Friday 18 September 2009

கவுண்டமணி


நேற்று இரவு சன் டிவியில் ஆயுத பூஜை படத்தில் கவுண்டமணி காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படி வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் சிரிப்பு வர வைக்கிறதோ அதே போல் தான் கவுண்டமணியும். மிகச் சிறந்த நடிகர். அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடிக்கும் அற்புதமான கலைஞன்.கொஞ்ச நேரம் அவர் நடித்த மற்ற காமெடி காட்சிகளை நினைத்துக்கொண்டு இருந்தேன்.ஒரு படத்தில் ரோட்டில் சாட்டையால் அடித்துக்கொள்ளும் கேரக்டர் செய்திருப்பார்.இன்னொரு படத்தில் அவர் மேல் கடுப்பில் இருக்கும் யாரோ ஒருவர் இவர் கோவிந்தா கோவிந்தா என்று உருண்டு பிச்சை எடுத்துக்கொண்டு வரும் ரோட்டில் நெறிஞ்சி முல்லை போட்டு விடுவார்கள். கவுண்டர் நடிப்பை பார்க்கவேண்டும். சும்மா பின்னி எடுத்திருப்பார்.(ஆமாம், முன்னெல்லாம் இது போல புரட்டாசி மாதத்தில் வருவார்கள். இப்போதெல்லாம் ரோட்டில் கோவிந்தா போட்டுக்கொண்டு உருண்டு வருபவர்களை பார்ப்பதே இல்லை. அது சரி, இப்போ இருக்கிற சென்னை போக்குவரத்தில் கோவிந்தா போட்டுக்கொண்டு வந்தால் நிஜமாகவே கோவிந்தா தான்).

அதே போல் ஒரு படத்தில் இவர் பாட்டை ஊரில் அனைவரும் கேட்க வேண்டும் என்று நடு நிசியில் ஒவ்வொரு வீடாக சென்று எழுப்பி "நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே?" என்று பாடி உயிரெடுத்து விடுவார்.இதை தவிர வடக்குபட்டி ராமசாமி காமெடி(படம் உத்தமராசா என்று நினைக்கிறேன்),ஆல் இன் ஆல் அழகுராஜா(வைதேகி காத்திருந்தாள்), நடிகன், பிரம்மா, மாமன் மகள்,சூரியன்,சேரன் பாண்டியன்,நாட்டாமை,உதய கீதம்,உள்ளத்தை அள்ளித்தா,மன்னன்,கோவில் காளை(இதில் வடிவேலு கவுண்டரிடம் நாயடி வாங்குவார்) என்று கவுண்டர் தமிழர்களை நிறைய சிரிக்க வைத்தார்.

முதல் முறை ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் வாங்கிய காமெடி நடிகர் கவுண்டமணி தான்.எத்தனையோ நடிகர்கள் இவருக்காக காத்திருந்து நடித்து கொடுத்ததுண்டு.அப்போது நிறைய பத்திரிக்கைகள் கவுண்டர் மிகவும் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் எழுதின.கவுண்டர் சொன்னார், "இப்போ தான் நான் வாங்குற காசு இவங்களுக்கு பெரிசா தெரியுது. ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம நானும் என் நண்பர் பீலிசிவமும் ஒரு நாளைக்கு ஆறு கிலோமீட்டர் நடந்து வந்து வாய்ப்பு கேட்போம். இவங்களுக்கு அந்த கவுண்டமணியை தெரியாது என்றார்".அதே போல், அவர் நடித்த காலத்தில் எந்த பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளவில்லை.கவுண்டமணி செந்தில் இல்லாமல் சோலோ காமெடி செய்வார் ஆனால் செந்தில் சோலோ காமெடி செய்து பார்த்ததில்லை.

ஒரு படத்தில் லாட்டரி சீட்டில் பரிசு விழுந்து விட்டது என்று செந்தில் கூற கவுண்டர் செம்ம ரவுசு விடுவார். அதே போல் கப்பலில் வேலை(சேதுபதி IPS) என்று சொல்லி கவுண்டரை வேலையை விட செய்து விடுவார் செந்தில். திரும்ப அதே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஆகிவிடும் கவுண்டருக்கு. ஒரு பம்மு பம்முவார் பாருங்கள். அசாத்தியமான நடிப்பு.

