்னடர்களை ஒரு நிறுவனமாகவே அடையாளமும் காண முடியும். அதனால் வன்முறையும் மிக அதிக அளவில் இருக்காது, போலீசாருக்கும் அதை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது.

60 வருட திராவிட அரசியல் நமக்கு தந்து இருக்கும் சொத்து இது, அதாவது ஹிந்தியை படிக்கவேட்டாமல் செய்து தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழர்களை விலக செய்து, துய தமிழ், தனித்தமிழ் என்றெல்லாம் கூறி கூறி தமிழர்களுக்கு ஒருவிதமான superiority complex வளரச்செய்து அதன் மூலம் அவர்களை மற்ற மொழி கற்கும் ஆற்றலை அல்லது ஆவலை நிறுத்தியதால் வந்த வினை இது.
-