Saturday 7 August 2010

இந்தியாவில் பணம் - குரங்கு கையில் பூமாலை

டெல்லி common wealth games பற்றி படிக்கும்போது மனதில் தோன்றுவது என்ன? இந்திய அரசாங்கம் அதன்  கட்டமைப்பை மெல்ல இழந்து வருகிறது. ஒரு கம்பனி இருக்கிறது, அதன் Board of Directors தாம் நினைத்ததை கம்பனிக்கும் செயல்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றே அர்த்தம்.

சமீபத்தில் படித்த செய்தியில் 1990-2010 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 மடங்கு ஊழல் அதிகமாகி இருக்கிறது என்றிருக்கிறது ! இதன் காரணம் என்ன?

1982-யில் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் திறன் பெற்ற நாடு பல பொருளாதார முன்னேற்றங்களுக்கு பிறகு 2010-ஆம் ஆண்டு common wealth games நடத்த முடியவில்லை என்றால் என்ன காரணம்?

90-களின் ஆரம்பத்தில் இருந்து காஷ்மீரில் அந்நிய சக்திகளை திறன்பட எதிர்த்த நாம், இன்று மாவோயிஸ்டுகளின் கையில் மிகவும் கேவலமான முறையில் அடி வாங்குவது எப்படி?

இதற்கு எல்லாம் காரணம் , நாம் நல்ல அதிகாரிகளின் மனதை கொன்று விட்டோம்! We , the middle class people , killed the morale of honest Indian Government officers!


ஆம் இதுதான் உண்மை நடுத்தர மக்கள் நேர்மையான அதிகாரிகளின் நம்பிக்கையை , அவர்களுக்கு தேவையான மிடுக்கை அவமானபடுத்தி விட்டார்கள். இது 90'களில் ஆரம்பித்து இந்த இருபதாண்டுகளில் உச்சிக்கு சென்று விட்டது.யாரும் பின்னால் வாங்கும் pension பற்றி யோசிக்க தயாராக இல்லை!

Liberization என்ற விஷயத்தின் ஒரு கொசுறு இது!  Socialism என்ற சித்தாந்தத்தில் இருந்து மெதுவாக capitalism நோக்கி திரும்பிய நாம், அதற்கான நல்ல பலன்களோடு அடைந்த மிகுந்த தீமையான பலன் இந்த நல்ல அதிகாரிகளின் மனசாட்சியை கொன்று புதைக்கும் விஷயமும். உலகமயமாக்கமும், எதிர்பாராது கிடைத்த "I.T" வேலை வாய்ப்பும், மக்களிடம் பெரும் பொருளாதார மாறுபாட்டை செதுக்க தொடங்கிய காலத்தில், நமது அதிகாரிகளின் மனோ நிலையை எண்ணி பாருங்கள் "நேத்து காலேஜ் முடித்தவன் ஒரு I.A.S சம்பளம் வாங்கினால், மாவட்ட அளவிலான (லஞ்சம் வாங்காத) அதிகாரிகளின் நிலை என்ன? எனக்கு தெரிந்து இது பற்றி எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் வாயை திறக்கவில்லை.

அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.

இந்த வருமான வித்தியாசத்தை கண்டு கொண்டு அரசாங்கம் சம்பளம் உயர்த்தியது 2000-களின் தொடக்கத்தில்தான் , இடைப்பட்ட காலத்தில் அதிகாரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள ஊழலை நோக்கி தள்ளப்பட்டனர், இங்கு சொல்லபடுவது அதுவரை ஊழல் செய்யாத அதிகாரிகளை பற்றி. இந்த நேரத்தில் அரசாங்க கிளார்க்குகள் என்ன செய்தனர் , தங்கள் பிள்ளைகளை அரசாங்க பதவிக்கு வரவேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது மற்றும், தாமும் வேலை செய்யாமல் "இதெல்லாம் ஒரு சம்பளமா?  வாழ்ந்தால் IT company ஊழியராக வாழ வேண்டும்" என்று பல் குத்திக்கொண்டு இருந்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கெட்டிக்கார மாணவர்கள் - அரசாங்க பதவிகள் வரும் தன்மை, இது பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம், முன்பெல்லாம் மாணவர்களின் லட்சியம் டாக்டர்,எஞ்சினியர், வக்கீல்
என்பதோடு IAS என்பதும் இருக்கும். அவ்வாறு 100 மாணவர்கள் நினைத்தால் அதில் அறிவிற்சிறந்த சில மாணவர்கள் அந்த பதவிக்கு வருவது சாத்தியமாக இருந்தது , ஆனால் இப்போது IAS என்பது அரசியல்வாதிகளுக்கு சலாம் போடும் வேலையாக பார்க்கடுகிறது, அந்த மாணவர்கள் அமெரிக்கா  போவதற்கு தயாரிக்க  படுகிறார்கள்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் வகுப்பில் படித்த எத்தனை கெட்டிக்காரர்கள் IAS அதிகாரிகள் ஆகி இருக்கின்றனர் என நினைத்து  பாருங்கள்!


இதே  நிலை PSU எனப்படும் Public Sector Unit-களிலும் வந்தது, பல engineers,மானேஜர்கள் பதவியை விட்டு நீங்கினர்! அந்த இடத்தை நிரப்பிய நபர்களின் தரம், விலகியவர்களின் தரத்துடன் சரியாக இருக்க முடியும் என்று எவரேனும் நினைக்க முடியுமா..? இதில் இன்னொரு விஷயம், அரசாங்க கருவூலத்தில் கிடைக்கும் அதிகப்படியான பணம், ஆகவேதான் சொல்கிறேன், இப்போதுள்ள இந்திய பணம் குரங்கு கையில் பூமாலை!

No comments: