Friday 13 November 2009

மது கோடாவா அல்லது கோடியா??


இரண்டு ஆண்டு முதலமைச்சர் பதவி சாதனைகள்:

1. 2500 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு
2. மும்பை யூனியன் பேங்க் வங்கிக் கணக்கில் 640 கோடி ரூபாய் பணமாக அவருடன் தொடர்புடைய ஒருவரால் செலுத்தப்பட்டது
3. தனது ஆதரவாளர்களுக்காக 600 பைக் மற்றும் 30 ஸ்கார்பியோ கார்கள்.இவற்றில் 200 பைக் ஒரே நாளில் வாங்கப்பட்டவை
4. தனக்கு நெருக்கமானவர்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்
5. தாய்லாந்தில் ஒரு ஹோட்டல்
6. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற நலிவடைந்த தொழிற்சாலைகளை வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு

இன்னும் பட்டியல் முடியவில்லை. அமலாக்கப் பிரிவு தோண்ட தோண்ட பட்டியல் நீண்ட வண்ணம் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் பிரதமர் மன்மோகன் சிங் "Don't let the big fish escape" என்று மத்திய புலனாய்வு துறையினருக்கு கட்டளையிட்டார். இப்படி அப்படிப்பட்ட ஒரு மீன் தான். இந்த வழக்கு கூடிய விரைவில் மத்திய புலனாய்வு துறையினர் வசம் சென்று விடும். மீன் பிடிக்கப்படுமா அல்லது இதுவும் அவர்கள் புலனாய்வு செய்துகொண்டு இருக்கும் அல்லது செய்வது போல பாவ்லா காட்டும் "ஆருஷி தல்வார்" வழக்கு போல ஆகுமா என்று பார்ப்போம்.

No comments: