Saturday 7 August 2010

இந்தியாவில் பணம் - குரங்கு கையில் பூமாலை

டெல்லி common wealth games பற்றி படிக்கும்போது மனதில் தோன்றுவது என்ன? இந்திய அரசாங்கம் அதன்  கட்டமைப்பை மெல்ல இழந்து வருகிறது. ஒரு கம்பனி இருக்கிறது, அதன் Board of Directors தாம் நினைத்ததை கம்பனிக்கும் செயல்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றே அர்த்தம்.

சமீபத்தில் படித்த செய்தியில் 1990-2010 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 மடங்கு ஊழல் அதிகமாகி இருக்கிறது என்றிருக்கிறது ! இதன் காரணம் என்ன?

1982-யில் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் திறன் பெற்ற நாடு பல பொருளாதார முன்னேற்றங்களுக்கு பிறகு 2010-ஆம் ஆண்டு common wealth games நடத்த முடியவில்லை என்றால் என்ன காரணம்?

90-களின் ஆரம்பத்தில் இருந்து காஷ்மீரில் அந்நிய சக்திகளை திறன்பட எதிர்த்த நாம், இன்று மாவோயிஸ்டுகளின் கையில் மிகவும் கேவலமான முறையில் அடி வாங்குவது எப்படி?

இதற்கு எல்லாம் காரணம் , நாம் நல்ல அதிகாரிகளின் மனதை கொன்று விட்டோம்! We , the middle class people , killed the morale of honest Indian Government officers!


ஆம் இதுதான் உண்மை நடுத்தர மக்கள் நேர்மையான அதிகாரிகளின் நம்பிக்கையை , அவர்களுக்கு தேவையான மிடுக்கை அவமானபடுத்தி விட்டார்கள். இது 90'களில் ஆரம்பித்து இந்த இருபதாண்டுகளில் உச்சிக்கு சென்று விட்டது.யாரும் பின்னால் வாங்கும் pension பற்றி யோசிக்க தயாராக இல்லை!

Liberization என்ற விஷயத்தின் ஒரு கொசுறு இது!  Socialism என்ற சித்தாந்தத்தில் இருந்து மெதுவாக capitalism நோக்கி திரும்பிய நாம், அதற்கான நல்ல பலன்களோடு அடைந்த மிகுந்த தீமையான பலன் இந்த நல்ல அதிகாரிகளின் மனசாட்சியை கொன்று புதைக்கும் விஷயமும். உலகமயமாக்கமும், எதிர்பாராது கிடைத்த "I.T" வேலை வாய்ப்பும், மக்களிடம் பெரும் பொருளாதார மாறுபாட்டை செதுக்க தொடங்கிய காலத்தில், நமது அதிகாரிகளின் மனோ நிலையை எண்ணி பாருங்கள் "நேத்து காலேஜ் முடித்தவன் ஒரு I.A.S சம்பளம் வாங்கினால், மாவட்ட அளவிலான (லஞ்சம் வாங்காத) அதிகாரிகளின் நிலை என்ன? எனக்கு தெரிந்து இது பற்றி எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் வாயை திறக்கவில்லை.

அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.

இந்த வருமான வித்தியாசத்தை கண்டு கொண்டு அரசாங்கம் சம்பளம் உயர்த்தியது 2000-களின் தொடக்கத்தில்தான் , இடைப்பட்ட காலத்தில் அதிகாரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள ஊழலை நோக்கி தள்ளப்பட்டனர், இங்கு சொல்லபடுவது அதுவரை ஊழல் செய்யாத அதிகாரிகளை பற்றி. இந்த நேரத்தில் அரசாங்க கிளார்க்குகள் என்ன செய்தனர் , தங்கள் பிள்ளைகளை அரசாங்க பதவிக்கு வரவேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது மற்றும், தாமும் வேலை செய்யாமல் "இதெல்லாம் ஒரு சம்பளமா?  வாழ்ந்தால் IT company ஊழியராக வாழ வேண்டும்" என்று பல் குத்திக்கொண்டு இருந்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கெட்டிக்கார மாணவர்கள் - அரசாங்க பதவிகள் வரும் தன்மை, இது பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம், முன்பெல்லாம் மாணவர்களின் லட்சியம் டாக்டர்,எஞ்சினியர், வக்கீல்
என்பதோடு IAS என்பதும் இருக்கும். அவ்வாறு 100 மாணவர்கள் நினைத்தால் அதில் அறிவிற்சிறந்த சில மாணவர்கள் அந்த பதவிக்கு வருவது சாத்தியமாக இருந்தது , ஆனால் இப்போது IAS என்பது அரசியல்வாதிகளுக்கு சலாம் போடும் வேலையாக பார்க்கடுகிறது, அந்த மாணவர்கள் அமெரிக்கா  போவதற்கு தயாரிக்க  படுகிறார்கள்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் வகுப்பில் படித்த எத்தனை கெட்டிக்காரர்கள் IAS அதிகாரிகள் ஆகி இருக்கின்றனர் என நினைத்து  பாருங்கள்!


இதே  நிலை PSU எனப்படும் Public Sector Unit-களிலும் வந்தது, பல engineers,மானேஜர்கள் பதவியை விட்டு நீங்கினர்! அந்த இடத்தை நிரப்பிய நபர்களின் தரம், விலகியவர்களின் தரத்துடன் சரியாக இருக்க முடியும் என்று எவரேனும் நினைக்க முடியுமா..? இதில் இன்னொரு விஷயம், அரசாங்க கருவூலத்தில் கிடைக்கும் அதிகப்படியான பணம், ஆகவேதான் சொல்கிறேன், இப்போதுள்ள இந்திய பணம் குரங்கு கையில் பூமாலை!

Thursday 5 August 2010

ப்ளாஷ்பாக் - 1

இன்று வரும் இளைஞர்களை போல் பொறியியல் முடித்துவிட்டு இந்த துறையில்(கணினி) நான் சேரவில்லை. நான் படித்தது வணிகவியல். என்னோடு படித்தவர்கள் CA, MBA, ICWA, ACS என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்த போது நான் கலைத்தாயிடம் ஒரே ஒரு கோரிக்கை தான் வைத்தேன். "இத்தனை வருஷம் என்ன எப்படியோ காப்பாத்திட்ட. இனிமே என்னால முடியாது. இவ்வளவு வருஷம் என் கூட இருந்ததுக்கு நன்றி" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டேன். என்னை மாதிரியே சிந்தித்த என் நண்பர்கள் சிலருடன் பொழுதை கழிக்க ஆரம்பித்தேன். என்ன வேலைக்கு போகலாம் என்று யோசித்து சேல்ஸ் தான் எங்களுக்கு சரியாக வரும் என்று தீர்மானம் செய்தோம். அந்த தொழிலில் நிறைய ஊர் சுற்றலாம் என்பதால் அதை தேர்ந்தெடுத்தோம்.

வாரம் தவறாமல் நாளிதழ்களை பார்த்து அதில் எங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தோம். ஒரு வழியாக சென்னை அண்ணாநகரில் இருந்த ஒரு மருந்து நிறுவனம், விற்பனை பிரதிநிதி வேலைக்கு என்னையும் என் நண்பனையும் நேர்முக தேர்வுக்கு அழைத்தது. உலக அனுபவம் கொஞ்சம் கூட இல்லாததால் எங்களை மட்டும் தான் அவர்கள் அழைத்திருப்பார்கள் என்று நினைத்து ஷு கூட அணியாமல் சென்ற எங்களுக்கு அங்கு கண்ட காட்சி பீதியளித்தது. "காதலுக்கு மரியாதை" விஜய் ரேஞ்சுக்கு வந்திருந்தனர் பலர். சிலரிடம் பேசிய போது அவர்கள் B.Pharm படித்தவர்கள் என்று தெரிந்தது. எப்படியும் வேலை கிடைக்க போவதில்லை, இருந்தாலும் பஸ் காசு செலவு செய்து வந்துவிட்டோம், இருந்து பார்த்து விட்டு போகலாம் என்றான் என் நண்பன்.

காலை பத்து மணிக்கு வந்த எங்களை ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்கு அழைத்தனர். எதற்காக எங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் பத்து நாள் பயிற்சி உள்ளதாகவும் அதற்கு நாங்கள் தகுதி பெற்று விட்டதாகவும் கூறி மறு நாள் வரும்படி சொல்லி அனுப்பினார்கள்.

அந்த நிறுவனம் தயாரித்த மருந்தின் பெயர் "சேபெக்ஸ்". அதை மருத்துவர்களிடமும் மருந்து கடைகளிலும் சென்று அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரிப்பதே நிறுவனத்தின் குறிக்கோள். நாள் முழுதும் வேலையில் மூழ்கியிருக்கும் மருத்துவர்கள் விற்பனை பிரதிநிதிகளை பார்க்க இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்குவார்கள். அந்த இரண்டு நிமிடத்தில் மருந்தின் பெயர் மருத்துவரின் மனதில் நிற்கும்படி செய்வதே விற்பனை பிரதிநிதியின் வேலை. அதற்குத்தான் பயிற்சி. குரல் பயிற்சி, மருந்தின் பெயரை உச்சரிக்க வேண்டிய விதம் போன்றவை பயிற்சியின் போது கற்றுத் தரப்படும்.

இந்த இடத்தில் நிறுவனத்தை பற்றி கொஞ்சம் கூற வேண்டும். அது ஒரு தனி நபர் நடத்திய நிறுவனம். பல ஆண்டுகளாக அந்த துறையில் இருந்து அவர் அந்த மருந்தை கண்டுபிடித்திருந்தார். பயிற்சி முடியும் நாள் வரை நாங்கள் அவரை சந்திக்கவில்லை. பயிற்சின் கடைசி நாளன்று அவர் வருவாரென்றும் அவரை மருத்துவராக கருதி நாங்கள் பயின்றதை செய்து காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு எங்களை எந்தெந்த ஊரில் விற்பனை பிரதிநிதிகளாக நியமிப்பது என்று அவர் முடிவு செய்வார் என்றார்கள். ஒரு வழியாக பயிற்சியும் முடிந்தது. பத்து நாளைக்கு பிறகும் சிலர் "சேபெக்சை" "சபக்ஸ்" என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

நிறுவனத்தின் உரிமையாளர் எங்களை சோதிக்க பயிற்சியின் இறுதி நாள் வந்தார். ஆறடி உயரத்தில் கருப்பாக இருந்தார். ஒரு வட்ட வடிவ மேஜையில் நாங்கள் சுற்றி அமர்ந்திருக்க அவர் நடுவில் எங்கள் அனைவரையும் பார்க்கும் படியான ஒரு கோணத்தில் அமர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் சரளமாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு எங்களை பற்றி கேட்டுக் கொண்டார். எங்களில் ஒருவரை அவரே தேர்வு செய்து இவர் என்னை மருத்துவராக பாவித்து நம் மருந்தை பற்றி ஒரு விற்பனை பிரதிநிதி போல பேசட்டும் என்றார்.

முதலில் பேச ஆரம்பித்த அந்த நண்பர், சபக்ஸ் என்ற உடனே, நம்ம முதலாளி, "டேய் பு.மவனே, பேரை ஒழுங்க சொல்லுடா, பத்து நாளா என்ன புடுங்கின என்றார்". எனக்கும் என் நண்பனுக்கும் தூக்கி வாரிப் போட்டது. அறையில் இருந்த அனைவர் முகத்திலும் பயம் அப்பிக் கொண்டது. முதல் நபர் வாங்கிய திட்டில் அடுத்த நபரும் பயந்து உளறத் தொடங்க, நிறுவனர் அவரை கொஞ்சம் சாந்தப்படுத்தும் விதம், "ஏன் பயப்படற, எந்த ஊரு உனக்கு, அப்பா என்ன செய்யறாரு என்றார்?". அவரும் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பி, "அப்பாக்கு எண்ணை விக்கறது தான் தொழில்" என்றார். "அப்போ அந்த மயிரையே புடுங்க வேண்டியது தான, ஏன்டா இங்க வந்து என் உசிர வாங்குற" என்று பாய்ந்தார்.

ஏற்கனவே கொஞ்சம் கோபம் அதிகம் உள்ள என் நண்பன் என்னிடம், "ஒ!!!, நம்மள எதாவது சொன்னான், மூஞ்சிலே மங்கேர் மங்கேர்னு ரெண்டு குத்து விடறோம்.சாயங்காலமே அவனை குடும்பத்தோட தூக்கறோம் மச்சான்" என்றான். எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது. ஒரு வழியாக எங்கள் முறை வந்த போது தொழிலதிபர் சோர்ந்து போய் இருந்தார்.
நானும் என் நண்பனும் சுமாராக எதோ பேசியதால் இருவரும் தேர்வானோம். சென்னையில் இருப்போம் என்று நினைத்த எங்களை தஞ்சைக்கும் மதுரைக்கும் போக சொன்னதால் அந்த வாய்ப்பை புறக்கணித்தோம். அதன் பின் கணினி கற்று இந்த துறைக்கு வந்ததெல்லாம் பெரிய கதை. இந்த பத்து வருடத்தில் எத்தனையோ நிறுவனங்கள், நேர்முக தேர்வுகள். ஆனால், மருந்து நிறுவன அனுபவத்தை மறக்கவே முடியாது.