Thursday 6 November 2014

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி.

பாலகுமாரன்: கமல், நான் வேலையை விட்டுட்டு சினிமாக்கு வரலாம்னு இருக்கேன்.
கமல்: ஏன்? எதுக்கு?
பாலகுமாரன்(மனதிற்குள்): என்ன பதில் சொல்ல?
கமல்: நான் கேட்ட பிறகு காரணத்தை யோசிக்கறீங்களா? நான் கேள்வி கேக்கட்டுமா உங்களுக்காக? பணம், இல்ல. மொசைக் போட்டு சொந்த வீடு இருக்கு, ஸ்கூட்டர் இருக்கு. புகழ் இல்ல. இன்னைக்கு தேதில பெரிய எழுத்தாளர். இரும்புக் குதிரைகள் வெளியீடு விழால வைரமுத்து உணர்ச்சி வசப்பட்டு பேசினார் தெரியுமா? வைரமுத்து அவ்வளோ சீக்கரம் யாரையும் புகழ மாட்டார். வேற என்ன?
பாலகுமாரன்: எனக்கு அந்த பியட் கார் வேணும் கமல்.
கமல்: குட், அப்போ நீங்க தேடறது லக்சரி. இவ்வளோ நாளா என்ன பண்ணீங்க. வீடியோ வந்து சினிமா அழிக்கற டைம்ல வரீங்க.
"நகுதற் பொருட்டன்று நட்பு"..யாரோ கமல்ஹாசனுக்கு விளக்கமாய் சொல்லியிருக்க வேண்டும்.
சீண்டினால் கூட நண்பர்களிடம் இதமாய் பேசும் கமல் அன்று கோபப்பட்டார். நான் இரண்டாய் கிழிக்கபட்டேன்.

(சில நாட்களுக்கு பிறகு) கமல்: என்ன கவிதாலயால சேர்ந்துட்டீங்க போல இருக்கு?
பாலகுமாரன்: ஆமாம், ஆனா அன்னைக்கு நீங்க நான் சினிமால..
கமல்: சினிமால சேரட்டுமானு அபிப்பராயம் கேக்கக் கூடாது. முடிவு உங்களோடதா இருக்கணும்னு தான் அப்படி பேசினேன். இப்போ சேர்ந்துட்டீங்க. இதுல உள்ள நெளிவு சுளிவு நான் சொல்லித் தரேன்.

"செட்டுக்கு முதல் ஆளா வாங்க. கடைசி ஆளா போங்க. செய்னு சொல்றதுக்கு முன்னாடி வேலை செய்யுங்க. யாராவது மூஞ்சில எச்சை துப்பினா தேங்க்ஸ் அப்படின்னு சொல்லிட்டு வந்துடுங்க. கோபத்த உள்ளுக்குள்ள வெச்சுக்குங்க. பின்னாடி உதவும். நான் நெறைய அனுபவப்பட்டிருக்கேன். இதோ இப்படி கால் அகட்டி நிக்கறீங்களே இது கூட தப்பு. இன்னும் பணிவா இருக்கணும். திமிர் பிடிச்சவன்னு சொல்லிடுவாங்க. இன்னொன்னு சொல்லட்டுமா?கொஞ்சம் கொஞ்சமா நீங்க எழுதறத குறைச்சுக்கனும்."

பாலகுமாரன்: ஐயோ.
கமல்: நான் பேசறது கைய அறுத்து டிஞ்சர் போடறா மாதிரி இருக்கு இல்ல? உண்மை இதமா இருக்காது பாலா.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே."

1 comment:

Gokul said...

ஒரு வாத்யாருக்கு வாழ்த்து , இன்னொரு வாத்தியார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி மூலமா.. Super..

இது வாத்யாருக்கு 60வது பிறந்த நாள்! ஹ்ம்ம்.. வாணி அல்லது சரிகா இருந்து இருந்தா சஷ்டியப்த பூர்த்தி !