Friday 2 October 2009

காந்தி பற்றி ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மகாத்மா காந்தியை பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறார் , பொதுவாக காந்தியை பற்றி வாசகர் வைக்கும் விமர்சனகங்களுக்கு பதில் என்ற வடிவில் மிக அடர்த்தியான கட்டுரைகளை எழுதுகிறார். பல கட்டுரைகளுக்கு நடுவில் இன்று நான் வாசித்த இந்த கட்டுரை ஒரு அற்புதம்; காந்தி என்ற பிரம்மாண்டமான ஆளுமையை தமிழில் விளக்க ஜெயமோகன் போன்றவர்களுக்குதான் சாத்தியம் போலும்...

                                   காந்தியும் - மகாத்மாவும்

Thursday 1 October 2009

ரூ. 50,000

நம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சில வாரங்களுக்கு முன்பு வரை தங்கி இருந்த ஹோட்டல் அறை வாடகை நாள் ஒன்றுக்கு ரூ. 50,000.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் பருத்தி விவசாயிகள் கடன் தொல்லையால் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டனர் , அப்படி செய்து கொண்டவர்களில் சுமார் 80% பேரின் அதிகபட்ச கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.50,000.

இந்த படமெல்லாம் நீங்க பார்த்து இருக்கிங்களா...?

1.மதுரை சூரன்
2.மெட்ராஸ் வாத்தியார்
3.தீர்ப்பு ஏன் கையில்
4.வெற்றி
5.நூறாவது நாள்
6.வேங்கையின் மைந்தன்
7.குழந்தை இயேசு
8.வெள்ளைப்புறா ஒன்று
9.நல்ல நாள்
10.மாமன் மச்சான்
11.வீட்டுக்கொரு கண்ணகி
12.சபாஷ்
13.நாளை உனது நாள்
14.சத்தியம் நீயே
15.இது எங்க பூமி
16.வைதேகி காத்திருந்தாள் (இது பாடல்களால் சூப்பர் ஹிட்)
17.குடும்பம்
18.ஜனவரி-1


இதெல்லாம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் 1984-இல் நடித்த படங்கள் , சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு படம் .. இப்பவே  அப்பவே கண்ணை கட்டியாச்சு...

Tuesday 29 September 2009

விருதுகள்

சிறந்த ஊக்குவிப்பாளர் - கலைஞர் - (தமிழ் சினிமா விருதுகள் !)
சிறந்த தலைவலி குடுப்பவர் - ராகுல் காந்தி (மாயாவதிக்கு!)
சிறந்த காத்திருப்பாளர் - ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா)
சிறந்த பல்டி - சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்
சென்னையின் சிறந்த ஏரியா - அசோக் நகர் (மாதம் ஒரு கொலை)
சிறந்த ஓய்வு பெறுபவர் - சரத் பவார் (உண்மையாய் இருந்தால்)
சிறந்த எதிர்ப்பார்ப்பு - ஜெயலலிதா (சனிப்பெயர்ச்சி முடிந்து விட்டது)

தமிழ் மன பதிவுலகுக்கு ஓவர்டைம் வேலை குடுத்து பல blogger-களின் கை நடுக்கத்தை தீர்த்ததற்காக சிறப்பு விருது - கமல்ஹாசன்

Monday 28 September 2009

முதிர்ச்சியின்மை

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்ட எந்த படத்தையும் நேற்று பார்க்கவில்லை. "சின்ன வயுசிலேயே எனக்கு சரஸ்வதி பூஜை ரொம்ப பிடிக்கும். லண்டன்ல மம்மி சரஸ்வதி பூஜைக்கு ஸ்வீட் பண்ணும்" என்று உளறிக்கொட்டும் நடிகைகளின் பேட்டிகளையும் பார்க்கவில்லை. பார்த்த ஒரே நிகழ்ச்சி ஸ்ருதி ஹாசன் அவர்களின் பேட்டி மட்டும் தான்.நல்ல தமிழ் பேசினார்.ஆனால் இந்த மாதிரி நபர்களை பேட்டி எடுக்க செல்லும் முன் தொகுப்பாளர்/தொகுப்பாளினி தங்களை கொஞ்சம் தயாராகிக் கொண்டு செல்வது நல்லது.முக்கியமாக லூசு மாதிரி எல்லாவற்றிற்கும் சிரிக்காமல் கொஞ்சம் முதிர்ச்சியாக இருப்பது போல் பாவனையாவது செய்யலாம். ஸ்ருதி தமிழில் பேசினார் ஆனால் கேள்வி கேட்ட தொகுப்பாளினி ஒரே "Peter" தான்.

நிகழ்ச்சியின் முடிவில் பேட்டி எடுத்தவர் ஒரு அபத்தமான கேள்வியை கேட்டார். "நான் உங்களை பேட்டி எடுக்க போகிறேன் என்றவுடன் எல்லாரும் நீங்கள் மூக்கில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை பற்றி கேட்க சொன்னார்கள்". ஸ்ருதி கொஞ்சம் கடுப்பாகி விட்டாலும் தான் செய்து கொண்ட அறுவை சிகிச்சை பற்றி விளக்கினார். அடுத்த அபத்தம், "வருங்காலத்தில் நீங்கள் என்னவாக ஆக ஆசை?". ஸ்ருதி சொன்னார், "I may walk on the moon. I don't know".அந்த பெண் இந்த நக்கலை புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புவோமாக.

P.S: நிகழ்ச்சியின் நடுவே ஸ்ருதி சொன்னார், "கடவுள் எனக்கு இசை, நடிப்பு என்று நிறைய வழிகளை கொடுத்திருக்கிறார்". "அப்பா கேட்டா திட்ட போறாரு செல்லம்" என்று சொல்ல தோன்றியது.