Sunday 2 May 2010

என்னை செதுக்கியவர்கள்

திரு.சிவகுமார் அவர்கள் ஒரு நல்ல நடிகர் என்று தெரியும் ஆனால் அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை நேற்று தான் தெரிந்து கொண்டேன்."என்னை செதுக்கியவர்கள்" என்ற தலைப்பில் "பாவை பொறியியல் கல்லூரியில்" கடந்த மாதம் அவர் பேசியதை விஜய் டிவி நேற்று ஒளிபரப்பியது. நாற்பது வருடங்களுக்கு முன் அவர் நடித்த படங்களில் இருந்து வசனங்கள், பாரதி பாடல்கள், கலியன் பூங்குன்றனார் பாடல்கள் என்று ஒன்றை கூட எழுதி வைத்துக் கொள்ளாமல் அவர் பேசியது அவரது அபாரமான ஞாபக சக்திக்கு உதாரணம். அவர் தமிழும் அற்புதம்.

ஒரு சினிமா நடிகன் படும் கஷ்டம் என்ன என்று அனைவருக்கும் தெரியும் விதம் ஒரு சம்பவத்தை விவரித்தார். "கவிக்குயில்" படத்திற்காக மழையில் அவர் படுத்திருப்பது போல் ஒரு காட்சி. காட்சி படமாக்கப்பட்ட இடம் ஒரு மலை போலும். வழக்கம் போல் செயற்கை மழை பெய்ய, காட்சியை படம் பிடிக்க ஆரம்பித்த குழு அப்போது தான் அந்த மலையை சுற்றியிருந்த கிராம மக்கள் அந்த மலையை தங்கள் இயற்கை உபாதைகளுக்காக பயன்படுத்துவதை உணர்ந்தார்களாம். வேறு இடம் தேட முடியாது என்பதால் காட்சியை படமாக்க முடிவு செய்யப்பட்டது. மழையில் அந்த மலக் கழிவுகள் நீரோடு கலந்து சிவகுமார் அவர்களின் முகம், உடல் என்று எங்கும் படர, மூன்று மணி நேரம் அதற்கு நடுவில் இருந்து அந்த "ஷாட்" எடுக்கப்பட்டது என்றார். அந்த நிகழ்ச்சி மனதை வேதனைப்படுத்தியது என்றாலும் அந்த காலகட்டத்தில் மனித மலம் அள்ள ஒரு கூட்டம் இருந்ததே, அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வை நினைத்து எவ்வளவு வேதனை அடைவார்கள் என்று நினைத்து பார்த்தேன். அதோடு ஒப்பிட்டால் என் கஷ்டம் பெரிதல்ல என்று மனதை தேற்றிக் கொண்டேன் என்றார்.

திரு ஏ.வி.எம் செட்டியார் அவர்கள் தான் பாரதியாரின் பாடல்களை பொதுவுடைமை செய்தவர் என்ற புது தகவலையும் தெரிவித்தார். சிவாஜி அவர்களின் நேரம் தவறாமை, தொழில் பக்தி, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் வசனம் எழுதும் திறமை மற்றும் அனைவரையும் சரி சமமாக நடத்தும் அவர் பண்பு என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வெகு நாளைக்கு பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி முன் நேரம் செலவழித்தேன். நிறைவாக இருந்தது.

5 comments:

M.G.ரவிக்குமார்™..., said...

/விஜய் டிவி நேற்று ஒளிபரப்பியது/
மன்னிக்க!...அது விஜய் டிவி அல்ல ஜெயா டிவி!....

Vasu. said...

நன்றி நேசன்

Ram Kasi said...

vasu, there are couple of other speeches by Sivakumar. one is reciting 100 selected verses from ramayana and explaining it with examples.. (awesome one.. if you want, i can give you the DVD)infront of a college audience in Erode.

Another one is Mnaivi, magal, thaai. he spoke to the people in erode book exhibition, about the 3 women in his life.

must watch!!

Vasu. said...

Ram,

I saw the one on Kamba Ramayanam in parts. Give me the DVD. Would like to see it. I have not seen the other one on Manaivi, Magal, Thaai

Unknown said...

Thanks for your writing . please provide link for those videos if you have . many Thanks