கவுண்டமணி சத்தியராஜ் ஜோடி சில நல்ல நகைச்சுவை படங்களை தந்தது. நடிகன், பிரம்மா, மாமன் மகள் போன்றவை உதாரணங்கள். இப்போதும் பிரம்மா படத்தில் குஷ்புவை பார்க்க விடுதிக்கு செல்லும் கவுண்டரையும் சத்தியராஜையும் அங்குள்ள காவலாளி கேள்வி கேட்க கவுண்டர் பண்ணும் ரவுசில் சத்தியராஜ் அந்த காட்சி முடிவில் திரும்பி சிரித்துக்கொண்டே செல்வதை நீங்கள் பார்க்கலாம். முகத்துக்கு எதனை அருகில் கேமரா இருந்தாலும் கவுண்டர் அலட்டிகொள்ளாமல் நடிப்பார். சில நடிகர்களுக்கு இது மிகக் கடினம்.

கவுண்டரின் முதல் படம் அன்னக்கிளி என்று நினைக்கிறேன். வெளிவந்த வருடம் 1976. கிட்டத்தட்ட பத்து படங்களில் கதாநாயகனாக நடித்தார். எஸ்.வி.சேகரை தவிர கதாநாயகனாக நடித்த ஒரே நகைச்சுவை நடிகர் கவுண்டர் தான் என்று நினைக்கிறேன். இவ்வளவு திறமையுள்ள கவுண்டரை கடைசியில் சிம்புவெல்லாம் நக்கல் செய்கிற நிலை ஏற்பட்டது. ஆனால், கவுண்டர் வாயை திறந்து எதுவும் சொல்லவே இல்லை. அமைதியாகவே இருந்தார்.இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி.கவுண்டரே, இன்னொரு ரவுண்டு வாருங்கள். வந்து தமிழ் சினிமாவை கலக்குங்கள்.

Thursday 17 September 2009

இது என்ன நியாயம்?

கடந்த ஆண்டு அண்ணாதுரை பிறந்தநாள் என்று சொல்லி 1400 கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. அது சரியல்ல என்று ஒரு பொது நல வழக்கு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியால் போடப்பட்டது. அதுவே இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் முடியாத நிலையில்,கடந்த செவ்வாய் அன்று கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பத்து அல் உம்மா தீவிரவாதிகளை அரசு "அண்ணாதுரை நூற்றாண்டு விழா" என்று மீண்டும் விடுதலை செய்துள்ளது.

கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். அங்கு வரவிருந்த பா.ஜ.க தலைவர் அத்வானியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. இந்த பத்து தீவிரவாதிகளும் அதில் தொடர்புடையவர்கள். இவர்களுக்கு உச்ச பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்காமல் இரட்டை ஆயுள் தண்டனை அளித்ததே பெரிய கருணை. இப்போது அதிலும் நாலு வருடம் தள்ளுபடி.

சென்ற முறை எந்த காரணமும் சொல்லாமல் 1400 கைதிகளை விடுவித்ததால் கொஞ்சம் சத்தம் எழுந்தது. இந்த முறை பிரச்சனை எதுவும் வர கூடாது என்று பத்து வருடம் சிறை தண்டனை முடித்தவர்களுக்கு மட்டும் விடுதலை என்கிறது அரசு. அது என்ன அல் உம்மா கைதிகள் மட்டும் தான் சிறையில் பத்து வருடம் முடித்தவர்களா? இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்கள்.முதல்வருக்கு இதில் கூட மைனாரிட்டி மக்களை திருப்திப்படுத்துவதில் ஒரு சந்தோஷம்.இன்னொரு பொது நல வழக்கு போடப்படும்.அதுவும் நீதிமன்றத்தில் இருக்கும்.அதற்குள் அடுத்த வருட அண்ணாதுரை பிறந்தநாள் வந்துவிடும்.மீண்டும் கைதிகள் விடுதலை.நானும் அதை வலையில் பதிவு செய்வேன்.நீங்களும் படிப்பீர்கள்.

Wednesday 16 September 2009

பால கனக மய

சில பதிவுகளுக்கு முன் அடானா ராகத்தை பற்றி எழுதியிருந்தேன்.அப்போது சலங்கை ஒலி படத்தில் வரும் பால கனக மய பாடல் அந்த ராகத்தில் அமைந்தது என்று சொல்லியிருந்தேன்.இந்த பதிவு அந்த பாடலை பற்றியது.இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கு இரண்டு கதைகள் உண்டு.

ஒரு மதிய வேளையில் திருவையாறு திருமஞ்சன வீதியில் ஸ்ரீராமரை பார்த்த தியாகராஜர் அந்த க்ஷணமே பாடிய பாடல் இது என்று கூறுவோர் உண்டு.ஹரிதாஸ் என்பவர் த்யாகராஜரை சில கோடி முறை ராமநாமம் உச்சரிக்குமாறு சொல்லியதாகவும் அதை சொன்ன பின் தன் இல்லம் சென்ற தியாகராஜரின் பூஜை அறையில் ராமர்,சீதை மற்றும் ஆஞ்சநேயர் தோன்றி தியாகராஜருக்கு ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி அளித்ததாகவும் அதை கண்ட தியாகராஜர் உடனே இந்த பாடலை பாடியதாகவும் கூறுவர்.

