Monday 20 September 2010

சிங்கம், புலி, சிறுத்தை

கார்த்தி நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு "சிறுத்தை" என்று பெயரிட்டுள்ளார்கள். முதலில் சூர்யா நடிப்பில் சிங்கம் வந்தது. அதற்கும் முன்பே S.J.சூர்யா இயக்கத்தில் விஜய் "புலி" என்றொரு படம் நடிப்பதாய் இருந்தது. விஜய் அந்த கதை பிடிக்கவில்லை என்று நிராகரிக்க, இதே படத்தை தெலுங்கில் எடுத்து வெற்றி பெறுகிறேன் பார் என்று இயக்குனர் S.J.சூர்யா பவன் கல்யாண் நடிப்பில் "கொமறம் புலி" என்று எடுத்து சென்ற வாரம் ரிலீஸ் செய்தார். வந்த வேகத்தில் பொட்டிக்கு போய்விட்டது படம். இப்போது சிறுத்தை. சிறுத்தை வெற்றி பெற்றால் அடுத்து ஓநாய், நரி, யானை என்று வரிசையாக வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

திரைப்படங்களுக்கு விலங்குகள் பெயரிடுவதை பற்றி பேசும் இந்த வேளையில், விலங்குகளுக்கு மனிதர்களின் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறார் நம் முதல்வர். வண்டலூரில் புதிதாக பிறந்த ஆண் புலிக்குட்டிக்கு "செம்பியன்" என்றும் இரண்டு பெண் புலிக்குட்டிகளுக்கு "இந்திரா", "வள்ளி" என்று பெயரிட்டுள்ளார். பாவம் புலிகள்.பெயர் வைத்ததற்காக கலைஞருக்கு பாராட்டு விழா எடுக்காவிட்டால் விரைவில் "புட்டத்தில் கடித்த புலிகள்" என்ற தலைப்பில் முரசொலியில் ஒரு கவிதை வரும்.