Wednesday 11 February 2009

நான் கடவுள் - சில கேள்விகள்

வணக்கம் ஜெயமோகன் சார்,

இன்று நான் கடவுள் படம் பார்த்தேன். படத்துல வர ஹிந்தி வசனங்கள்/சமஸ்க்ருத ஸ்லோகங்கள் எல்லாம் நீங்க எழுதியதா? நெருப்புக்கு என்னடா சுத்தம்/அசுத்தம், அப்பறம் எவன்டா சாமி என்று கேட்கும் ஒரு காட்சி போன்ற இடங்களில் வசனகர்த்தா யார் என்று அறிந்துக்கொள்ளும் ஆவல் பார்வையாளனுக்கு எழலாம். ஆனால், அதை தவிர ஜெயமோகன் தான் சார் இப்படி எழுத முடியும் அப்படின்னு சொல்ற மாதிரி வசனம் எதுவும் இல்லை என்பது என் எண்ணம். சாதாரண ரசிகனுக்கு புரிய வேண்டும் என்கிற சினிமா விதியால் செய்யப்படும் சமரசங்களா இவை? ஏழாம் உலகம் கதை உங்க மனசுல உருவாக நான் கடவுள் படத்தில் பணி புரிந்தது ஒரு காரணமா?

நன்றி,
உங்கள் வாசகன் வாசு


ஏழாம் உலகம் 2003ல் வந்தது. 2005 ல் நான் கடவுள் திட்டமிட்டமிடப்பட்டது.
வசனம் படத்தின் தேவைக்கு ஏற்பத்தான் எழுதப்படும். அதில் சரியாக வந்தவை மட்டுமே படத்தில் இருக்கும்
படத்தில் வசனம் என்பது பேசும் சொற்கள் மட்டுமல்ல. பேசும் டக்ருணமும் சேர்த்துதான் எழுதப்படுகின்ரன
ஜெ

No comments: