Wednesday 8 August 2012

துக்கம்

எந்த ஒரு கலை வடிவத்தின் வெற்றியும் உச்சமும் மனித உள்ளத்தை வெல்வதிலேயே இருக்கிறது... துக்கத்தை  எப்படி வெளிப்படுத்துவது? கண்ணீரின் மூலம்  ஆனால் மற்றவன் கண்ணீரை எப்படி நான் வெளிப்படுத்த முடியும் .. கலையால் மற்றவன் கண்ணீரை வெளிப்படுத்துவது எப்படி என்று சில வரிகளில் ஜெயமோகன் எழுத்து கலையின் மூலம் வெளிப்படுத்துகிறார்,

"அப்படி ஒரு அழுகையை நான் கண்டதில்லை. ஒரு மனித ஜீவனின் மொத்த உடலும் கதறி அழமுடியுமென அப்போது கண்டேன். ஒருவர் அழுகை மட்டுமாகவே மாறிவிட முடியும் என்று உணர்ந்தேன். வாய் அழுவதை உள்ளம் அழுவதைக் கண்டிருக்கிறேன், ஆன்மா கதறியழுவதை அன்று கண்முன் கண்டேன். ஏன் என்றறியாமலேயே நானும் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்"

இந்த காட்சியை வெளிப்படுத்தும் ஓவியத்தை  தேடிக்கொண்டு இருக்கிறேன்..எங்காவது இருக்கும் , சரியான நேரம், இடம் ஒன்று கூட வேண்டும்...  அந்த ஓவியத்தில் வாய் அழ வேண்டும், முகம் அழ வேண்டும்,  உள்ளம் அழ வேண்டும் .ஓவியத்தின் சட்டங்களில் துக்கம் நிரம்பி இருக்க வேண்டும், ஓவியமே துக்கமாய் இருக்க வேண்டும் , துக்கமே ஓவியமாய் இருக்க வேண்டும் , துக்கத்தில் வர்ணம் கலந்திருக்க வேண்டும்...

No comments: