Sunday 17 July 2011

தெய்வத்திருமகள்

குடும்பத்தோடு பார்க்க கூடிய படம். ஒரு காட்சியில் கூட ஆபாசம் கிடையாது. அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். விக்ரம் மற்றும் அந்த குழந்தை(சாரா) இருவரின் நடிப்புக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி படத்தில் ஒன்றும் இல்லை. ஆனால், இந்த படத்தை பார்த்த பின் இயக்குனர் விஜய் அவர்களிடம் சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது.

1. விக்ரம் மதி இறுக்கம்((Autism) கொண்டவர் எனில், எப்படி இத்தனை இயல்பாக அனைவரிடமும் பழகுகிறார்? மதி இறுக்கத்தின் முக்கிய பிரச்சனையே Social Interaction தானே?

2. I am Sam படத்தை தழுவியே தெய்வத்திருமகள் எடுக்கப்பட்டுள்ளது என்று படித்தேன். நான் "I am Sam" பார்த்ததில்லை. ஆனால், Tom Cruise, Dustin Hoffman நடித்த Rainman பார்த்திருக்கிறேன். மதி இறுக்கம் கொண்டவர்கள் கண்களை பார்த்து பேசுவது அரிது. படத்தில் ஒரு சில காட்சிகளை தவிர மற்ற இடங்களில் விக்ரம் நேரே கண்ணை பார்த்து பேசுகிறார். ஏன்?


3. இந்த பஷீர்-பாஷ்யம் சீன் அநியாயத்துக்கு நெருடல் சார். பாஷ்யம் ஊரறிஞ்ச வக்கீல். அவர் பணம் கொடுத்து IQ சர்டிபிகேட் தர சொன்னதாக பாஷ்யத்தின் உதவியாளன் சொல்கிறான். அந்த டாக்டர் பஷீர் ஒரு போன் பாஷ்யத்திற்கு செய்திருந்தால் விஷயம் தெரிந்திருக்கும். அதை ஏன் செய்யவில்லை அவர்?

4. இன்னொரு நெருடல். அமலா பால் பள்ளியில் விக்ரமை பார்த்தவுடன் அவர் கண்ணில் ஒரு பயம் தெரிந்து பக்கத்தில் இருக்கும் பாஸ்கரிடம் குழந்தையை வைத்துக்கொண்டிருப்பது யார் என்கிறார்? அவர் உடனே விக்ரம் மற்றும் குழந்தை பற்றி சொல்கிறார். அடுத்த காட்சியில் அமலா தன் தந்தைக்கு போன் செய்து "நான் பார்த்திருக்கிறேன்" அவர் தான் என்கிறார்.

போட்டோவில் பின்னர் ஒரு காட்சியில் அமலா பாலின் தந்தை ஐந்து வருடங்களாக தேடுகிறேன் என் மூத்த மகளை , எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்கிறார். போட்டோல விக்ரமை அமலா பால் பார்த்திருந்தா அவங்கப்பா கிட்ட முன்னமே சொல்லியிருப்பாங்க இல்ல? இங்க பார்வையாளன் யூகிக்கனுமா?? அதாவது விக்ரம் மனைவி(அமலா பாலின் அக்கா) தன தந்தைக்கு தெரியாம தங்கையோட தொடர்புல இருந்தாங்கன்னு?என்ன சார் நடக்குது?

5."ஏவம்" கார்த்திக் குமாருக்கு படத்துல என்ன வேலை? அவர் மூலமா இயக்குனர் சொல்ல வர ஒரே விஷயம், "அமலா பால் வாழ்கையில கல்யாணத்த விட முக்கியம் அவங்க அக்கா குழந்தை. பேசாம, கார்த்திக் பாத்திரமே இல்லாம, அமலா அவங்க அப்பாக்கிட்ட, "அப்பா, நிச்சயம் பண்ண மாப்பிள்ளை கிட்ட நான் பேசணும். கல்யாணத்துக்கு அப்பறம் நிலா என் கூட தான் இருப்பா. அவருக்கு சம்மதமான்னு கேக்கணும். அவருக்கு போன் பண்ணுங்க அப்படின்னு சொல்லி பேசி முடிச்சிருந்தா கார்த்திக் சம்பளம் தயாரிப்பாளருக்கு மிச்சம்.

6. இந்த மாதிரி படத்துக்கு பாட்டெல்லாம் தேவையா?

நிலா தனக்கு வேண்டும் என்று போராடும் விக்ரம், இறுதிக் காட்சியில் நிலாவை தன் மாமனார், மச்சினியிடம் கொண்டு சேர்க்கும் போது இந்த ஆளா மன வளர்ச்சி குன்றியவர், பயங்கர உஷாரான ஆளா இருப்பார் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது.

No comments: