Friday 25 February 2011

இந்தியாவின் தேசிய பழம் எது?


ஒரு quiz ,

1. இந்தியாவின் தேசிய பூ எது?
2. இந்தியாவின் தேசிய மரம் எது?
3. இந்தியாவின் தேசிய நதி எது?
4. இந்தியாவின் தேசிய நீர் மிருகம் எது?
5. இந்தியாவின் தேசிய பழம் எது?
6. இந்தியாவின் தேசிய பாடல் எது?

கூகிளாண்டவரை துணைக்கு அழைக்காமல் பதில் எழுதவும்!

துக்ளக் கேள்வி-பதில்

2-3-2011 துக்ளக் இதழில் இடம் பெற்றுள்ள சில சுவையான கேள்விகளும் அதற்கான சோவின் பதிலும்:

'இந்தியர்கள் ஆளத் தெரியாதவர்கள்' - என்று சர்ச்சில் கூறியது உண்மைதானே?
பதில்: சர்ச்சில் 'இந்தியர்கள் ஆளத் தெரியாதவர்கள்' என்று கூறவில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கிற மசோதா, ஜூன் 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வந்தபோது சர்ச்சில் பேசியது இது:

'... power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre and men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight among themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water... would be taxed in India....'

இப்படி சர்ச்சில் பேசியபோது, இருந்த இந்தியத் தலைவர்களின் மேன்மையும் - உயர்வும் சர்ச்சில் மீது இந்தியர்களுக்கு கோபம் வர காரணமாயின. ஆனால், இன்றைய இந்திய அரசியல்வாதிகளும், தலைவர்களும் சர்ச்சிலின் வார்த்தைகளை நிரூபித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற புதிய பொறுப்பை பத்திரிகைகள் தங்களுக்கு வழங்கி மகிழ்ந்திருப்பது பற்றி?

பதில்: தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகிய ராசாவுக்கு இணையாக அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் இல்லை, வரவும் முடியாது என்று சுட்டிக்காட்டி பத்திரிகைகள் என்னை கிண்டல் செய்கின்றன.

தி.மு.க. வினர் உங்கள் கொடும்பாவியை(உருவ பொம்மையை) எரித்திருக்கிறார்களே?

பதில்: என்னுடைய நாடகத்தில் பல ரகளைகள் செய்து, என் நாடகங்களை பாப்புலர் ஆக்கியது; 'துக்ளக்' பத்திரிக்கையை பறிமுதல் செய்து, பத்திரிக்கையைப் பிரபலமாக்கியது எல்லாமே தி.மு.க.வினர் தான். அப்படி செய்து கொடுத்த பாப்புலாரிட்டி போதாதென்று, இப்போது கொடும்பாவி எரித்து விளம்பரம் தேடித் தருகிறார்கள். நான் முன்பே சொல்லியிருக்கிறேன் - கலைஞர் என்னுடைய விளம்பர ஏஜன்ட். அவர் இன்னமும் அந்தப் பதவியை ராஜினாமா செய்யவில்லை. நன்றி.


குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறிய ராஜஸ்தான் அமைச்சர், தன பதவியை ராஜினாமா செய்துள்ளாரே?

பதில்: பிரதிபா பாட்டீல், ஜனாதிபதி ஆனதிலிருந்து இன்று வரை, 'அவர் ஏன் ஜனாதிபதியானார்? அப்படி என்ன தகுதி அவரிடமிருந்தது?' என்ற கேள்விகளுக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. இப்போது அமைச்சர், 'பிரதிபா பாட்டீல் இந்திரா காந்தி வீட்டில் சமையல் செய்தார்;பாத்திரம் கழுவினார்;அந்த விசுவாசத்திற்கு ஜனாதிபதி பதவி இப்போது கிடைத்துள்ளது' என்று கூறி விளக்கம் அளித்து விட்டார். அரசாங்க ரகசியத்தை வெளியே சொன்னது தவறு அல்லவே? அதனால் வெளியேறி விட்டார்.

Wednesday 23 February 2011

நாவல் 'விளம்பரம்' பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நாவல்கள் பற்றி தனது சமீபத்திய பதிவில் கூறியுள்ளது:

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும்.

அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே.

இதை படித்துவிட்டு உங்களுக்கு வேறு எந்த எழுத்தாளராவது ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!

Sunday 20 February 2011

வட்டார வழக்கு

சில நாட்களாய் இந்த கேள்வி மனதில் எழுகிறது. வட்டார வழக்கு இன்று பெரிதும் நம் திரைப்படங்களில் இடம் பெறுகிறது(காதல், பருத்திவீரன், ஆடுகளம், தூங்காநகரம், சுப்ரமணியபுரம் என்று நிறைய உதாரணங்கள் சொல்லலாம்). ஆனால், இது சமீபத்தில் தான் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது. தேனி மண்ணை சேர்ந்த பாரதிராஜா "பதினாறு வயதினிலே" படத்தில் தன் மக்கள் அன்றாடம் பேசும் மொழியை திரையில் திணிக்கவில்லை.

அதே போல் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட பல பழைய திரைப்படங்களில் வட்டார வழக்கே இல்லை. பாகப்பிரிவினை, விவசாயி, மணியோசை, பட்டிக்காடா பட்டணமா என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவிய்ங்க, இவிய்ங்க, சுதானம், ஆட்டையை போடறது, லந்து போன்ற சொற்கள் இப்போது தான் அதிகம் பேசப்படுவதை பார்க்கிறோம். அதே நேரத்தில், "அனுபவி ராஜா அனுபவி" படத்தில் வரும் "முத்துக் குளிக்க வாரீகளா" போன்ற வட்டார வழக்கை கொண்டு எழுதப்பட்ட பாடல்கள் ஒன்றிரண்டு உண்டு.

ஆக, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, சென்னை என்று அந்தந்த ஊரில் இது தான் மொழி என்று திரைப்படங்களின் வாயிலாக நமக்கு தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புது வார்த்தைகள் எப்போது அந்த மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் கலந்தன?