Saturday 29 August 2009

விமர்சிக்க முடியாத பாலகுமாரன்


சமீபத்தில் பாலகுமாரன் பேசுகிறார் (http://balakumaranpesukirar.blogspot.com/) என்ற ப்ளாக்கில் பாலகுமாரனின் உடையார் நாவல் பற்றி ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை படிக்க நேர்ந்தது.அந்த நாவலை பற்றி மிகவும் உயர்வாக எழுதி பாலகுமாரனுக்கு ஒரு பெரிய பாராட்டு ஒன்றை வழங்கி இருந்தார் அந்த வாசகர்.

அதனை படிக்கும்போது, அந்த உடையார் என்ற 6 பாக நாவலை படிக்க வேண்டுமென்ற ஆவல் வந்தது, அதனை விட அந்த நாவலை பற்றி ஒரு தேர்ந்த விமர்சகர் விமர்சனம் செய்ய வேண்டும் , அந்த விமர்சனத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது.
அதனை ஒரு கடிதமாக எழுதி ஒரு பின்னூட்டம் இட்டேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால்,
என்னதான் உடையார் நாவலை பற்றி வாசகர்கள் உயர்வாக சொன்னாலும், இந்த புகழ்ச்சிகள் அந்த வாசகர்கள் பாலகுமரான் என்ற எழுத்தாளர் மேல் இருக்கும் ஒரு பிரியம் காரணமாக வந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது, ஆகவே இந்த படைப்பை பற்றி தீவிர வாசகர்களும், மற்ற எழுத்தாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அந்த தீவிர வாசக மற்றும் சக எழுத்தாளர்களின் விமர்சனமே, அந்த புத்தகத்தின் உண்மையான் இடத்தை அடைய வைக்கும்.

இதுதான் நான் அந்த கடிதத்தில் எழுதியது, ஆனால் இந்த பின்னோட்டத்தை அந்த வலைமனை வெளியிடவே இல்லை...

இந்த கடிதத்தில், பாலகுமாரனை பற்றி நான் என்ன தவறாக எழுதி விட்டேன் என்று இன்று வரை புரியவில்லை. இது பற்றி நான் ஏற்கனவே எழுதி இருந்தாலும் மீண்டும் மீண்டும் பாலகுமாரனின் ரசிகர்கள் ஒரு சிறு விமர்சன குரலையும் தாஙக முடியாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

Thursday 27 August 2009

வசந்தா

ராகங்கள் பற்றி பேசி ரொம்ப நாளாச்சு. சில நாட்களுக்கு முன் வித்யாசாகர் இசையில் பிரிவோம் சிந்திப்போம் படத்திலிருந்து "கண்டேன் கண்டேன் காதலை" அப்படின்னு ஒரு பாட்டு கேட்டேன். வசந்தா ராகத்தை முழுமையாக உபயோகப்படுத்தி இருக்கிற பாட்டு இது.

வசந்தா மாலை நேரத்தில் பாடுவதற்கு ஏற்ற ராகம். இளையராஜா அதனால தான் ராஜபார்வை படத்துல வர "அந்தி மழை பொழிகிறது" பாடலை வசந்தால அமைத்திருக்கார் என்று நினைக்கிறேன்.ராஜரிஷி படத்தில் வரும் "மான் கண்டேன் மான் கண்டேன்", கூட வசந்தா தான். இதை தவிர வேறு பாடல்கள் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. உன்னால் முடியும் தம்பி படத்துல "ராகம் வசந்தா நானும் குடித்து பார்க்க ரசம் தா" அப்படின்னு ஒரு வரிக்கு வசந்தா உபயோகப்படுத்தி இருப்பார் இசைஞானி. இந்த பாடல் கூட அவர் எழுதியது அப்படின்னு கேள்விப்பட்டேன். உறுதியாக தெரியவில்லை.

எனக்கு தெரிஞ்சு ஏ.ஆர்.ரகுமான் வசந்தால இசையமைச்ச பாடல் படையப்பா படத்துல வர "மின்சார பூவே". இதை தவிர வசந்தா ராகத்தை அவர் வேறு பாடல்களில் அங்கங்கே பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், மின்சார பூவே கலப்படம் இல்லாத வசந்தா. சங்கீதம் கற்றுக்கொண்டவர்கள் நிச்சயம் "நின்னே கோரி" என்ற வசந்தா ராக வர்ணத்தை தாண்டாமல் கீர்த்தனைகளுக்கு பிரயாணம் செய்திருக்க முடியாது. சீதம்மா மாயம்மா என்ற தியாகராஜர் கீர்த்தனையும் வசந்தா ராகத்தில் பிரபலம்.

Tuesday 25 August 2009

உங்க மூட நம்பிக்கையில தீயை வைக்க..


பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போன மாசம் சூரிய கிரகணம் நடக்கும் போது பிஸ்கெட் சாப்பிட்டதால தான் பீகார்ல வறட்சி நிலவுதாம். இதை சொல்லியிருக்கறது நம்ம லல்லு. இந்த ஆளையெல்லாம் பீகார்ல எப்படி உசிரோட விட்டு வெச்சு இருக்காங்க?

நன்றி: தினமலர்

P.S: நம்ம கவலை எல்லாம், கலைஞர் இதை படிச்சிட்டு தமிழகத்துல வறட்சி ஏற்பட காரணம் ஜெயலலிதா குளிக்கறது தான் அப்படின்னு சொல்லிட கூடாது. கிரகணம் பத்தி கலைஞர் பேச மாட்டாரு ஏன்னா அவர் தான் பகுத்தறிவு பகலவன் ஆச்சே.