Thursday 29 October 2009

மழை

ஒரு பூவினிலே விழுந்தால் சிறு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே வருவாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண்மணிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கை அன்னை தந்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கடந்தால் வேறெங்கு நனைவது

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு துணி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டம்
நடுச்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாக பறவை ஆவேனோ

மழை பாடல்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமே இல்லை. ஆனால், எனக்கு பிடித்த பாடல் இது தான். என் சுவாசக் காற்றே படத்திற்காக வைரமுத்து அவர்கள் எழுதியது.

மழை காதலுக்கான பருவம். என் சிறு வயது மழை நினைவுகளில் பெண்களுக்கு பெரும் பங்குண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததால் நிறைய பெண்கள் மீது "infatuation" இருந்தது. அந்த "infatuation" காதல் என்று நினைத்துக் கொண்டு நான் உளறியதெல்லாம் பெரும்பாலும் மழை காலங்களில் தான்.

"ரெண்டு வருஷம் வெயிட் பண்ணு, MBA முடிச்சிட்டு உங்க வீட்ல வந்து பேசறேன் என்று சொல்லிய இரண்டு மாதங்களில் அந்த பெண் என்னை மாதிரி நாலு பேரை தாண்டி சென்று விட்டிருந்தாள். அந்த "அயிட்டத்தை" நினைத்து பெட்டிக் கடைகளில் தம் அடித்து நண்பர்களிடம் புலம்பியதெல்லாம் கூட இது போன்ற மழை தருணங்களில் தான். என் முதல் முத்தம் கூட ஒரு நல்ல மழை நாளில் தான் கொடுத்து வாங்கப்பட்டது.என்னைப்போல் உங்கள் ஒவ்வொருவருக்கும் மழைக்கால நினைவுகள் நிறைய இருக்கும். பழைய பக்கங்களை மனதில் புரட்டிப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். புரட்டிப் பாருங்கள். ஹைய்யா, மழை சீசன் வந்தாச்சு.