Monday 8 August 2011

ஆயிரத்தொரு விஷயங்கள்

1001beforeyoudie.com என்ற வலைதளத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நீங்கள் இறப்பதற்குள் பார்க்க வேண்டிய ஆயிரத்தொரு படங்கள், படிக்க வேண்டிய ஆயிரத்தொரு புத்தகங்கள், பார்க்க வேண்டிய ஆயிரத்தொரு ஓவியங்கள், கேட்க வேண்டிய ஆயிரத்தொரு பாடல்கள் என்று தொகுத்திருக்கிறார்கள்.

இந்திய பெயர்கள் எவ்வளவு தேறுகின்றன என்று தேடிப் பார்த்தேன். புத்தகங்களில் 28, படங்களில் 3, இசைத்தட்டுகள் நான்கு, ஓவியங்கள் 15, நீங்கள் வளர்வதற்குள் படிக்க வேண்டிய ஆயிரத்தொரு குழந்தைகளுக்கான புத்தகங்கள் பகுதியில் 5.

Sunday 7 August 2011

கோவிலில் திருமணம் செய்ய ஜாதி சான்றிதழ் தேவையா?

இன்று பெங்களூர் அல்சூரில் உள்ள சோமேஸ்வரர் கோவிலுக்கு சென்றபோது கண்ணில் பட்ட போர்டு

இங்கு திருமணம் செய்ய விதிமுறைகள்

1.Sub Registrar அளித்த திருமண சான்றிதழ் இருக்க வேண்டும்.
2.வயது சான்றிதழ் வேண்டும் , முகவரி தொடர்பான ஆவணங்கள் வேண்டும்.
3.மணமகள் மணமகன் ஜாதி சான்றிதழ் வேண்டும்
4.திருமணம் பற்றி கோவில் அதிகாரிகளுடன் பேச வரும்போது மணமகன் / மணமகள் பெற்றோர் உடன் வரவேண்டும்.

மற்றும் சில விதிகள்..

முதல் இரண்டு விஷயங்களில் பிரச்சினையில்லை .. மூன்றாவது / நான்காவதுதான் இடிக்கிறது..

ஏன் ஜாதி சான்றிதழ் வேண்டும் ? வெவ்வேறு ஜாதி என்றால் கல்யாணம் செய்து வைக்க மாட்டார்களா? அதை வெளிப்படையாக எழுதவில்லை, ஒருவேளை வெவ்வேறு ஜாதி சான்றிதழோடு போனால் வாய்மொழியாக
மறுக்கலாம். கலப்பு திருமணம் சட்ட விரோதமா? கல்யாணம் செய்ய வயது வரம்புதான் தேவை, ஜாதி சான்றிதழ் எதற்கு?

நான்காவது இன்னும் மோசம் , பெற்றோரை எதிர்த்து நடக்கும் திருமணத்திற்கு இந்த கோவிலில் இடமில்லை, இதுதான் மறைமுகமாக சொல்வது (வேண்டுமானால் யாரையாவது பெற்றோராக நடிக்க வைக்கலாம்,ஆனால் பெற்றோருக்கும் அடையாள அட்டை கேட்பார்களா தெரியவில்லை).

ஆக பெற்றோர் எதிர்த்து நடக்கும் காதல் திருமணத்திற்கு இங்கே இடமில்லை, கலப்பு திருமணத்திற்கும் மறைமுகமாக இடமில்லை.

இது இந்த கோவிலில் மட்டும்தான இல்லை கர்நாடகாவில் உள்ள எல்லா கோவில்களிலுமா என்று தெரியவில்லை ..மேலும் இது தனியார் கோவிலா இல்லை அரசாங்க கோவிலா என்றும் தெரியவில்லை.
தமிழகத்தில் இது மாதிரி விதிகள் இருக்கிறதா தெரியவில்லை.

அங்கே நிற்கவே அருவருப்பாக இருந்தது.