Thursday 23 April 2009

"கொஞ்சமாவது பீல் பண்றானா பாரு..."

இந்தியா ஒரு sub continent என்று சொன்னது பொய்யே இல்லை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடகாத்தான் தெரிகிறது.பீகாருக்கு ஒரு நக்சலைட் அப்படின்னா தமிழ்நாட்டுக்கு இலங்கை பிரச்சினை, டெல்லிக்கு பாக் பயங்கரவாதிகள்.. ஆக ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பிரச்சினை, டெல்லி குண்டு வெடிப்புக்கு தமிழ்நாட்டு மனிதர்களுக்கு கவலையே கிடையாது, இலங்கையில் என்ன நடக்கிறது என்றே வட இந்தியனுக்கு தெரியாது..

பீகாரிலும் ஜார்கண்டிலும் நக்சலைட்டுகள் ஒரு ரயிலையே சிறைபிடித்து வைத்து இருக்கின்றனர் (பின்னர் விடுவித்தும் விட்டார்கள்..) அது எந்த மாதிரியான அதிர்வலையை இங்கே உண்டாக்கியது? ஒன்றுமே இல்லை.

இன்னும் நக்சலைட் என்னதான்யா பண்ணுவான்? ஒரு ரோஷம் வேணாம்? நல்ல காலம் ஏதோ சில அதிகாரிகள் போய் ரயிலையும் ரயில் பயணிகளையும் மீட்டு கொண்டு வந்து இருக்கிறார்கள், (ஆமாம் இந்த மாதிரி நெருக்கடியான சந்தர்பங்களில் அரசியல்வாதிகள் கிட்டேயே வருவதில்லையே ஏன்?) , அந்த நக்சலைட்டும் அந்த ரயிலையும் அந்த 1000 பயணிகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்ய நினைத்தார்களோ?

நக்சலைட்டுகளுக்கு ஒரு வார்த்தை...டேய் கூமுட்டைகளா இனிமேல் லோ பட்ஜெட்டில் ரயிலை கடத்தாதிங்கடா ... மும்பை தாக்குதல் மாதிரி ஒரு ரேஞ்சா ஒரு அமைச்சரை ஒரு முதல்வரை ஒரு பிளேனை கடத்துங்கப்பா.. அப்போதான் உண்மையிலேயே நம்ப ஆளுங்களுக்கு தெரியும் நம்ப NDTV CNNIBN TIMESNOW மாதிரியான ஆளுங்க பேயாட்டம் ஆடி ஏதாவது பண்ணுவாங்க.

ஒரு வகையில் இந்த indolent behavior மட்டுமே இந்தியாவில் ஒரு நாடாக காப்பாற்றி கொண்டு இருப்பதாக தோன்றுகிறது.

ஒரு லெவெலுக்கு மேலே சண்டை போடறவங்களுக்கும் என்ன செய்யறது அப்படின்னு தெரியறது இல்லை.இது ஒரு வகையில் ஒரு திகைப்பை
தீவிரவாதிகளின் மனதில் விதைக்கிறது, அவர்கள் இதன் மூலமே பலவீனமடைகிறார்கள்.ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார் "சீக்கிரம் அடிச்சிட்டு போ எனக்கு வேலை இருக்கு..." அப்படிதான் இருக்கு நம்ப நாடு.

No comments: