Monday 22 November 2010

அனுவுடன் குளம்பியில் மீண்டும் பாலகுமாரன்

பதிவோட தலைப்பு சுத்த தமிழ்ல இருந்தா அரசு எதாவது 'விலக்கு' தருமோன்னு ஒரு நப்பாசை. அதான். சாரி, உங்க கடுப்பு புரியுது. மேட்டருக்கு வரேன். நேத்து நைட் Koffee with அனுவில் மீண்டும் எழுத்துச் சித்தருடன் சந்திப்பு. போன தடவை இல.கணேசன் இன்னொரு கெஸ்ட். இந்த தபா பாலகுமாரன் சார் மகன் திரு.சூர்யா பாலகுமாரன். நல்லவேளை, அவரை நிறைய கேள்வி எல்லாம் கேட்காம விட்டாங்க அனு.

தனக்கு பிடித்த பாடல்கள், யோகி ராம் சுரத் குமார் பற்றி எல்லாம் நிறைய சொன்னாரு பாலா சார். அவர் புத்தகங்களை படிக்கிற என்னை மாதிரி ஆளுங்களுக்கு அதெல்லாம் புதுசு இல்ல. நிகழ்ச்சி முடியும் போது "Secret of Success" அப்படின்னு நிஜமாவே ஒரு விஷயம் இருந்தா உங்களுக்கு அது என்னன்னு கேட்டாங்க அனு. 'குறைந்த உணவு, குறைந்த தூக்கம், குறைந்த பேச்சு' மூணும் தான் அப்படின்னாரு நம்ம பாலகுமாரன். அதோட சார் முடிச்சிருந்தா இந்த பதிவே எழுதி இருக்க மாட்டேன். அடுத்ததா,

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று"

அப்படின்னு வள்ளுவர் குறளை சொல்லிட்டு, தோன்றனும் அப்படின நான் சொன்ன மூணு விஷயங்கள் தேவை என்றார் பாலா. அவர் சொன்ன மூணு விஷயங்கள் நல்லது தான். ஆனா, புகழ் பெறாதவன் எல்லாம் தோன்றாமை நன்று அப்படின்னு எப்படி சொல்லலாம்?

இப்போ சுஜாதா பாருங்க. பழமொழியை அனுபவிக்க மட்டும் செய்யாம ஆராய்ச்சி பண்றாரு. திருக்குறள் புதிய உரை புத்தகத்தில் சுஜாதா அந்த குறளுக்கு கொடுத்திருக்கும் விளக்கம் கீழே.

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று."

என்கிற வினோதமான குறளிலும் பலர், 'பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லாவிட்டால் பிறக்காதே' என்று மனிதனாகவோ மண்புழுவாகவோ பிறப்பது நம் கையில் இருப்பது போலத்தான் அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். பரிமேலழகர் "இல்லையேல் மிருகமாகப் பிற" என்று கூடக் கடிந்து சொல்லியிருக்கிறார்.

புகழை நாம் எப்படி 'அட்வான்ஸ் புக்கிங்' செய்ய முடியும்? இந்த காலத்துக்கு எவ்விதத்திலும் பொருந்தாத குறள். மற்ற குறட்பாக்களின் எளிமையான தர்க்க வாதங்களுடன் இடிக்கும் குறள். "தோன்றுவது" என்பது "பிறப்பது" என்று கொள்வதினால் வரும் சிக்கல் இது. அதற்கு பதிலாக அதைச் சபையில், ஒரு மேடையில் அல்லது கூட்டத்தில் தோன்றுவதாகக் கொண்டால் இந்த குறள் புதிய ஜீவன் பெறுகிறது. 'எந்தச் சபையிலோ மேடையிலோ தோன்றினாலும். அதற்கு ஏற்ற புகழ் இருந்தால் தோன்றுவது.இல்லாவிட்டால் சும்மா இரு' என்கிற அர்த்தம் நான் கொண்டது.


கலக்கிட்ட வாத்யாரே.

No comments: