Tuesday 30 December 2008

எம்.ஜி.ஆர்- 1

எல்லோருக்கும் தெரியும், எம்.ஜி.ஆரை பற்றி பல பேர் பல இதழ்களில் எழுதி விட்டார்கள், ஆனாலும் இந்த 2008-லும் எனக்கு எம்.ஜி.ஆரை பற்றி எழுத தோன்றுகிறது.

அவர் பிறந்தது 1917. அவரின் முதல் படம் சதி லீலாவதி வந்தது 1936 (அவருக்கு வயது 19).அவரின் முதல் வெற்றிப்படம் மருத நாட்டு இளவரசி , வெளியான ஆண்டு 1950.
1950-ல் அவரின் வயது 33. அதாவது 19-வது வயதில் இருந்து 33-வது வயது வரை அவர் ஒரு துணை நடிகராக வறுமையில் வாடிக்கொண்டுதான் இருந்து இருக்கிறார்.இந்த காலத்தில்தான் அவருக்கு திருமணம் ஆகியது, தாங்க முடியாத வறுமை, மனைவிக்கு காச நோய். நோய் முற்றி மனைவி இறந்து விட்டார். குழந்தை எதுவும் இல்லை.


ஆக, குழந்தை இல்லாதது ஒரு குறை, தொழிலில் வருமானம் வராதது ஒரு குறை, மனைவி மறைந்த சோகம்.

மருத நாட்டு இளவரசி வந்த பின்பும் எம்.ஜி.ஆர் முன்னணி நட்சத்திரமாக ஆகவில்லை, அதன் பிறகு வந்த படம் "மந்திரி குமாரி". படம் ஹிட் ஆனாலும் எம்.ஜி.ஆர் ஒரு முன்னணி நட்சத்திரம் இல்லை.

இந்த நிலையில் 1952-ல் வந்த பராசக்தி படம் மூலம் (சிவாஜி) கணேசன் ஒரே படத்தின் மூலம் super star ஆகிவிட்டதையும் கவனிக்க வேண்டும்.எம்.ஜி.ஆரின் அடுத்த பெரிய மைல்கல் "அலிபாபாவும் 40 திருடர்களும்" , vandha ஆண்டு 1955. கவனிக்கவும் மருத நாட்டு இளவரசி வந்து சுமார் 5 ஆண்டுகள் கழித்தே அலிபாபா வருகிறது, இப்போது அவருக்கு வயது 38.
அதன் பிறகும் அவரால் தொடர்ச்சியான வெற்றி கொடுக்க முடியாமல் இருந்தது. பெயரும் புகழும் இருந்தாலும், அவரால் "சிவாஜி" அளவிற்கு தொடர்ச்சியாக படத்தில் நடிக்க முடியவில்லை.


இந்த சமயங்களில் சிவாஜி வீர பாண்டிய கட்ட பொம்மன், உத்திம புத்திரன், தங்க பதுமை போன்ற படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று இருந்தார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பின் 1958-ல் எம்.ஜி.ஆர், தயாரித்த படம் "நாடோடி மன்னன்" , தனது வாழ்நாள் சேமிப்பை / சொத்தை விற்றுத்தான் இந்த படத்தை அவர் தயாரித்தார்.
அவரை super star அந்தஸ்திற்கு கொண்டு சேர்த்தது அந்த படம்தான். ஆக அவருக்கு திரை உலகில் நிலையான வெற்றி என்பது அவரின் 40-வது வயதில்தான் வந்து இருக்கிறது. அது வரை ஒரு அங்கீகாரத்திற்கு / பணத்திற்கு அவர் காத்திருந்து இருக்கிறார்...


அவரின் தனிப்பட்ட வாழ்விலும் பெரிய மகிழ்ச்சி எதுவுமில்லை, இரண்டாவது மனைவியும் நோய்வாய் பட்ட நிலையிலேயே இருந்து இருக்கிறார். குழந்தை இல்லை.

ஆக 40-வது வயது வரை மிகப்பெரிய தோல்விகளையே சந்தித்து கொண்டு இருந்து இருக்கிறார்.

தொடரும்...

(வருடங்களில் பிழை இருக்கலாம்..)

1 comment:

முரளிகண்ணன் said...

கோகுல், 1954ல் வந்த மலைக்கள்ளன் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தது.