Friday 20 January 2012

எனக்கு பிடித்த நகுலன் கவிதைகள்...


இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

-------------------------------------------

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

Thursday 19 January 2012

துக்ளக்

நீங்கள் அ.தி.மு.க மற்றும் சோ இருவரையும் வெறுப்பவராய் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு சினிமா மற்றும் ஆன்மீகத்தில் விருப்பம் உண்டெங்கில் துக்ளக் உங்களை கவர இரு புதிய பகுதிகளை அறிமுகம் செய்துள்ளது. எம்.ஜி.யார் பற்றி வாலி எழுதும் புதிய கட்டுரை சென்ற வாரம் தொடங்கியது. முதல் கட்டுரையே அமர்க்களம். பெரிய பீடிகையுடன் ஆரம்பித்துள்ளார் வாலி. அதே போல, வரும் இருபத்தியாறாம் வரவுள்ள இதழில் இருந்து திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களும் துக்ளக்கில் ஒரு புதிய ஆன்மீக பகுதியை ஆரம்பிக்கிறார்.படித்து ரசியுங்கள்.

Wednesday 18 January 2012

ஒரு பின்நவீனத்துவ நாவலில் விடுபட்ட பொங்கல் பலன்கள்

இந்த வருட சங்கராந்தி பலன்கள்

மகர சங்கராந்தி புருஷர் ஸ்த்ரீருபமாய் 3-முகங்கள்,4-கால்கள்,வளைவான புருவமும் , கருப்பு முடியும், 3 -வாய்களும்,8-கைகளும் ,2-கால்களும் நிதானமாக ஆலோசனையுடன் கருப்பு சரீரத்துடன் துவாங்கிசி என்ற பெயரில் திடகாத்திரமான சரிரத்துடன் வேப்பங்குச்சியில் பல்துலக்கி பிரசாத்தி பெற்ற ஜலத்தில் குளித்து , அலரி பூ,தவனம்,வெள்ளை சம்பங்கி,கஸ்தூரி கோரஜனம்,லவங்கம்,பன்னீர்,வாசனை திரவியங்களை சுத்த ஜலத்தில் கலந்து மீண்டும் ஆற்றில் சுத்த ஜலத்தில் ஸ்நானம் செய்து பன்னீர் அபிஷேகத்துடன் உடலுக்கு சந்தனம் ,கதம் பொடி,வாசனை திரவியம் ,குங்குமமப்பூ, புனுகு,தைல வகை பூசிக்கொண்டு இளநீர் மற்றும் தேங்காய் சாதம் புசித்து , வெள்ளை பாயாசம் ஆயாசம் தீர சாப்பிட்டு , ஆகாயத்தையும் பூமியையும் கண்களால் பார்த்து சிகப்பு வஸ்திரம் அணிந்துகொண்டு நெற்றியில் மஞ்சள்குங்குமம் ,அட்சதை பொட்டாக திருநீறு நெற்றியில் வைத்து , சம்பங்கி பூ மாலை அணிந்து, நவரத்தினம் மாலை ஆபரணம் அணிந்து , சொர்ண ஆபரணம் அணிந்து, மயில் குடை பிடித்து, சகல ஜாதி புடை சூழ , மயில் வெண்சாமரை பிடித்து , ஈயபாத்திரத்தில் தேங்காய் அன்னம் புசித்து , வாழைப்பழம் தின்று,கிழக்கு திசை நோக்கி வேத மந்திரம் மற்றும் பஜனை கோஷ்டியுடன் மங்கள வாத்தியம் பூமியை பார்த்து கிழக்கே அமர்கிறார். பொங்கல் பால் இவ்வாண்டு பொங்கல், பால் கிழக்கே பொங்கும் கவனிக்கவும்.

In mathematics, the Pythagorean theorem or Pythagoras' theorem is a relation in Euclidean geometry among the three sides of a right triangle (right-angled triangle). In terms of areas, it states:

In any right triangle, the area of the square whose side is the hypotenuse (the side opposite the right angle) is equal to the sum of the areas of the squares whose sides are the two legs (the two sides that meet at a right angle).

எங்கும் நல்ல மழை பொழியும் , கீழ்காற்று , அதிகமான விமான விபத்துகள் அயல்நாட்டார் அதிக முதலீடுகள் செய்வர். ரச வர்க்கம் சிறிதளவு விலை ஏறி குறையும் , ஆன்மீகவாதிகளுக்கு பலவகையில் தொந்தரவுகளுக்கும் , வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு நிம்மதியும் , கருப்பு பணம் வைத்திருக்கும் தனவந்தர்களுக்கு அரச அதிகாரிகளால் கெடுபிடி அதிகமும் , ஜீவராசிகளுக்கு நன்மையையும் , கால்நடைகள் கோமாரியால் பாதிக்கும். உத்தராயனத்தில் மின்னல் இடி அதிகமும், மூட்டை பூச்சி , புழு, சர்ப்பம் அழிதலும் , சைவ உணவு விடுதி அதிகரிக்கும். கடல் வாணிகத்தில் அதிக லாபம் இருக்கும். கடல் கொந்தளிப்பால் சுமத்ரா,ஜப்பான்,இலங்கை,அந்தமான்,நாகப்பட்டினம்,சென்னை,கல்பாக்கம்,நாகர்கோயில்,கன்னியாகுமரி,காரைக்கால்,பாண்டி, கடலூர்,வடமதுரை பாதிப்பும் ஏற்படும். எங்கும் பழைய புராதன கோவில்களுக்கு குடமுழுக்கு மற்றும் பழைய ஆலயங்களை சீர்திருத்தம் செய்வர். எங்கும் பூரான்,பாம்பு,பல்லி விருத்தியாகும்.

Fauvism is the style of les Fauves (French for "the wild beasts"), a short-lived and loose group of early twentieth-century Modern artists whose works emphasized painterly qualities and strong colour over the representational or realistic values retained by Impressionism.




பூர்விக தேவாலயங்களில் இடி விழும், மலை பிரதேசங்களுக்கு பலவகையில் சேதாரமும் கம்ப்யூட்டர் வகைகளுக்கு அதிக அளவில் வியாபாரம் ஆகும்.மேற்கு திக்கில் (கேரளா) பாதிப்பு . பறவைகளின் கூட்டத்தை சில குரவர்கள் துப்பாக்கியால் சுட்டு இனத்தை அழிக்கக் நேரும். பெண்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் கடுமையாக பாதிக்கும்.

பிட்டு

யோனிப்பொருத்தம்:
நக்ஷத்திர யோனிகள் குறிப்பிட்டபடி யானைக்கு சிங்கம் மனிதர் , குதிரைக்கு பசு, எருமை பசு கடா மான் நாய் இவைகளுக்கு புலி, குரங்குக்கு ஆடும் , எலிக்கு பூனையும் பாம்பும் , பூனைக்கு புலியும் நாயும் பகையாம்.மற்றவை நட்பாகும்.இரண்டு புருஷ யோனிகள் கூடாது. பெண் ஸ்த்ரி யோனியும் , புருஷன் ஆண் யோனியும் உத்தமம் . மாறி இருந்தாலும் கூடாது, இருந்தால் அன்னியோன்னிய அந்நிய சிநேகம்.

                                                 A Z H M





(தங்கள் நக்ஷத்திர மிருகம் பற்றி தெரிந்து கொள்ள தனியாக சுயவிலாசமிட்ட கவருடன் கடிதம் அனுப்பவும்).

Monday 16 January 2012

பார்த்தசாரதி - ஒரு விளக்கம்

வெள்ளியன்று மாலை ஜெயா டிவியின் மார்கழி மாத நிகழ்ச்சியில் டாக்டர்.சுதா சேஷையன் அவர்கள் கீதை குறித்து பேசிக்கொண்டிருந்தார். "திருதிராட்டிரனுக்கு புறப்பார்வை கிடைத்தது ஆனால் அதை சஞ்சயனுக்கு கொடுத்து விட்டான் அவன் ஆனால் கடைசி வரை அவன் அகக்கண் திறக்கவே இல்லை, மாறாக அர்ஜுனனுக்கு அகக்கண் திறந்தது அதுவே கீதை பிறக்க வழியாயிற்று" என்றார்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில் பார்த்தசாரதி என்கிற நாமத்திற்கு ஒரு அற்புதமான விளக்கம் தந்தார். இதுநாள் வரை "பார்த்தனுக்கு சாரதி" ஆகையால் பார்த்தசாரதி என்று கேட்டு வந்துள்ளோம். சுதா சேஷையன் அவர்களோ, "குந்தி சூரசேனன் மகள். சூரசேனனின் மகன் தான் கிருஷ்ணரின் தந்தை வசுதேவர். ஆகையால், கிருஷ்ணரின் அத்தை குந்தி. வாரிசு இல்லாத குந்திபோஜ மகாராஜாவுக்கு தத்து மகளாக தரப் பட்டாள் ப்ரிதா. அதனால் குந்தி என்ற பெயர்.

குந்தியின் இயற்பெயர் ப்ரிதா. ப்ரிதா என்றால் பூமி. ப்ரிதையின் மகன் அர்ஜுனன். பூமியின் மகன் அர்ஜுனன். ஆக, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாது பூமியில் பிறந்த நம் அனைவருக்கும் சாரதியாக கண்ணன் அருளியதே கீதை. இதைப் படிக்கும் போது வரும் உணர்வு எத்தகையது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் சுதா சேஷையன் சொன்ன விதம் மெய் சிலிர்க்க வைத்தது.

பரமபத சோபன படம்





குழந்தைகள் விளையாடுவதற்காக என் தந்தை பரமபத சோபன படமும் பித்தளையில் தாயக் கட்டையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். நேற்று மதியம் வெகு நேரம் நானும் என் மகளும் விளையாடிய போதும் வெற்றி பெறவில்லை. என் மகள் அருகஷனிடம் (பரமபதத்தின் பெரிய பாம்பு) இரண்டு முறை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியதால் விளையாட்டே வேண்டாம் என்று சென்றுவிட்டாள்.

சரி பரமபதம் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் என்று வலையை துழாவினேன். "இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும் தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கலாம்." என்கிறது விக்கி.

சிறு வயதில் வைகுண்ட ஏகாதசி இரவன்று பரமபதம் விளையாடி இருக்கிறேன் ஆனால் அதிலுள்ள படங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு கட்டத்திற்கும் ஒரு படம் உள்ளது. அது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை. அந்த பெரிய பாம்பின் பெயர் அருகஷன் என்று தெரியும் ஆனால் ஏன் அந்தப் பெயர் என்று தெரியவில்லை. பரமபதம் விளையாட்டு பற்றிய விபரமுள்ளவர்கள் தெரிவிக்கவும்.