இந்த பாடலின் அனுபல்லவி தான் பால கனக மய என்ற வரி. பல்லவி ஏல நீ தய ராது என்பதாகும். இந்த வரியில் தான் பொதுவாக பாடலை பாட ஆரம்பிப்பார்கள்.முதலில் இந்த பாடலின் பல்லவி,அனுபல்லவி மற்றும் சரணத்தை பார்ப்போம்.அதன் பின் இந்த பாடலின் அர்த்தம் என்னவென்று பார்ப்போம்.

Pallavi:

Ela Nee Dayaraadu Paraaku Jese Vela Samayamu Gaadu

Anupallavi:

Baala Kanakamaya Chela Sujana Paripaala Shree Ramaalola Vidhruta Sharajaala
Shubada Karunaalavaala Ghananeela Navya Vana Maalikaa Bharana (Ela)

Charanam:

Raaraa Devaadi Devaa! Raaraa Mahaanubhaava Raaraa Raajeeva Netraa Raghuvara Putraa
Saaratara Sudhaa Pura Hrudaya Parivaara Jaladhi Gambheera Danuja
Samhaara Madana Sukumaara Budha Janavihaara Sakala Shrutisaara Naadupai
(Ela)

Meaning:

Lord! How ("ela") will you ("nee") not ("raadu") shower your grace ("daya") !
This is not ("gaadu") the time ("samayamu") to be careless ("paraaku jese") and forget me!

Baala kanaka maya chela sujana - One adorned ("chela") with rich golden ("kanaka maya") garments!
Protector ("paripaala") of the virtuous ("su-jana") !
joy ("lola") of Lakshmi ("Shree Ramaa")!

Wielder of arrows ("vidhruta sharajaala") !

The kind bestower ("karunaalavaala") of auspiciousness ("shubada")!

Treasure of companion! the one who has the color of the dark rain-bearing clouds ("Ghana-neela")!

adorned ("bharana") with the eternally new ("navya") garland ("vanamalikaa")!

O Deva among the celestials ("devaadi")! Come ("raara").

One with great reputation ("mahaanubhava")!

Lotus-eyed ("raajeeva-netraa")! Come ("raara").

One belonging ("putraa") to the solar race ("raghuvara")!

One who is surrounded ("saaratara") by family ("parivaara") whose whose hearts are filled with ("poora") nectar ("sudhaa")!

One who is as majestic ("gambheera") as the ocean ("jaladhi")!

Destroyer ("samhaara") of Asuras ("danuja")!

One as beautiful ("sukumaara") as Cupid ("madana")!

One who lives ("vihaara") with the wise ("budha") people ("jana")!

Essence ("saara") of all ("sakala") the Vedas ("sruti")!

Upon singing ("naadupai") your praises, how can you not shower your grace ("ela nee daya raadu") ?

Tuesday 15 September 2009

பார்க்க வேண்டிய நிகழ்ச்சி



ஏசியாநெட் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் Idea Star Singer கர்நாடக சங்கீதத்தில் விருப்பம் உள்ள அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. மிக திறமையான பாடகர்கள், கர்நாடக சங்கீதம் நன்கு அறிந்த நீதிபதிகள் என்று மிக அற்புதமான குழு கொண்ட நிகழ்ச்சி.

ஷிபு என்ற கண் பார்வை இல்லாத இளைஞர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறார். மிக நல்ல குரல்வளம் இவருக்கு. நேற்று "பூமாலை வாங்கி வந்தான்" பாடினார். நன்றாக இருந்தது. ஜோத்சனா என்ற பெண் நேற்று தோடி ராகத்தில் செய்த ஆலாபனையும் பிரமாதம்.இவர் தான் நன்றாக பாடுகிறார் என்று எவரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அனைவருமே சங்கீதத்தில் நல்ல பயிற்சி உள்ளவர்கள்.இந்த போட்டியில் வெல்பவருக்கு திருவனந்தபுரத்தில் ஒரு கோடி ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைக்கும்.நேரம் இருந்தால் நிகழ்ச்சியை அவசியம் பாருங்கள்.

Austerity Drive - Don't compromise on Security

Thanks to Pranab Da's austerity drive, the UPA ministers have all got into cost cutting mode. We see the UPA chairman Sonia Gandhi flying to Mumbai in Economy class from Delhi and her son Rahul Gandhi traveling to Ludhiana in Shatabdhi Express Chair car. On the other hand, we have S.M.Krishna traveling to Belraus in Economy class and also reducing the size of his accompanying team to 2 from 20.

