இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வழக்கம் போல் அர்னாப் ஹய் பீபீயில் கத்திக்கொண்டு இருந்தார் , என்ன விஷயம் என்று பார்த்தால், நாடாளுமன்றத்தில் பேப்பர் ஸ்ப்ரே அடித்த காட்சியும், பிறகு ராஜ்ய சபாவில் அதன் செக்ரெட்ரி ஜெனெரலை பார்த்து அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டே அவர் கையில் இருக்கும் பேப்பரை வலுக்கட்டாயமாக பிடுங்கும் காட்சியும், ஜம்மு காஷ்மீரில் எம் எல் ஏ ஒருவர் சபை மார்ஷலை அடிக்கும் காட்சியும் , உபி யில் சட்டையை கழட்டி போராட்டம் பண்ணும் இரு எம் எல் ஏ பற்றிய காட்சிகளையும் காட்டிக்கொண்டு இருந்தனர். வழக்கப்படி அர்னாப் ஒரு செத்த பாம்பை (காங்கிரஸ் கட்சி பிரமுகர்) அடி அடி என்று வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார்.
இதில் அந்த காஷ்மீர் எம் எல் ஏ கலந்து கொண்டு மிக தெளிவாக அர்னாப் சொல்வதை ஒரு கணம் கூட காது கொடுத்து கேட்காமல் , ஏறக்குறைய உருதுவில் தனி ஆவர்தனம் நடத்திக்கொண்டே இருந்தார், ஒரு கட்டத்தில் ஆனானப்பட்ட அர்னாபே வேறு வழியில்லாமல் செத்த பாம்பிடம் திரும்பி அடிக்க ஆரம்பித்தார் (செத்த பாம்புதான் அர்னாப் பேச இடம் கொடுத்தார் , ஆங்கிலத்திலும் பேசினார்).
அந்த தெலுகு மனவாடுகள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவேயில்லை. அவர்களை கலந்து கொள்ள வைக்கவும் முடியாது.
இந்த மனவாடுகள் போலதான் தமிழ், கர்நாடக , பீகார் , உ பி , வங்காள , மற்றும் பல மாநில கட்சிகளின் எம் எல் ஏ - க்கள் எம் பி கள் இருக்கின்றனர் , இந்தியாவை ஆட்சி செய்வது இவர்களே , பணம் குவிவதும் இவர்களிடமே.. இவர்கள் தவறியும் டைம்ஸ் நவ் போன்ற விவாத மேடைகளுக்கு வர மாட்டார்கள், வர வைக்கவும் முடியாது.
மேலும், இவர்கள் அனைவரும் அடுத்த எலக்ஷனில் ஜாம் ஜாமென்று மீண்டும் எம். பியாக வருவார்கள் , அதாவது, மிளகு ஸ்ப்ரே அடித்தது, அதிகாரியின் கையில் இருந்த தீர்மானத்தில் நகலை பறித்தது எல்லாமே அந்த எம்.பி இல்லை, அதற்கு பின்னால் அவரை தேர்ந்தெடுத்த , அவைக்கு அனுப்பிய ஒரு தொகுதி இருக்கிறது.ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உண்மையிலேயே அவர்கள் எம்.பியிடம் விசுவாசம் கொண்டோ , பணம் வாங்கி கொண்டோ , மற்ற வழியில் ஆதாயம் கொண்டோ, ஒட்டு போட்டோ , போடாமலோஅந்தந்த எம்பிக்களை அவைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். அர்னாபும், அந்த மக்களின் மனநிலை பற்றி, ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி கேட்கவே போவதில்லை.
Those MPs are just the mirrors of Morally corrupt average Indian, and that moral corruption of that aam aadhmi will never be questioned and the reason behind the moral corruption will never be explained by Mr. Arnab Goswami..He will always fight with Mirror image and we are safe watching the mirror image.
(மூன்றாவது படம் , ஹைதராபாதில் உள்ள மனவாடு எம்.பி சி.எம் ரமேஷ்காருவின் இல்லு)
Showing posts with label எம்.பி. Show all posts
Showing posts with label எம்.பி. Show all posts
Thursday, 20 February 2014
Tuesday, 5 January 2010
அஞ்சா நெஞ்சன் அஞ்சலாமா?
அஞ்சா நெஞ்சன், மதுரை அண்ணன், வாழும் மகாத்மா அழகிரி சவால் விட்டு டெல்லிக்கு போன கதை எல்லோருக்கும் தெரியும். அங்கே அவர் எப்படி செயல் 'படுத்துகிறார்?'
அவருக்கு ஆங்கிலம் தெரியாது , இந்தியும் தெரியாது, அதனால் அவர் தன் துறை சம்பந்தப்பட்ட விவாதத்தில் கூட பதில் கூற அவைக்கு செல்ல முடியவில்லை / செல்லவில்லை. ஆங்கில பயத்தினால் இந்த கூத்து..
தமிழில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டு இருக்கிறார், இன்று சபாநாயகர் அது தொடர்பாக பேச விரும்பினால் கூட அழகிரி கிடைக்கவில்லை (சபாநாயகரிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டுமே அதனாலா தெரியவில்லை :-) ).
ஆங்கிலம் தெரியாமல், தனது தாய்மொழி மட்டுமே தெரிந்த லல்லு பாராளுமன்றத்தில் நன்கு செயல்பட முடியும்போது, அதே நாட்டில் பிறந்த இன்னொரு மனிதர் வேறு மொழி கற்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி எழுந்தாலும்...
அஞ்சா நெஞ்சன் ஆங்கிலத்திற்கு பயப்படும்போது சிரிப்பதா இல்லை , எம்.பி பதவிக்கு தகுதியான ஆட்களை அனுப்ப முடியாத நாட்டின் அரசியல் நிலையை எண்ணி கோபப்படுவதா என்று தெரியவில்லை...
அவருக்கு ஆங்கிலம் தெரியாது , இந்தியும் தெரியாது, அதனால் அவர் தன் துறை சம்பந்தப்பட்ட விவாதத்தில் கூட பதில் கூற அவைக்கு செல்ல முடியவில்லை / செல்லவில்லை. ஆங்கில பயத்தினால் இந்த கூத்து..
தமிழில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டு இருக்கிறார், இன்று சபாநாயகர் அது தொடர்பாக பேச விரும்பினால் கூட அழகிரி கிடைக்கவில்லை (சபாநாயகரிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டுமே அதனாலா தெரியவில்லை :-) ).
ஆங்கிலம் தெரியாமல், தனது தாய்மொழி மட்டுமே தெரிந்த லல்லு பாராளுமன்றத்தில் நன்கு செயல்பட முடியும்போது, அதே நாட்டில் பிறந்த இன்னொரு மனிதர் வேறு மொழி கற்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி எழுந்தாலும்...
அஞ்சா நெஞ்சன் ஆங்கிலத்திற்கு பயப்படும்போது சிரிப்பதா இல்லை , எம்.பி பதவிக்கு தகுதியான ஆட்களை அனுப்ப முடியாத நாட்டின் அரசியல் நிலையை எண்ணி கோபப்படுவதா என்று தெரியவில்லை...
Subscribe to:
Posts (Atom)


