Saturday 10 September 2011

யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் இரண்டு

(மறுநாள் ஷூட்டிங் தொடர்கிறது)

கெளதம்: சார், இப்போ கதை உங்களுக்கு தெரியும். first நீங்களும் ஹீரோயினும் இருக்கற scenes shoot பண்ண போறோம், அப்பறம் வில்லன், நீங்க and ஹீரோயின், finally நீங்க and வில்லன். Let's go for the first shot. நேத்து சொன்ன மாதிரி ஹீரோயின் உங்க மடில இருக்காங்க..flashback start ஆகுது ..assistant come here..tell him the dialogues..

Assistant: கண்ணுல கோவம், பதட்டம். "i dont believe this..i just dont believe this.."

விஜய்:(கோவமாக) கெளதம் , என்ன இவரு நான் நடிகனானத நம்ப முடிலேன்னு சொல்றாரு..என்னை கிண்டல் பண்றாரு இவரு..ஒழுங்கா டயலாக் மட்டும் சொல்ல சொல்லுங்க..

கெளதம்: Sir, அது தான் டயலாக்.

விஜய்: தப்பா நெனைக்காதீங்க ..எனக்கு பஞ்ச் டயலாக் சொல்லி ஆரம்பிக்கறது தான் ராசி..அது மட்டும் இல்லாம, முதல் வார்த்தையே இங்கிலீஷ்ல இருந்தா, படம் பூரா இப்படி தான் இருக்கும்னு ரசிகர்கள் எழுந்து போய்டுவாங்க..முழுக்க தமிழ்ல பண்ணாலே இண்டர்வெலுக்கு அப்பறம் தியேட்டர் கூட்டறவங்க மட்டும் தான் பாக்கறாங்க..அப்படி தனியா பார்த்த ஒன்னு ரெண்டு பேரு ஜென்னி கண்டு செத்து போனதா சேதி வந்தது..வேணாம் இந்த ரிஸ்க்..

கெளதம்: (கடுப்புடன்)என்ன சார் நீங்க..இப்போ பஞ்ச் டயலாக் எழுத யாரை கூப்படறது? பேசாம இந்த டயலாக் சொல்லுங்க. பின்னாடி பாக்கலாம்.

விஜய்: நீங்க இப்படி சொல்வீங்க அப்படின்னு தான் நானே சில டயலாக் எழுதி கொண்டு வந்திருக்கேன்..

கெளதம்: (முகம் முழுக்க பீதியில்) என்ன சார் சொல்றீங்க? பஞ்ச் டயலாக் எழுதி இருக்கீங்களா?

விஜய்: வெவ்வேறு சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்கேன். சொல்றேன் கேளுங்க.

இது வந்து வில்லனோட ஆள் யார்டா யோஹான் அப்படின்னு தேடி வரும் போது பேசறதுக்காக.."யார் அடிச்சா பேகான் பட்ட கரப்பான் மாதிரி துடிக்கிறியோ அவன் தான் யோஹான்"

இது வந்து என்னை தாய்மார்கள் எல்லாம் புகழறா மாதிரி. ரோட்ல நான் நடந்து போறேன், ஒரு அம்மா தன் பிள்ளைக்கு என்னை காட்டி சோறு ஊட்டுது. அப்போ ஊருக்கு புதுசா வர ஒருத்தன் அந்த அம்மாகிட்ட கேக்கறான் ஏன் என்னை காமிச்சு சோறு ஊட்டறீங்கனு, அப்போ அந்த அம்மா சொல்லுது, "சந்திரனை காமிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினது
அந்த காலம். யோஹானை காட்டி ஊட்டறது இந்த காலம். ஏன்னா இருட்டா இருக்கிற எங்க ஊருக்கு நிலா இந்த யோஹான் தானே." மின் வெட்டு பிரச்சனைய லேசா சுட்டிக் காட்றேன். எப்படி?

கிளைமாக்ஸ்ல இதே அம்மா வில்லன் கிட்ட சொல்லுது, "இந்தியா விட்ட ராக்கெட்டு சந்திரயான். அன்னை ஷோபா பெத்து போட்ட புல்லட்டு எங்க யோஹான்."

இன்னொரு எடத்துல பாருங்க, நானும் ஹீரோயினும் நாசா உள்ள நடந்து போறோம். அங்க இருக்கற ராக்கெட் எல்லாம் என்னை பாத்து பயந்து ஒளிஞ்சுகுது. அப்போ ஹீரோயின் கேக்கறாங்க, ஏன் எல்லா ராக்கெட்டும் உங்கள பாத்து ஒளியுதுன்னு.நான் என் ஸ்டைல்ல வாய்குள்ள நாக்க துழாவி மண்டைய ஆட்டிகிட்டே சிரிக்கிறேன்.

அப்போ ஒரு ராக்கெட் ஹீரோயின் முன்னாடி வந்து சொல்லுது, "நான் தான் இந்த தறுதலைகளுக்கு(மத்த ராக்கெட் எல்லாம் காமிச்சி) எல்லாம் "தலை". "எங்களுக்கு எல்லாம் பின்னாடி நெருப்பு வெச்சா தான் பறப்போம். ஆனா, யோஹான் பார்வை பட்டா அந்த நெருப்பே பத்தடி பின்னால போகும். அவரு பார்வை பட்டு நாங்க பஸ்பமாயிட கூடாது இல்ல..அதான்..

கிளைமாக்ஸ்ல ஹீரோயின காப்பாத்திட்டு வில்லன பார்த்து சொல்ற டயலாக் இது.
"நீ விடற ராக்கெட் செவ்வாய்ல போய் எறங்கும்னு உன்னால காரண்டி கொடுக்க முடியுமா? ஆனா, இவ செவ்வாய்ல இருந்து வந்து எறங்குற வார்த்தை எல்லாத்துலயும் என் பேரு இருக்கும்னு என்னால காரண்டி கொடுக்க முடியும். இப்போ சொல்லு, உன் ராக்கெட்டு பெரிசா இல்ல என் மார்க்கெட்டு பெரிசா?"

விஜய்: எப்படி சார் இருக்கு டயலாக் எல்லாம்?

கௌதம்: சார், The X-Files: Fight the Future, Hannibal, Catch me if you can, The Kingdom, The Punisher, Mississippi Burning, Face/Off எல்லாத்தையும் பார்த்து ஒரு மாதிரி இந்த கதைய ரெடி செஞ்சிருக்கேன்.கொஞ்சம் தயவு பண்ணுங்க.

(நொந்து போய்)சரி சார், மொதல்ல சாங்க்ஸ் ஷூட் பண்ணலாம். அப்பறம் We'll can the scenes. மொதல்ல ஒரு romantic number.உங்களுக்கும் ஹீரோயினுக்கும் லவ் ஆகற time. தாமரை lyrics. ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக். பாம்பே ஜெயஸ்ரீ and Krish பாடறாங்க. Assistant, read out the lyrics.

Assistant:
காற்றாக வந்தெனை இடை மறித்தான் என் பூமுகம் தன்னில் இதழ் பதித்தான்
என் குறுக்கின் குறுக்கு சந்துகளில் விரல்களால் வேகம் பிடித்தான்
நாணம் என் தேகம் மேல் படர என் பெண்மை சிதற..

விஜய்: நிறுத்துங்க..இதுல என்னை பத்தி எதுவுமே இல்லையே..என்ன சார் பாட்டு இது?

கௌதம்: இது காதல் பாட்டு. உங்கள பத்தி என்ன சொல்ல முடியும்?

விஜய்: நீங்க குருவி, சுறா இந்த படங்கள் எல்லாம் பார்க்கல போல இருக்கு? அதுல காதல் பாட்டுல கூட என்னை புகழ்வாங்க.

"இன்ப போரிலே நீ எந்தன் இளைய தளபதி, இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி, நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை, உன்னை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை".

எப்பேர்பட்ட காவிய வரிகள்? இதுல எல்லாம் காதல் இல்லையா? காதலோடு சேர்த்து என்னமா புகழ்ந்திருக்காங்க என்னை? இது மாதிரி எழுத முடியாதா?

கௌதம்: எழுதலாம் சார், ஆனா இந்த பாட்டுக்கு எதுக்கு அதெல்லாம்? இது ஒரு தலைவன் தலைவி காதல் வசப்பட்டு பாடற பாட்டு.

விஜய்: அதெல்லாம் வேண்டாம் சார். சரி, இதை விடுங்க. என் ஒபெனிங் சாங் என்ன ஆச்சு? அதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லல.

கௌதம்: சார், நீங்க ஒரு middle aged detective.உங்களுக்கு என்ன சார் ஒபெனிங் சாங் வெக்கறது?

விஜய்: சார், ஒபெனிங் சாங் இல்லேனா நான் செத்துடுவேன். என் பையன வேற ஒபெனிங் சாங்ல நடிக்க வெக்கறேனு சொல்லியிருக்கேன். எதாச்சும் பண்ணுங்க சார்.

(கௌதம் எதுவும் சொல்லாமல் எழுந்து செல்கிறார். படப்பிடிப்பு தளத்தில் குழப்பம் நிலவுகிறது. கௌதம் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. இரண்டு மணி நேரம் பொறுத்து பேரரசுடன் வருகிறார்)

கௌதம்: இவரு தான் இந்த படத்தை எடுக்க தகுதியான டைரக்டர். நீங்க இவர் கூடவே வேலை செய்யுங்க.

பேரரசு: தளபதி நான் வந்துட்டேன் இல்ல. கவலையே படாதீங்க. படத்தோட தலைப்ப மொதல்ல மாத்துவோம். "யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்". கீழ கேப்ஷன், "கிரகம் தான் மனுஷன பிடிக்கும் இவன் வந்த கிரகதுக்கே கிரகம் பிடிக்கும்".

விஜய்: இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன்.

பேரரசு: கிளைமாக்ஸ்ல பறந்து வர ராக்கெட்டை கால்ல உதைச்சு வேற எடத்துக்கு அனுபறீங்க. ஹீரோயினை ஒளிச்சு வெச்சு இருக்கற ராக்கெட் கிட்ட பத்து நிமிஷம் பஞ்ச் டயலாக் பேசி திருத்தறீங்க. வில்லன் விஞ்ஞானிய அடிச்சு அவன் அவங்கம்மா கிட்ட குடிச்ச பால காக்க வெக்கறீங்க. அந்த பால குடம் குடமா எடுத்து உங்க படத்துக்கு அபிஷேகம் பண்றாங்க மக்கள் எல்லாம். அப்படின்னு போட்டு அதோட படத்தை முடிக்கறோம்.

(விஜய்யும் பேரரசும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். கௌதம் மூர்ச்சையாகிறார்)

1 comment:

A Blip said...

Most awaited post Vasu.. very very funny... Ending perarasu sema.. Neengala eludhina punch ah ellam.. Ungalukulla oru MASS director irukar pola :D