Whether the reasons for adopting this lifestyle are legitimate or is a public stunt to impress the aam aadmi, it has definitely went down well with the masses. We see this lady in NDTV describing how she felt to see Rahul sitting close to her on the train. It all looks good but but but let us make sure that these actions do not result in elements with vested interests being empowered to access our leaders. S.M.Krishna and Shashi Tharoor may not be in the hitlist but the same may not be the case with Sonia and Rahul.So, let our leaders not compromise on security as part of their initiative to practice austerity.

Monday 14 September 2009

தெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மேலே உள்ள தலைப்பின் எதிர்ப்பதம் மிக பிரபலம். எதை வைத்து அன்று வடக்கு வாழ்கிறது என்று சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால், இன்று என்னை போல தெற்கில் இருந்து வருபவர்களுக்கு வட மாநில மக்களின் வாழ்க்கைத்தரம் அதிர்ச்சியளிக்கிறது.

வட மாநிலங்கள் என்று நான் சொல்லும் போது டெல்லியை மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். தேசிய தலைநகரம் என்கிற வகையில் டெல்லி ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், டெல்லியை விட்டு சற்று தள்ளி உள்ள ஹரியானாவை எடுத்துக்கொள்வோம். ஒரு நாளில் குறைந்தது பத்து மணி நேரம் இங்கு மின்சாரம் இருப்பதில்லை. போக்குவரத்து வசதிகளோ மிக மிக குறைவு. நான் இருக்கும் குர்கான் ஹரியானாவை சேர்ந்தது. டெல்லியிலிருந்து இருபத்தைந்து அல்லது முப்பது கிலோமீட்டர் இருக்கலாம். ஆனால், இங்கிருந்து டெல்லிக்கு நேரடி பேருந்து கிடையாது. சென்னையை எடுத்துக்கொள்வோம். எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் அமைந்திருக்கும் மத்திய சென்னையை அடையலாம். நீங்கள் ஆவடியில் இருந்தாலும் சரி, தாம்பரத்தில் இருந்தாலும் சரி சென்ட்ரல் வருவதற்கு நேரடி பேருந்து வசதி உண்டு.

வார இறுதியில் ஆக்ரா சென்றிருந்தேன். உத்திர பிரதேசத்தை சேர்ந்தது. இங்கு ஊரை சுற்றிப்பார்க்க பேருந்து வசதி கிடையாது. எங்கு சென்றாலும் ஆட்டோ அல்லது ரிக்க்ஷாவில் தான் செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தாஜ் மகாலை காண ஆண்டு தோறும் வருகிறார்கள். இவர்கள் தங்க நல்ல விடுதிகளோ அல்லது பயணம் செய்ய பேருந்துகளோ கிடையாது. இங்கும் ஒரு நாளில் குறைந்தது பத்து மணி நேர மின்சார வெட்டு. இந்த ஊரில் பலர் மின்சார கட்டணம் செலுத்துவதே இல்லை. இவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் வீட்டின் அருகில் ஒரு குழு அமைத்து மின்சார கட்டணம் கட்ட வாரீர் வாரீர் என்று அழைப்பு விடுக்கிறது. அந்த அழைப்புக்கு செவி சாய்த்து மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் மிக சிலரே. வோட்டை மனதில் கொண்டு அரசு இவர்களின் மின்சார இணைப்பை துண்டிப்பதும் இல்லை.

வெளியூர்களிலிருந்து பிழைப்புக்காக உத்திர பிரதேசம் வரும் மக்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் குடிசை அமைத்து தங்குகின்றனர்.இவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் உள்ள வீடுகளின் மின் இணைப்புகளில் இருந்து எடுத்து கொள்கின்றனர். இவர்களையும் அரசு கண்டுகொள்வதில்லை.

கவுன்சிலர், நகராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் என்று பலரும் தங்கள் பாதுகாப்புக்கென்று நாட்டு துப்பாக்கி வைத்து உள்ளனர். ஜாதி பலம் காட்ட துப்பாக்கி வைத்திருப்பவர்களும் உண்டு. ஆக்ராவில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர் உள்ள ஜாதி சங்க தலைவர்களை காண்பது சர்வ சாதாரணம்.

