Friday 19 September 2008

இன்று...

ஜெயமோகனின் blog படிக்கும்போது தமிழ்நாட்டின் வாழ்க்கை தரம் மத்திய பிரதேசத்துடன் ஒப்பிடும்போது மிகவும் nanraaga தெரிகிறது.

India Today "State of the States" பற்றி எழுதும்போது தமிழ்நாடு இரண்டாவதாக வந்து இருக்கிறது, ஒண்ணுமே புரியலை... (அந்த article எழுதியது ஒரு தமிழர்)!

ஜெயமோகனின் பயணக்கட்டுரை படிக்க ஆசையாக இருக்கிறது, எப்பேர்பட்ட பயணம், எவ்வளவு ஊர்கள் , எவ்வளவு மக்கள், போக ஆசையாக இருக்கிறது...

சாரு நிவேதிதா போவது மேற்கு ஐரோப்பாவிற்கு , ஜெயமோகன் போவது வறுமை சூழ்ந்த மத்திய பிரதேசத்திற்கு! ஹ்ம்ம் ... அவரவர் destination அவரவருக்கு...

Thursday 18 September 2008

Quotes Quiz

Who said:

1. Every immigrant who comes here should be required within five years to learn English or leave the country.

2. You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind.

3. Pleasure in the job puts perfection in the work.

4. In my country we go to prison first and then become President.

5. Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.

6. Do not worry about your difficulties in Mathematics. I can assure you mine are still greater.

7. If you even dream of beating me you'd better wake up and apologize.

8. A politician needs the ability to foretell what is going to happen tomorrow, next week, next month, and next year. And to have the ability afterwards to explain why it didn't happen.

9. I don't like to commit myself about heaven and hell - you see, I have friends in both places.

10. A prisoner of war is a man who tries to kill you and fails, and then asks you not to kill him.

Answers will be published in the comments section on Monday(22nd September)

Tuesday 16 September 2008

கலைஞர் கையில் தமிழகம் - Part II

நான் எழுத நினைத்ததை கோகுல் எழுதிவிட்டார். ஆனால், கோகுல் "சொல்ல மறந்த கதை" தமிழர்களின் "மின்சார கனவு".

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக கொண்டு வர நாளொன்றுக்கு இருபத்திமூன்று மணி நேரம் அயராது உழைக்கும் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் மின்துறை செய்துள்ள சாதனைகளை பட்டியலிட இந்த blog போதாது. எனினும், மின் துறையின் சில உலக தரம் வாய்ந்த சாதனைகளை இங்கே பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.

தொடர்ந்து இரண்டு மாதமாக நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் ஐந்து மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டும் செய்து வருகிறது அரசு. இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

1. ஏழை/நடுத்தர/பணக்கார வர்கத்தினரின் மின்சார பில் கணிசமாக குறைந்துள்ளது. "சமூக நீதி காவலர்", "சமத்துவபுர நாயகன்" போன்ற பட்டங்களுக்கு ஏற்ப ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் மின்வெட்டை அமல் செய்த கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியுமா?

2. மாலை மற்றும் இரவு நேரங்களில் எப்போதும் மின்சாரம் இல்லாததால், மாணவர்கள் இரவு முழுவதும் தெருவில் விளையாட வசதியாக உள்ளது.

3. வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடும் candle light டின்னரை ஏழை குடும்பங்கள் வீட்டிலேயே அனுபவிக்க வழி வகுக்கிறது.

4. கொள்ளையர்கள் காலாகாலத்தில்(ஏழு முதல் பதினோரு மணிக்குள்) கொள்ளையடித்து விட்டு வீடு போய் சேர வசதியாக உள்ளது.

5. Inverter சேல்ஸ் அதிகரித்து அரசுக்கு விற்பனை வரி கிடைக்கிறது.

தமிழக காங்கிரசார் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று அடிக்கடி கூறுவார்கள். ஆனால், இப்படியே ஒரு ஆறு மாதம் போனால் தமிழகம் காமராஜ் ஆட்சியையும் தாண்டி கற்காலத்தை நோக்கி போய்விடும்.

Monday 15 September 2008

கலைஞர் கையில் தமிழகம்.....

Blog-ஐ தொட்டு ரொம்ப நாள் ஆச்சு! சென்னைக்கும் பெங்களுருக்கும் shuttle service பண்றதுக்கே நேரம் சரியா இருக்கு, என்ன பண்றது..

ஆனாலும் நம்ம கருணாநிதி திரும்பி பார்க்கதவர்களையும் பார்க்கவைக்கும் சாமர்த்தியசாலி. இந்த துக்ளக் ஆட்சியை பார்த்த யாருக்கும் கொஞ்சமாவது திட்ட தோணும்.

செப்- 15 அண்ணா பிறந்த நாள், நூறாவது பிறந்த நாள், சரி நினைவு கூற வேண்டும் இல்லை என்று சொல்ல வில்லை, அதனால் எது செய்யக்கூடாதோ அதை செய்வதே எங்கள் கொள்கை என்று சொன்னால் என்ன செய்வது.

இறந்து போன ஒரு மனிதரின் பிறந்த நாளிற்கு பொது விடுமுறையா? அதுவும் முன்னாள் மாலை அறிவிப்பதா? மறுநாள் செய்ய வேண்டியது என்று எத்தனை பேர், எத்தனை நிறுவனங்கள் எத்தனை திட்டங்கள் போட்டு இருக்கும்? ஒரு யோசனை வேண்டாமா? மக்களை நிறுவனங்களை ஆடு மாடுகளாக நினைத்து கொள்வதா?

பொது விடுமுறையை விட மோசமானது ஆயுள் கைதிகளை விடுவிப்பதுஅவர்களை உள்ளே தள்ள எத்தனை பேர் உழைப்பு பயன்பட்டிருக்கும், எத்தனை arguements, counter arguements, எத்தனை judgements reserved, எத்தனை சாட்சிகள் உடைக்கப்பட்டு, திரும்ப ஒட்டப்பட்டு... அதையெல்லாம் இடது காலால் எட்டி உதைக்கப்பட்டு விட்டது.

இதற்கு பதில் சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை குறைக்க நடவடிக்கை எடுத்து இருக்கலாம், சிறைக்குள்ளே, எத்தனை கொள்ளை, கொலை, கற்பழிப்பு, ஹோமோசெக்ஸ் , எத்தனை அடக்குமுறை, சுகாதார சீர்கேடு, சித்ரவதை, வலி வேதனை ... எல்லாவற்றையும் அண்ணாவின் நூற்றாண்டு பேரிலேயே களைய பெரிய நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.

இப்போது சுப்பிரமணிய சுவாமி கேஸ் போட்டு இருக்கிறார், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் , கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கபடுவர்.
இது போலிசுக்கு எவ்வளவு கஷ்டமான பணி? அதை விட கைதிகளுக்கு எவ்வளவு பெரிய வலி. சில நாள் விடுதலை எவ்வளவு பெரிய கொடுமை, உள்ளே இருக்கும் ரணத்தை கீறி விடுவதாகதா?


இதைத்தான் நமது துக்ளக் விரும்புகிறாரா? சில கட்சிக்கார குண்டர்களை வெளியே எடுக்க மற்றவர் உணர்வுடன் விளையாடுவதா? 85 வயது ஒரு மனிதருக்கு இந்த முதிர்ச்சியை கூட கொடுக்கவில்லையா?

இவ்வளவு முட்டாள்தனமாக, உணர்ச்சி வசப்படும் நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் இருக்கலாமா? இப்படிப்பட்ட மனிதர்களை ஆள விட்டுவிட்டு தமிழர்கள் தனது வாழ்க்கை, தனது ஆசை என்று வாழலாமா?
சிந்திக்க தெரிந்த நடுத்தர வர்க்கம் தன்னை ஒரு வோட்டு வங்கியாக மாற்றிக்கொள்ளவில்லை என்றால் இந்த மாநிலத்தை நாட்டை கடவுள் கூட காப்பாற்ற முடியாது.

ரேஷன் கடையில் மளிகை சாமான், ....
அப்போ ரேஷன் கடையில் வாங்காதவர்கள் ..? வேண்டாம் கேள்விகள் எழுந்து கொண்டே போகிறது....