Saturday 29 August 2009

விமர்சிக்க முடியாத பாலகுமாரன்


சமீபத்தில் பாலகுமாரன் பேசுகிறார் (http://balakumaranpesukirar.blogspot.com/) என்ற ப்ளாக்கில் பாலகுமாரனின் உடையார் நாவல் பற்றி ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை படிக்க நேர்ந்தது.அந்த நாவலை பற்றி மிகவும் உயர்வாக எழுதி பாலகுமாரனுக்கு ஒரு பெரிய பாராட்டு ஒன்றை வழங்கி இருந்தார் அந்த வாசகர்.

அதனை படிக்கும்போது, அந்த உடையார் என்ற 6 பாக நாவலை படிக்க வேண்டுமென்ற ஆவல் வந்தது, அதனை விட அந்த நாவலை பற்றி ஒரு தேர்ந்த விமர்சகர் விமர்சனம் செய்ய வேண்டும் , அந்த விமர்சனத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது.
அதனை ஒரு கடிதமாக எழுதி ஒரு பின்னூட்டம் இட்டேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால்,
என்னதான் உடையார் நாவலை பற்றி வாசகர்கள் உயர்வாக சொன்னாலும், இந்த புகழ்ச்சிகள் அந்த வாசகர்கள் பாலகுமரான் என்ற எழுத்தாளர் மேல் இருக்கும் ஒரு பிரியம் காரணமாக வந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது, ஆகவே இந்த படைப்பை பற்றி தீவிர வாசகர்களும், மற்ற எழுத்தாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அந்த தீவிர வாசக மற்றும் சக எழுத்தாளர்களின் விமர்சனமே, அந்த புத்தகத்தின் உண்மையான் இடத்தை அடைய வைக்கும்.

இதுதான் நான் அந்த கடிதத்தில் எழுதியது, ஆனால் இந்த பின்னோட்டத்தை அந்த வலைமனை வெளியிடவே இல்லை...

இந்த கடிதத்தில், பாலகுமாரனை பற்றி நான் என்ன தவறாக எழுதி விட்டேன் என்று இன்று வரை புரியவில்லை. இது பற்றி நான் ஏற்கனவே எழுதி இருந்தாலும் மீண்டும் மீண்டும் பாலகுமாரனின் ரசிகர்கள் ஒரு சிறு விமர்சன குரலையும் தாஙக முடியாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

No comments: