Thursday 5 April 2012

இந்திய காண்டாமிருகங்கள்

" Ionesco வின் Rhinoceros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும்
திடும் என்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் Incongurity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா ஆப்ரிக்க
வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்! "

இது மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது. இதை நான் படித்தது சாரு நிவேதிதா சுஜாதா மறைவுக்கு எழுதிய அஞ்சலியில்.இதற்கான அர்த்தம் எனக்கு நேற்றுவரை உறைக்கவில்லை. டெல்லியில் நடந்த
ஒரு சம்பவமும் அதை தொடர்ந்து நான் என் நண்பர்களுடன் பேசிய போதுதான் தெரிந்தது.

அதாவது இந்தியாவில் ஜனநாயகம் ஜனநாயகம் என்று ஒரு வஸ்து பெயரளவில் இருக்கிறது இல்லையா?அதற்க்கும் ஒரு ஆபத்து.இந்திய ராணுவத்தின் முக்கியமான இரண்டு army units டெல்லியை நோக்கி 'அணிவகுத்து' வர ஆரம்பித்தது இந்த வார ஆரம்பத்தில்.

இந்த சம்பவத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அவை ஏன் வந்தது என்பதெல்லாம் இன்னும் மர்மமே (ராணுவம் பதில் சொல்லிய பிறகும்). ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்பு இருக்கும் விளைவுகள் ..அதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றுபவை ..ஆனால் இது பற்றி  நண்பர்களுடன் பேசும்போது அதன் உண்மையான அர்த்தமே விளங்கியது , எனக்கு கிடைத்தது கீழ்கண்ட பதில்கள்

ராணுவம் டெல்லி நோக்கி வந்ததா? ஓஹோ..
ராணுவம் டெல்லியில்தானே இருக்கும் , பிறகு எப்படி டெல்லிக்குள் வரும்!
ராணுவம் டெல்லியை நோக்கி வந்தால் என்ன? யார் யாரோ வர்றாங்க , ராணுவம் வரக்கூடாதா?
ரெண்டே ரெண்டு army units தானே வந்தது , அதுக்கு போய் எதுக்கு அலட்டிக்கணும்?

முடியலை ...

நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!

No comments: