Saturday 19 April 2008

தமிழ் புத்தாண்டு

சில காலம் முன்பே இந்த செய்தியை படித்தேன் ஆனால் ஏனோ இதை விட்டு விட்டேன். கருணாநிதி தைப்பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து இருப்பதை பற்றியே இந்த கட்டுரை.

இந்த அறிவிப்பால் மக்களுக்கு என்ன நன்மை வரப்போகிறது என்று பலர் கேட்கலாம், ஆனால் அந்த கேள்வி கேட்கும் நேரத்தை,வீரத்தை,உரிமையை இழந்து விட்டோம் என்பதுதான் உண்மை.

சில பேர் இந்த மாற்றத்தினால் தமிழர்க்கு வாழ்வில் எந்த மற்றம் வரப்போகிறது என கேட்கிறார்கள் (உ.தா.விஜயகாந்த்), இது ஒரு வகையில் பரவலாக கேட்கப்படும் கேள்வி, ஆனால் மேம்போக்கான கேள்வி.

சில பேர் இதை திராவிட அரசியலாக பார்த்து கருணாநிதியை துக்ளக் ஆகவும் ஆவுரங்கசீப் ஆகவும் சொல்கிறார்கள், இது சற்று நுட்பமான கேள்வி.கேட்க வேண்டிய கேள்வி.சிலர் (ஜடாயு, சோ போன்றவர்கள்) இதனை எதிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் , இது மிக அவசியமான வாதம், அர்த்தமுள்ள வாதம்.நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வாதம்.

ஆனால் இதனை எல்லாம் தவிர்த்து மிகவும் ஆழமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பிரச்சினையின் bigger picture.

ஒரு மாநிலத்தை இந்தியாவிலிருந்து எப்படி பிரிக்கலாம்? நடைமுறையில் இது சாத்தியம் இல்லை அல்லவா? அப்படி பிரிப்பது என்று நினைத்தால் இந்திய அரசாங்கமும் ராணுவமும் என்ன செய்யும்? முதலில் சாலைகளை துண்டிக்கும், ரயில் போக்குவரத்தை துண்டிக்கும், விமான சேவையை துண்டிக்கும், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களை திரும்ப அழைத்து கொள்ளும். மத்திய அரசு அலுவலங்களை மூடும்... இப்படி பட்டியல் நீளும்.

கருணாநிதிக்கு இப்படி தமிழகத்தை அரசியல் ரீதியாக ராணுவ ரீதியாக பிரிப்பதற்கு துணிச்சல் இல்லை . அதனால்தான் ஒரு சுதந்திர நாட்டை ஆளும் அதிர்ஷ்டத்தை விட்டு விட்ட ஆத்திரத்தில் தமிழ்நாட்டை கலாச்சார ரீதியாக பண்பாட்டு ரீதியாக இந்தியாவில் இருந்து பிரித்து விட நினைக்கிறார்.

தமிழ்நாடு இந்தியாவில் எப்படி இணைந்து இருக்கலாம் என பார்த்தால்,

மொழியால் இணையலாம் (எல்லோரும் ஹிந்தி கற்று கொண்டால்!).
எனவே மொழி எதிர்ப்பு போர்.


மதத்தால் இணையலாம் (பெரும்பான்மை ஹிந்துக்கள் அல்லவா?)
எனவே நாத்திக வாதம்.ஹிந்து மத எதிர்ப்பு .


மதம் சார்ந்த கலாச்சாரத்தால் இணையலாம் (தீபாவளி, தமிழ் வருட பிறப்பு (யுகாதி) போன்றவற்றால்).

எனவே தீபாவளி கொண்டாடுவதை நிறுத்துங்கள் பொங்கலை கொண்டாடுங்கள், தமிழ் புத்தாண்டை மாற்றுங்கள்.

நல்ல காலம் தமிழர்கள் எல்லோரும் முறுக்கிய மீசை வைத்து இருக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டார் அதை நினைத்து சந்தோஷப்பட வேண்டியதுதான்.

ஆனால் இந்திய அரசின் எல்லா அதிகாரங்களை அனுபவித்துக்கொண்டு ஆனாலும் ஒரு சுதந்திர நாட்டை ஆளும் ஆசை பேராசை, அது இந்தியாவில் வகிக்கும் எந்த கட்சிக்கும் வராத பேராசை.வட கிழக்கில் வந்தது புறக்கனிக்கப்பட்டதால் வந்த ஆவேசம். தமிழ்நாட்டையும் வடகிழக்கையும் ஒப்பிடவே முடியாது.

கருணாநிதியின் மாற்றங்கள் எவ்வளவு மேம்போக்காக உள்ளது என்பது தமிழ்நாட்டில் சில விஷயங்களை பார்த்தாலே தெரியும்.
தமிழக கிராமங்களில் மிகப்பரவலாக இரட்டை டம்ளர் முறை உள்ளது.திண்ணியத்தில் தலித் ஒருவரை மலம் தின்ற வைத்த கொடுமையும் சமீபத்தில்தான் நடைபெற்றது.இது கருணாநிதி உட்பட அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் அதனை ஒழிப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார். இது எவ்வளவு பெரிய paradox? ஒரு பக்கம் ஹிந்து மதத்தை கலாச்சார ரீதியாக தமிழகத்தில் கடுமையாக ஒடுக்க நினைக்கும் இவர், மறுபக்கம் இரட்டை டம்ளர் முறையை ஆதரிக்கிறார், அதனை மாற்ற மிக மிக லேசான நடவடிக்கைகளை மட்டுமே எடுப்பார். இல்லையென்றால் இவ்வளவு மோசமான ஹிந்து மத எதிர்ப்பு வாதம் இருக்கும் மாநிலத்தில் இரட்டை டம்ளர் முறை இருக்குமா? மலம் தின்ற வைத்த கொடுமை நடக்குமா?


கருணாநிதியும் திராவிட கொள்கைகளும் எவ்வளவு போலியானவை என்று இதனை பார்த்தாலே தெரிந்து விடும்.மக்களை திசை திருப்ப அவ்வப்போது ஹிந்து மத எதிர்ப்பு வாதத்தில் இறங்கும் கருணாநிதி அந்த எதிர்ப்பை தனது வேட்பாளர் விஷயத்தில் காட்டியதே இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை ஜாதி வேட்பாளருக்கே வாய்ப்பு அளிப்பார். இதனை ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. அப்போது எங்கே போனது இந்த ஹிந்து மத எதிர்ப்பு?

Thursday 17 April 2008

தசாவதாரம் - இன்னொரு ஆளவந்தான் - ஒரு அலசல்

கோகுல்,

உன் தசாவதாரம் கட்டுரை ஒரு தலை பட்சமாக உள்ளது என்பது என் கருத்து. எனவே அதற்கு எதிர்வினையாக சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

தசாவதாரத்தின் விளம்பரத்திற்கு முக்கிய காரணம் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தானே தவிர கமல் இல்லை. ஏவிஎம் போலவே திரைபடங்களை இன்று மார்க்கெட்டிங் செய்வதில் ஆஸ்கார் பிலிம்ஸ் பெயர் பெற்ற நிறுவனம். உதாரணம் அந்நியன், சித்திரம் பேசுதடி, டிஷ்யூம், தம்பி, வேட்டையாடு விளையாடு போன்றவை. ௨006 வருடத்தின் பல வெற்றி படங்கள் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தால் மார்க்கெட்டிங் செய்யப்பட்டவை. ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்த்ரனின் சகோதரர் ஜாக்கி சானுக்கு அறிமுகமானவர் என்பதால் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜாக்கி சான் சம்மதித்தார். கமல் நிச்சயமாக ஜாக்கி சான் என்னும் நடிப்பே தெரியாத ஒருவரை அழைக்க சம்மதிக்க மாட்டார் என்பது என் எண்ணம்.

மேலும் கமலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நிச்சயமாக கமலை பற்றியும் அவர் தனது படங்களின் அனைத்து துறையிலும் தலையிடுவார் என்பதையும் நன்கு உணர்ந்தவர்கள். அப்படி இருக்க ஏன் கமலை நம்பி பணத்தை இறைத்து விட்டு பின்பு புலம்ப வேண்டும்? ஆளவந்தான் பட பூஜை இன்விடேஷன் மட்டுமே ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாய். கமல் தாணுவை இப்படி செலவு பண்ண வேண்டாம் என்று கூறியதை தாணுவே பத்திரிகைகளில் ஒப்பு கொண்டுள்ளார்.

சராசரி திரைபடங்களை பக்கா கமர்ஷியல் திரைப்படம் என்று நீ கூறுவது வேதனையளிக்கிறது. கமல் போக்கிரி அல்லது சிவாஜி போல ஒரு படம் செய்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் நினைத்து பார். அதே சமயத்தில் கமலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் formatai தாண்டி வந்தவர் தான். குரு, சங்கர்லால், அலாவுதீன், வாழ்வே மாயம், மகராசன், சிம்லா ஸ்பெஷல் போன்றவை சில உதாரணங்கள். இத்தருணத்தில் சினிமாவை மக்கள் பார்க்கும் விதத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கமலின் பெரும்பாலான திரை சோதனைகள் தனது சொந்த செலவில் செய்யப்பட்டவை. விருமாண்டி, ஹே ராம், ராஜபார்வை போன்றவை சில உதாரணங்கள். ஹேராமின் தோல்வி எனக்கு புரிகிறது ஆனால் அன்பே சிவத்தின் தோல்வி எனக்கு வருத்தமளிக்கிறது. ஒரு நல்ல சினிமாவை புரிந்து கொள்ள முடியாத தமிழ் சமூகத்தை எண்ணி வேதனை தான் உண்டாகிறது.

Monday 14 April 2008

தசாவதாரம் - இன்னொரு ஆளவந்தான்?

கமலின் தசாவதாரம் அளவிற்கு அதிகமான விளம்பரத்தை தேட முயற்சிக்கிறது. கமல் ரஜினியின் சிவாஜியை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேண்டாம் என யாரவது கமலுக்கு எடுத்து சொல்ல கூடாதா?

கமல் ஏற்கனவே ஆளவந்தானில் கெட்ட பெயர் சம்பாதித்து இருக்கிறார். கமலுக்கு உலக சினிமா அனைத்தும் தெரிந்து இருந்தாலும் கமலால் ஒரு பக்கா தமிழ் commercial படம் எடுக்கவே முடியாது, ஒரு விஜய் படம் போலவோ அல்லது ஒரு ரஜினி படம் போலவோ ஒரு விஜயகாந்த் படம் போலவோ அவரால் எடுக்கவே முடியாது (கமல் படங்கள் வித்தியாசமானவை, தரத்தில் உயர்ந்தவை என்பதெல்லாம் வேறு), எப்படி மற்றவர்களால் கமல் போல் செய்ய முடியாதோ அதே போல் கமலாலும் மற்ற ஹீரோக்களை மாதிரி செய்ய முடியாது இதுவே நிஜம்.உதாரணம் சிங்காரவேலன்,சத்யா,கலைஞன்,காதலா காதலா போன்ற படங்கள்.

கமல் மனதளவில் hollywood-ல் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறார், serious படம் இல்லையென்றால் படம் முழுக்க நகைச்சுவை, எல்லாம் சேர்ந்த கலவையே தமிழ் commercial அதை அவர் நினைத்து கூட பார்ப்பது இல்லை.

கமல் சொந்த ஈகோவிற்காக பணத்தை செலவழிக்கிறார். கமலால் ஒரு super duper hit (சந்திரமுகி, சிவாஜி போல) கொடுக்கவே முடியாது, தசாவதாரத்தின் பட்ஜெட் அதிகரிக்க அதிகரிக்க அது தோல்வி படம் என்பது நிச்சயம் ஆகிவிடுகின்றது, அது சுமாராக ஓடினால் கூட!

ரஜினி கூட ஷங்கர் படம் என்பதாலேயே அவ்வளவு hype கொடுக்க சம்மதித்து இருப்பார்.

கமலுக்கேன்று ஒரு பாணி இருக்கின்றது, அவர் சத்தம் போடாமல் வித்தியாசம் காட்டினால்தான் சாதனை இல்லையென்றால் ஒரு திறமையான கலைஞன் தேவையே இல்லாமல் அவமான பட வேண்டியதாக இருக்கும். மற்றவரையும் பொருளாதார ரீதியாக நஷ்டமடைய வைக்கும்.தெரிந்தே தோல்வியின் அளவை அதிகரித்து கொள்ளலாமா? இன்னும் சில மாதங்கள் கழித்து oscar v.ரவிச்சந்திரன் (தசாவதாரத்தின் தயாரிப்பாளர்) பத்திரிக்கைகளில் கமல் செய்த வீண் செலவு பற்றி பேட்டி கொடுப்பார், இது தேவையா?


கமலே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் ரஜினி ஓடுவது 100 meter race , தான் ஓடுவது marathon race , எனவே compare செய்ய வேண்டாம் என்று. எனவே Marathon race ஓடும் கமல் 100 meter race-ல் கலந்து கொள்ள வேண்டாமே!

இதையும் தாண்டி தசாவதாரம் ஒரு ஹிட் படமாக ஆனால் ஒரு கமல் ரசிகன் என்ற முறையில் எனக்கு சந்தோஷமே.