தார் சாலை என்பதை உத்திர பிரதேசத்தில் பார்க்கவே முடியாது. எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இங்குள்ளவர்களை கேட்டால் இது பரவாயில்லை, தலைநகர் லக்நோ இதை விட மோசமாக இருக்கும் என்கிறார்கள்.உத்திர பிரதேச பேருந்துகள் வாய் இருந்தால் கதறி அழும்.அந்த அளவுக்கு மோசமான பராமரிப்பு.சென்னை பேருந்துகளின் தரத்தை நினைத்துக்கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்த பொது கழிப்பிடத்தில் சிறுநீர் செல்ல ஐந்து ருபாய். நாற்றமோ குடலை பிடுங்குகிறது.

சரி, பேருந்து தான் இப்படி இருக்கிறதே என்று ஆக்ராவில் இருந்து ரயிலில் டெல்லி செல்லலாம் என்று முடிவு செய்து ஆக்ரா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டேன். விசாகப்பட்டனத்திலிருந்து அம்ரித்சர் செல்லும் ஹிரகுத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வர, அதில் ஏறிக்கொண்டேன். அவசரத்தில் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியதால் பயணச்சீட்டு ஆய்வாளரிடம் மாட்டிக்கொண்டேன். முந்நூறு ருபாய் அபராதம் என்றார். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி பொது பெட்டியில் ஏறிக்கொள்கிறேன் என்றேன்.உங்களை பார்த்தால் படித்தவர் போல் இருக்கிறீர்கள், பொது பெட்டியில் உங்களால் பயணம் செல்ல இயலாது என்றார். ஏன் என்றேன்? அங்கே குழந்தைகள் பெட்டியிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழித்துள்ளன. டெல்லி சென்ற பின்பு தான் அதை சுத்தம் செய்வார்கள். இப்போது தான் அங்கிருந்து வருகிறேன் என்றார். ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு இங்கேயே இருங்கள் என்றார். ஆனால், இருக்கை கிடைக்காது. படிக்கட்டு அருகே நின்று கொண்டே வர வேண்டும் என்றார். சரி என்று சொல்லி ஐம்பது ரூபாய் தந்தேன். படிக்கட்டு அருகே ஏற்கனவே நிறைய பேர் இருந்தனர். பலர் அங்கேயே பீடி, சிகரெட் புகைத்தபடி இருந்தனர். பெண்கள் சிலர் இயற்கை உபாதைக்காக பாத்ரூம் வர, அவர்களை கண்டபடி கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பழக்கம் போலும். இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

எத்தனையோ முறை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், பெட்டியில் பயணிகள் புகைத்து பார்த்ததில்லை. மேலும், ரயிலையும் ஓரளவுக்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறார்கள். நான் சொல்வது குளிர் சாதன பெட்டியல்ல. சாதாரண பதிவு செய்யப்பட்ட பெட்டிகள். ரயிலில் பெண்களை கிண்டல் செய்வதெல்லாம் மிக மிக குறைவு. மருந்துக்கு கூட டாக்ஸி, ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலான டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனர்கள் ஆங்கிலம் பேசுவார்கள். இங்கே நம்மிடம், இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி, முடிந்தால் அதில் பேசு என்கிறார்கள். நான் இந்தியன்,என்னிடம் அவர்கள் இதை சொல்வது நியாயம் தான்,ஆனால் வெளிநாட்டு பயணிகளிடம் இதை சொல்லமுடியாதே.

தெரிந்த ஒரு நண்பரிடம், ஏன் வட மாநில மக்களின் வாழ்க்கைதரம் இப்படி இருக்கிறது? படிப்பறிவு இல்லை என்பதை மட்டும் இதற்கு காரணமாக சொல்லாதீர்கள், தமிழகத்திலும் படிப்பறிவு ஒன்றும் பெரிய அளவில் இல்லை, ஆனால் இங்குள்ள மக்களை விட அங்குள்ளவர்களிடம் கொஞ்சம் முதிர்ச்சி இருக்கிறதே என்றேன்? அவர் சொன்னார், "உங்க ஊர்ல அரசியல்வாதிகள் ஐம்பது ரூபாய்க்கு சாப்பிட்டால் ஐம்பது ரூபாய்க்கு உங்களுக்கு எதாவது செய்கிறார்கள். ஆனால், இங்கே மக்களுக்கு அரசால் எந்த பயனும் இல்லை. அதே போல் மக்களுக்கும் அரசிடம் என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே அரசு நமக்கு செய்யும் பெரிய உதவி என்று நினைக்கிறார்கள். அரசும், இவர்கள் நம்மை இம்சை பண்ணாத வரை நிம்மதி என்று இருக்கிறார்கள். இது தான் இவர்கள் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றார்.நல்ல வேளை தமிழ்நாட்டில் இருக்கிறேன் என்று நினைத்தேன்.