Wednesday 5 August 2009

மறதி மன்னார்சாமிகளுக்கு

சில நாட்கள் / வாரங்கள் / மாதங்கள் முன்பு நாம் கடந்து வந்த செய்திகளை பார்ப்போம் ,
சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் - ஒரு மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது - அதன் முதலாளி தலைமறைவாகிவிட்டார் - அந்த வழக்கின் கதி என்ன? தீ.விபத்து தொடர்பாக ஏதாவது செய்தார்களா? புது விதிகள் அல்லது அந்த ரங்கநாதன் தெருவில் உள்ள மற்ற கட்டிடங்கள் எல்லாம் தீயணைப்பு துறை விதிப்படி கட்டப்பட்டதா என்று சோதனை செய்து யாரையாவது கைது செய்தார்களா? எந்த கடையை பூட்டினார்கள்? ஏதாவது தகவல் உண்டா?


அந்த வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து இருப்பார் , ஆக அந்த file பற்றி தகவல் இல்லை.அடுத்த வருஷம் சுமார் ஐநூறு பேர் தீயிலும், நெரிசலிலும் சாவார்கள் - அது வரை பிரச்சினை இல்லை-ஜாலி!

swiz பாங்கில் உள்ள கோடிக்கணக்கான கருப்பு பணம் - என்ன ஆனது? இந்திய அரசு அதை தொடர்ந்து என்ன செய்தது? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?

சட்டக்கல்லூரி மாணவர் அடிதடி பிரச்சினை - அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏதோ விசாரணை கமிஷன் போடப்பட்டதாக கேள்வி - அந்த கமிஷனின் சிபாரிசை அரசு அமல் படுத்தியதா? இல்லையா?

சரி விடுங்க கந்தசாமி எப்போ ரிலீஸ்?

கதை வாங்கலையோ கதை

தமிழ் திரையுலகில் இன்று பெரிய பிரச்சனையே கதை பஞ்சம் தான். உலக மொழியில் எல்லாம் படம் பார்த்தாலும் நம் இயக்குனர்களுக்கு கதை கிடைக்கிற பாடாய் தெரியவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உதவ நாம் ஒரு கதை தந்தால் அதை தமிழ் இயக்குனர்கள் திரைக்கு ஏற்றபடி எப்படி அமைப்பார்கள்? ஒரு சிறிய கற்பனை. இதற்காக நாம் தேர்ந்தெடுத்த இயக்குனர்கள், பாலா, கவுதம் மேனன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார். இப்போது கதை:

"பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு செல்லும் வழியில் நம் ஹீரோ ஹால் டிக்கெட்டை தொலைத்து விடுகிறார். அதை எப்படி அவர் தேடி கண்டுப்பிடித்து சென்று ஒரு வழியாக பரீட்சை எழுதுகிறார் என்பது தான் கதை".

முதலில் இயக்குனர் பாலா:

நாம்: சார், கதை சொல்லிட்டோம். இப்போ நீங்க இதை எப்படி திரைக்கதையா மாத்தப்போறீங்க?

பாலா: இந்த படம் எடுத்து முடிக்க அஞ்சு வருஷம் ஆகும். ஹீரோ மொதல்ல யோகா கத்துக்கணும். அப்பறம் பிணங்களோட வாழ கத்துக்கணும். பிணங்களை சாப்பிட கத்துக்கணும். உச்சி வெயில்ல நிர்வாணமா நின்னு மர்ம பாகங்கள் கலரை எல்லாம் மாத்தணும். இதையெல்லாம் அவர் செஞ்ச ஒடனே ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிதான்.

நாம்: சார், தப்பா நினைக்காதீங்க, இந்த கதைக்கு எதுக்கு சார் இதெல்லாம்?

பாலா: நீங்க ஏன் இதை வெறும் கதையா பாக்கறீங்க? ஹால் டிக்கெட் தேடல் என்பது தத்துவ விசாரணை செய்யற விஷயம். நான் தான் பெரியவன் அப்படின்னு நினைக்கிற ஒருத்தனுக்கு ஹால் டிக்கெட் தொலையும் போது தான் தன்னோட அகந்தை புரியுது. ஹால் டிக்கெட் தான் பெரிசு தான் ஒண்ணுமே இல்லை அப்படின்னு அவன் புரிஞ்சுக்கிற நேரம்.

நாம்: சரி சார், படத்துக்கு டைட்டில் என்ன?

பாலா: வாழ்க்கை சிறுசு, டிக்கெட் பெரிசு. சைடுல "எக்ஸாம் தத்வமசி" அப்படின்னு ஒரு லைன். மியூசிக் இளையராஜா. கிளைமாக்ஸ்ல அஞ்சாயிரம் வயலின் யூஸ் பண்ணி ஒரு பாட்டு வெக்கறோம்.

நாம்: படம் அஞ்சு வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா நல்லா இருக்குமா சார்?
பாலா: சினிமா தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ செய்யற முறுக்கோ, அதிரசமோ இல்ல கெட்டு போறதுக்கு. நல்ல படத்த ரசிகன் அம்பது வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா கூட பார்ப்பான்.

நாம்: படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் யாரு சார்?
பாலா: நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு தேனி கிட்ட இருக்காரு. கை, கால், கண், வாய், மூக்கு கிடையாது ஆனா ரொம்ப நல்லா நடிப்பாரு. ஹீரோயினா கரீனா கபூர் இல்லேன்னா ஐஸ்வர்யா ராய் போடலாம். ஆனா, அவங்க ஒரு வருஷம் பெரியகுளம் சந்தைல பிச்சை எடுத்து பழகிக்கணும்.


இப்போது நாம் சந்திக்க இருப்பது கவுதம் மேனன்.

(கவுதமுக்காக அவர் அலுவலகத்தில் நாம் காத்திருக்கிறோம்)

"மாதா சொத், பேகன் சொத், f*** the damn bitch என்று கூறியபடி உள்ளே நுழைகிறார் கவுதம்".
நாம்: என்ன சார், கோவமா இருக்கீங்க?
கவுதம்: நோ நோ, I am fine. It's just that i have been dubbing for my upcoming tamil movie and i still haven't got over with it. Yeah, tell me, wass up?
நாம்: நேத்து உங்க உதவியாளர் கிட்ட கதை கொடுத்துட்டு போனோம், அது விஷயமா..
கவுதம்: அது நீங்கதானா, real good story mate...but u see we need to make some changes when it comes to the story treatment looking at it from a movie viewpoint.
நாம்: அதான் சார், உங்க கிட்ட பேசிட்டு போலாம் அப்படின்னு வந்தோம். எப்படி திரைக்கதை எழுத போறீங்க?
கவுதம்: படம் யு.எஸ்ல நடக்கற மாதிரி மாத்துவோம். அங்க எல்லாம் ஹால் டிக்கெட் கிடையாது. Let's say that our man takes the exam from home and he is all alone during that time. திடீர்னு ரெண்டு Psychos அவன் வீட்டுக்குள்ள வராங்க. ஒரு பொண்ணு அண்ட் ஒன் பாய். அவங்க ரெண்டு போரையும் ஏமாத்தி அவன் எப்படி எக்ஸாம் எழுத போறான் அப்படிங்கறது தான் ஸ்டோரி.
நாம்: சரி சார், படத்துக்கு யார் ஹீரோ? விஜய் நடிச்சா நல்லா இருக்குமா?
கவுதம்: No No, அவர் திருப்பாச்சி, சிவகாசி ரெண்டும் கலந்து இந்த கதையை மாத்த சொல்வாரு. Let's have Surya. அவரு தான் கேள்வி கேட்காம நடிப்பாரு. Daniel Balaji ஒரு Psycho, female psycho ஜோதிகா.
நாம்: படம் எப்போ சார் ஸ்டார்ட் பண்ணலாம்?
கவுதம்: Give me 10 days time. I need to watch a few english movies and get the scenes ready
நாம்: படத்துக்கு பட்ஜெட் எவ்வளோ சார் வரும்?
கவுதம்: கிளைமாக்ஸ் சண்டை வேளச்சேரி மார்கெட்ல நடக்கும்.அதுக்கு அமெரிக்கால செட் போட்டுடலாம். சூர்யா அமெரிக்கால இருக்கற வீட்டோட செட், i guess we can have it in West Indies. Overall 200 crores should be fine but have a backup of 100 crores.

இறுதியாக கே.எஸ்.ரவிக்குமார்

நாம்: சார், கதை எப்படி இருக்கு?
கே.எஸ்: கமல் சார் தான் ஹீரோ. அப்படி இருந்த நான் டைரக்ட் பண்றேன்.
நாம்: சார், படம் ஸ்கூல் பையன் பத்தி சார்??
கே.எஸ்: கமல் ஸ்கூல் பையனா நடிக்க முடியாது அப்படின்னு சொல்றீங்களா?
நாம்: சார், அவர் பண்ணாத பாத்திரமா?
கே.எஸ்: அப்பறம், வேற என்ன பிரச்சனை? அவர் ஸ்டுடென்ட், ஹால் டிக்கெட், அது தொலஞ்சு போற தெரு, எல்லா ரோலும் பண்ணிடுவாரு. உங்களுக்கு செலவு மிச்சம்.
நாம்: சரி சார், அதெல்லாம் விடுங்க, திரைக்கதை எப்படி?
கே.எஸ்: ஒரு தீவிரவாதி கைல அந்த ஹால் டிக்கெட் கெடைக்குது. அவன் அதை ஒரு பாட்டில் உள்ள போட்டு வாஷிங்டன் அனுப்பறான். கமல் அதை தேடிட்டு போறாரு. அங்க வாஷிங்டன் ஊர்ல ஒரு நாட்டாமை இருக்காரு. அது தான் விஜயகுமார். அவர் அந்த பாட்டில் உள்ள என்ன இருக்கு அப்படின்னு தெரியாம வெத்தல கொதப்பி துப்பராரு. இப்போ கமல் சாருக்கு ரெண்டு வேலை. ஹால் டிக்கெட் கண்டு பிடிச்சு கழுவி அதை இந்தியாக்கு எடுத்துட்டு வரணும்.கழுவறதுக்கு சாதா தண்ணி அமெரிக்கால கெடைக்கல. அதுக்காக கமல் சிதம்பரம் வராரு. அங்க ஹீரோயின் காலைல வாசல் தெளிக்க தண்ணிய பக்கெட்ல வெச்சு இருக்காங்க. அதை கமல் சார் எடுத்து யூஸ் பண்ணிடறாரு. கமல் சாருக்கும் ஹீரோயினுக்கும் லவ் வருது. அது ஹீரோயின் பாட்டிக்கு புடிக்கல. கமலும் ஹீரோயினும் லிப் கிஸ் பண்ணும் போது பாட்டி அந்த ஹால் டிக்கெட் இருக்கற பாட்டில்லை ஒளிச்சு வெச்சிடறாங்க. இப்படி போகுது கதை.

நாம்: எப்போ சார் படம் முடியும்?
கே.எஸ்: கமல் சார் போதும் அப்படின்னு சொன்ன ஒடனே நிறுத்திட வேண்டிதான்.

நாம்: படத்துக்கு பட்ஜெட் என்ன சார்?
கே.எஸ்: பட்ஜெட் அப்படின்னு எதுவும் இல்ல. நீங்க கோமணம் ஒன்னு வாங்கிகிட்டு பாக்கி எல்லா சொத்தையும் வித்துடுங்க.

The Godfather-I




இந்த படத்தை குறைந்தது ஐம்பது முறையாவது பார்த்திருப்பேன். ஆனால், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. தமிழில் நாயகன், ஹிந்தியில் சர்க்கார் போன்ற படங்களுக்கு இன்ஸ்பிரேஷன் காட்பாதர் தான். அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த ஒரு இத்தாலிய குடும்பத்தின் கதை. காட்பாதராக மர்லன் பிராண்டோ. நிழல் உலக தாதாவான இவர் தவறான விஷயங்களுக்கு உதவ மறுக்க அமெரிக்காவில் உள்ள மற்ற நிழல் உலகத்தை சேர்ந்த குடும்பங்களின் பகைக்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் இவர் சுடப்பட, நிறைய முன்கோபம் உள்ள இவர் மூத்த மகன் குடும்பத் தலைவனாகிறான். தன் அவசர புத்தி மற்றும் முன்கோபத்தால் அவனும் கொல்லப்பட, இந்த தொழிலே பிடிக்காத இவர் கடைசி மகன் அல் பசினோ, சந்தர்ப்பவசத்தால் குடும்ப தலைமையை ஏற்கிறான். தன் தந்தை மற்றும் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குகிறான்(இதில் அவன் தங்கை கணவனும் அடக்கம்).

இந்த படத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு என் மீது இருந்தது என்றால் அலுவல் காரணமாக இத்தாலியில் இருந்து என் நிறுவனத்திற்கு வந்த இரண்டு பேரிடம், அவர்கள் Sicily சென்றிருக்கிறார்களா, Corleone ஊர் எப்படி இருக்கும் என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்க அவர்கள் கொஞ்சம் பயந்தபடி அங்கெல்லாம் செல்வது ஆபத்து என்றும் அது நிழல் உலக ஆசாமிகளின் ஊர் என்றும் சொன்னார்கள். ஆனால், என் வாழ்நாளில் ஒரு முறையாவது Corleone சென்று பார்க்க வேண்டும் என்றும் ஆசை.

படத்தில் சில சுவாரசியமான வசனங்கள்:

Michael Coreleone to his sister's husband in the climax: "only don't tell me you are innocent. It insults my intelligence. It makes me very angry"

Don Corleone to Virgil Sollozo: I have a sentimental weakness for my children and I spoil them, as you can see. They talk when they should listen. Anyway, Signor Sollozzo, my no to you is final. I want to congratulate you on your new business and I'm sure you'll do very well and good luck to you. Especially since your interests don't conflict with mine. Thank you.
[Sollozzo leaves]

Michael to his girlfriend Kay: My father is no different than any powerful man, any man with power, like a president or senator.
Kay Adams: Do you know how naive you sound, Michael? Presidents and senators don't have men killed.
Michael: Oh. Who's being naive, Kay?

Tom Hagen(Don Corleone's lawyer): Mr Corleone is Johnny Fontane's godfather. Now Italians regard that as a very close, a very sacred religious relationship.
Jack Woltz: Tell your boss he can ask for anything else, but this is one favour I can't grant him.
Tom Hagen: Mr. Corleone never asks a second favor once he's refused the first, understood?

Don Corleone: [to his son Michael] Listen, whoever comes to you with this Barzini meeting, he's the traitor. Don't forget that.
Don Corleone: [to his son Michael] So, Barzini will move against you first. He'll set up a meeting with someone that you absolutely trust, guaranteeing your safety. And at that meeting, you'll be assassinated.