Saturday 8 December 2012

வலியின் வரிகள்

Viktor Frankl எழுதிய "Man's Search For Meaning" புத்தகத்தை படிக்க நேர்ந்தது. Neurology மற்றும் Psychiatry துறை பேராசிரியராக வியன்னா பல்கலைகழகத்தின் மருத்துவப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை பணிபுரிந்தார் Frankl. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசி ஆட்சி ஏறத்தாழ அறுபது லட்சம் யூதர்களை Concentration மற்றும் Extermination camps மூலம் கொன்று குவித்தது.ஆஸ்திரியாவில் தன் மனைவியுடன் கைது செய்யப்பட்டு Auschwitz Concentration கேம்பிற்கு மாற்றப்பட்டார் Frankl.அடுத்த மூன்று ஆண்டுகள் Auschwitz, Dachau மற்றும் வேறு சில Concentration கேம்ப்களில் இருந்தார் Frankl. Holocaust என்று அழைக்கப்படும் இந்த கொலைகளில் இருந்து தப்பிய ஒருவர் தான் Frankl.

Man's Search For Meaning அவரது மூன்றாண்டு கேம்ப் அனுபவங்களை பற்றியது. மனித வாழ்க்கையில் எத்தனை துன்பம் நேர்ந்தாலும், மனிதன் தன் வாழ்வின் அர்த்தத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்கிறார் Frankl. புத்தகத்தில் பல இடங்களில் ஜெர்மன் வேதாந்தி நீட்ஷேவின் எழுத்துக்களை குறிப்பிடுகிறார் Frankl. "He who has a Why to live for can bear almost any How" என்னும் நீட்ஷேவின் வரிகளை, எந்த நிலையிலும் வாழ்வாசை கொள்ள வேண்டும் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

கூட்டம் கூடமாக விஷவாயு பீழ்ச்சி கேம்பில் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள், இரக்கமற்ற ஹிட்லரின் கைகூலிகளும் அவர்கள் கேம்பில் இருந்தவர்களை நடத்திய விதமும் பற்றியெல்லாம் படிக்கும் போது மனம் கனக்கிறது. வாழ்வில் விரக்தி அடைந்த பலருக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது இந்த நூல்.