Wednesday 12 February 2014

புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்

சுஜாதாவின் "புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்" புரட்டிக் கொண்டிருந்தேன். சில சுவையான பாடல்களை பகிர்கிறேன்.

வாழ்க்கை தடுக்கிறது

பாடியவர் - ஒரேருழுவர்
திணை - பொதுவியல்
துறை - பொருண்மொழிக் காஞ்சி

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே

பொருள்:

தோல் நிறமுள்ள
சேற்று நிலத்தில்
துரத்தப்பட்ட மான்போல
தப்பி ஓடிவிடலாம் என்றால்
வாழ்க்கை தடுக்கிறது

ஒரு வீட்டில் சாவு ஒன்றில்

பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்
திணை - பொதுவியல்
துறை - பெருங்காஞ்சி

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க! இதன் இயல்பு உணர்ந்தோரே.

பொருள்:

ஒரு வீட்டில் சாவுப் பறை
மற்றொரு வீட்டில்
கல்யாண மேளம்
மணமக்கள் பூச்சுட,
கணவரை இழந்த பெண்கள்
கண்ணீர் விட
இவ்வாறு உலகம்
படைத்தவன் பண்பில்லாதவன்
உலகம் கொடுமையானது
இதை உணர்ந்தவர்கள் தான்
இனிமையைக் காண்பர்.