Thursday 2 July 2009

வடகொரியா

வடகொரியாவை கேள்விப்பட்டு இருப்பீர்கள் , தெரியாதவர்களுக்கு அதை ஒரே வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் நரகம் என்று சொல்லலாம். கம்யுனிஸ்டுகள் ஆளும் தேசம், பல பத்தாண்டுகளாக தந்தையும் மகனும் ஆட்சி செய்யும் தேசம் (அடுத்த வாரிசாக பேரனும் தயார்).

அங்கே இருக்கும் சிறைகளில் நடக்கும் கொடுமைகள் மட்டும் இங்கே

- சரமாரியாக அடிப்பது, ஷாக் கொடுப்பது, குளிரிலோ அனல் காற்றிலோ வெகுநேரம் நிர்வாணமாக நிற்க வைப்பது.

-பொது இடத்தில் நிர்வாணமாக நடக்க வைப்பது,நிற்கவோ உட்காரவோ முடியாத சின்னஞ்சிறு அறையில் பலநாட்கள் இருக்கவைப்பது.

-பல மணி நேரம் முட்டி போட்டும், அசையாமல் உட்கார வைத்து பார்ப்பது (இது கைதிகள் மயக்கமையும் வரை தொடரும்)

-மயக்கமடையும் வரை situp செய்ய வைப்பது

-முக்கியமான ஒரு கொள்கை , சிறைக்குள் குழந்தை பிறக்க கூடாது , அதனால் அபார்ஷன் செய்யப்படும், அது எத்தனை மாத கருவாக இருந்தாலும் சரி.

-அப்படி தப்பி தவறி குழந்தை பிறந்துவிட்டால், ஒரு தண்டனை, தாயின் கண்கள் முன்னாள் குழந்தை பட்டினி போட்டோ அல்லது வேறு விதமாகவோ கொல்லப்படும். இது போனஸ்.

-அரசியல் கைதிகள் இத்தனை கொடுமைகளை அனுபவித்தபின், உயிரோடு இருந்தால் அதன் சர்வாதிகாரி (மறைந்த) கிம் இல் சங்ன் பேச்சை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.

-இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை என்பதே கிடையாது.

-1994-இல் நாட்டின் சர்வாதிகாரி கிம் இல் சங் மைந்த போது, நாட்டின் குடிமக்கள் அனைவரும் தரையில் மண்டியிட்டு அழவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அனைவரும் அருகில் உள்ள சர்வாதிகாரியின் உலோகசிலையை கட்டிபிடித்து அழவேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது.

-வடகொரியாவில் கிம்-இல் -சங்கின் சிலைகள் மட்டும் ஆயிரக்கணக்கில் , நகரத்தில், கிராமத்தில், காட்டில் என்று இல்லாத இடமில்லை. சுமார் மூன்று வயதிலிருந்து அவரின் உருவ பொம்மை பதித்த டாலர் செயின்களை எல்லோரும் அணியவேண்டும் என்று அரசு உத்தரவு.

சிந்தித்து பார்த்தால் , இந்தியாவும், தமிழகமும் இதற்கு மிக அருகில் இருக்கிறது, ஒரே ஆறுதலாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வந்து ஜனநாயகம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது , எந்த மகானுபாவர் செய்த புண்ணியமோ!

No comments: