Thursday, 12 August 2010

பாலகுமாரன்

ரொம்ப நாளாக பாலகுமாரன் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். தீப்பொறி திருமுகம் a.k.a சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் தனக்கு "ல லே லா லலி ல லா" என்று பாடியிருந்த ஒருவரின் பதிவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்தவுடன் ஒரு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றியது.

"தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்பது போல யார் வேண்டுமானாலும் எவரை/எதை பற்றி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்றாகிவிட்டது. நம்ம எங்க இருக்கோம்னு கண்டுபிடிச்சு வரவா போறான் என்கிற எண்ணமே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக சாரு அபிமானி எழுதியுள்ள இந்த பதிவை பார்ப்போம்.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_03.html

பாலகுமாரனின் "தலையணை" நாவல் என்கிறார். பாலா "தலையணை மந்திரம்" என்று எழுதியாக தான் நினைவு. முதல்ல நாவலை படிங்கப்பா. எதையாவது படிச்சிட்டு எழுதாதீங்க. பாலாவுக்கு குடி பழக்கம் கிடையாது. புகை பிடித்து கொண்டிருந்தவர் பின்னாளில் அதையும் நிறுத்திவிட்டார். பாலா குடித்து விட்டு சுஜாதாவிடம் கலாட்டா செய்தார் என்பதெல்லாம் கொடூரமான கற்பனை.சிறுகதை எழுத சுஜாதாவிடம் சில "டிப்ஸ்" பெற்றார். அவ்வளவு தான்.

சினிமாவில் பாலா சில அற்புதமான வசனங்கள் எழுதினர். ரஜினி ரசிகரான சதிஷுக்கு "நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி" மட்டும் தான் நினைவில் உள்ளது. உல்லாசம், முகவரி, மாதங்கள் ஏழு போன்ற படங்கள் பாலாவின் வசனம் எழுதும் திறமைக்கு நல்ல உதாரணங்கள். பாலாவின் சினிமா அனுபவங்கள் பற்றி தெரிந்து கொள்ள சதீஷ் அவர்கள் "இதற்குத் தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" படிக்கலாம்.

பாலா நிறைய எழுதுவதால் ஒரே விஷயம் பல முறை கூறப்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. ஆனால், இதை நிறைய எழுத்தாளர்களிடம் காணலாம். பீமா, சண்டக்கோழி, தாம் தூம், உன்னாலே உன்னாலே போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் சில படங்களில் ஒரே வசனத்தை மீண்டும் பிரயோகம் செய்திருப்பார். அந்த இடத்துக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். அதற்காக அவர் எழுத்தாளரே இல்லை என்பீர்களா? கும்பகோணத்தையும் காவிரியையும் மீண்டும் மீண்டும் எழுதிய தி.ஜா எழுத்தாளர் இல்லையா? சுத்த பேத்தல்.

பாலாவுக்கு தெளிவில்லையாம். நேரக் கொடுமைடா சாமி. "காலடி" என்கிற பாலாவின் நூலை நேரம் கிடைத்தால் படியுங்கள். சிக்கலான அத்வைத தத்துவங்களை மிகச் சுலபமாக புரிய வைத்திருப்பார் பாலா. படித்து தெளிவு பெறுங்கள்.

ஒருவரை விமர்சிக்கும் முன்பு அவரை பற்றிய அறிதல் மிக முக்கியம். நம்மைப் போன்ற இன்று முளைத்த காளான்கள் பாலா, சுஜாதா பற்றி எல்லாம் பேசும் முன்பு நூறு முறை யோசிக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல,"எழத்து என்பது தனக்குத் தானே பேசிக்கொள்வது. அதிர்ஷ்டம் இருந்தால் ஒத்த மனதுடையவர்களுடன் பேசலாம்". சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் என்ன சதீஷ், வாசு, ராமசாமி, கந்தசாமி போன்றவர்களுக்கு புரியவில்லை என்றால் தாங்கள் எழுத்தாளனாக பிறந்த பயனை அடைய மாட்டோம் என்று நினைத்தா எழுதினார்கள்?முதிர்ச்சி பெறுங்கள் சதீஷ்.

நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா?



நம்மில் எத்தனை பேர் தலைவலி ஜுரம் போன்ற சாதாரண உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுகிறோம்? நான் Dolo-650,Saridon, Resteclin 500 Mg போன்ற மருந்துகளை அந்த நோய் தீரும் வரை எடுத்துக்கொள்வேன்.அப்படி ஒரு சாதாரண மருந்தான Combiflam என்ற மருந்து எத்தனை பெரிய பின்விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை படத்தில் பாருங்கள். குணசுந்தரி என்ற இந்த பெண் வைரல் பீவர் எனப்படும் விஷ ஜுரம் ஏற்பட்டு அதற்காக நங்கநல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.(இங்கு தான் என் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தாள்)

அங்கிருந்த மருத்துவர் Combiflam எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். Combiflam ஜுரம் மற்றும் உடல் வலிக்கான மருந்து. Paracetamol மற்றும் iBrufen கலவை. நானே இரண்டொரு முறை இதை உட்கொண்டிருக்கிறேன். குணசுந்தரி ஒவ்வாமை(Allergy) காரணமாக இந்த நிலையை அடைந்துள்ளார். மருந்தில் இருந்த ஏதோ ஒன்று அவருக்கு ஒற்றுக் கொள்ளவில்லை. அந்த பெண் போலீசில் புகார் செய்ய இப்போது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கை பரிசீலித்த அகில இந்திய தலைமை மருத்துவ/மருத்துவர் குழு தலைவர் ரவிசங்கர், "மருந்தின் கலவையால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒவ்வாமை காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதற்கு மருத்துவமனை பொறுப்பேற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

ஒரு நோயாளியின் முந்தைய உடல் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வது ஒரு மருத்துவரின் கடமை இல்லையா? நோயாளியின் இதர உடல் கோளாறுகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் எப்படி மருத்துவர் ஏதோ ஒரு மருந்தை சிபாரிசு செய்ய முடியும்? Combiflam எனப்படும் இந்த மருந்து 1997 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்கிறது கூகுள் வாயிலாக நான் பார்த்த சில வலைத்தளங்கள். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் எப்படி மருத்துவர் இதை நோயாளிக்கு பரிந்துரைக்க முடியும்?

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது. இத்தனை பெரிய விஷயம் டெக்கான் நாளிழதில் ஒரு ஓரத்தில் வந்துள்ளது. இதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை நமது மீடியா. என்ன பாதுகாப்பு இருக்கிறது நமக்கு இந்தியாவில்? இந்த பெண்ணிற்காக யார் போராடுவார்கள்? இந்த மருந்தை சிபாரிசு செய்த மருத்துவருக்கு குறைந்த பட்ச தண்டனையாவது கிடைக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை.

Saturday, 7 August 2010

இந்தியாவில் பணம் - குரங்கு கையில் பூமாலை

டெல்லி common wealth games பற்றி படிக்கும்போது மனதில் தோன்றுவது என்ன? இந்திய அரசாங்கம் அதன்  கட்டமைப்பை மெல்ல இழந்து வருகிறது. ஒரு கம்பனி இருக்கிறது, அதன் Board of Directors தாம் நினைத்ததை கம்பனிக்கும் செயல்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றே அர்த்தம்.

சமீபத்தில் படித்த செய்தியில் 1990-2010 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 மடங்கு ஊழல் அதிகமாகி இருக்கிறது என்றிருக்கிறது ! இதன் காரணம் என்ன?

1982-யில் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் திறன் பெற்ற நாடு பல பொருளாதார முன்னேற்றங்களுக்கு பிறகு 2010-ஆம் ஆண்டு common wealth games நடத்த முடியவில்லை என்றால் என்ன காரணம்?

90-களின் ஆரம்பத்தில் இருந்து காஷ்மீரில் அந்நிய சக்திகளை திறன்பட எதிர்த்த நாம், இன்று மாவோயிஸ்டுகளின் கையில் மிகவும் கேவலமான முறையில் அடி வாங்குவது எப்படி?

இதற்கு எல்லாம் காரணம் , நாம் நல்ல அதிகாரிகளின் மனதை கொன்று விட்டோம்! We , the middle class people , killed the morale of honest Indian Government officers!


ஆம் இதுதான் உண்மை நடுத்தர மக்கள் நேர்மையான அதிகாரிகளின் நம்பிக்கையை , அவர்களுக்கு தேவையான மிடுக்கை அவமானபடுத்தி விட்டார்கள். இது 90'களில் ஆரம்பித்து இந்த இருபதாண்டுகளில் உச்சிக்கு சென்று விட்டது.யாரும் பின்னால் வாங்கும் pension பற்றி யோசிக்க தயாராக இல்லை!

Liberization என்ற விஷயத்தின் ஒரு கொசுறு இது!  Socialism என்ற சித்தாந்தத்தில் இருந்து மெதுவாக capitalism நோக்கி திரும்பிய நாம், அதற்கான நல்ல பலன்களோடு அடைந்த மிகுந்த தீமையான பலன் இந்த நல்ல அதிகாரிகளின் மனசாட்சியை கொன்று புதைக்கும் விஷயமும். உலகமயமாக்கமும், எதிர்பாராது கிடைத்த "I.T" வேலை வாய்ப்பும், மக்களிடம் பெரும் பொருளாதார மாறுபாட்டை செதுக்க தொடங்கிய காலத்தில், நமது அதிகாரிகளின் மனோ நிலையை எண்ணி பாருங்கள் "நேத்து காலேஜ் முடித்தவன் ஒரு I.A.S சம்பளம் வாங்கினால், மாவட்ட அளவிலான (லஞ்சம் வாங்காத) அதிகாரிகளின் நிலை என்ன? எனக்கு தெரிந்து இது பற்றி எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் வாயை திறக்கவில்லை.

அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.

இந்த வருமான வித்தியாசத்தை கண்டு கொண்டு அரசாங்கம் சம்பளம் உயர்த்தியது 2000-களின் தொடக்கத்தில்தான் , இடைப்பட்ட காலத்தில் அதிகாரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள ஊழலை நோக்கி தள்ளப்பட்டனர், இங்கு சொல்லபடுவது அதுவரை ஊழல் செய்யாத அதிகாரிகளை பற்றி. இந்த நேரத்தில் அரசாங்க கிளார்க்குகள் என்ன செய்தனர் , தங்கள் பிள்ளைகளை அரசாங்க பதவிக்கு வரவேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது மற்றும், தாமும் வேலை செய்யாமல் "இதெல்லாம் ஒரு சம்பளமா?  வாழ்ந்தால் IT company ஊழியராக வாழ வேண்டும்" என்று பல் குத்திக்கொண்டு இருந்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கெட்டிக்கார மாணவர்கள் - அரசாங்க பதவிகள் வரும் தன்மை, இது பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம், முன்பெல்லாம் மாணவர்களின் லட்சியம் டாக்டர்,எஞ்சினியர், வக்கீல்
என்பதோடு IAS என்பதும் இருக்கும். அவ்வாறு 100 மாணவர்கள் நினைத்தால் அதில் அறிவிற்சிறந்த சில மாணவர்கள் அந்த பதவிக்கு வருவது சாத்தியமாக இருந்தது , ஆனால் இப்போது IAS என்பது அரசியல்வாதிகளுக்கு சலாம் போடும் வேலையாக பார்க்கடுகிறது, அந்த மாணவர்கள் அமெரிக்கா  போவதற்கு தயாரிக்க  படுகிறார்கள்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் வகுப்பில் படித்த எத்தனை கெட்டிக்காரர்கள் IAS அதிகாரிகள் ஆகி இருக்கின்றனர் என நினைத்து  பாருங்கள்!


இதே  நிலை PSU எனப்படும் Public Sector Unit-களிலும் வந்தது, பல engineers,மானேஜர்கள் பதவியை விட்டு நீங்கினர்! அந்த இடத்தை நிரப்பிய நபர்களின் தரம், விலகியவர்களின் தரத்துடன் சரியாக இருக்க முடியும் என்று எவரேனும் நினைக்க முடியுமா..? இதில் இன்னொரு விஷயம், அரசாங்க கருவூலத்தில் கிடைக்கும் அதிகப்படியான பணம், ஆகவேதான் சொல்கிறேன், இப்போதுள்ள இந்திய பணம் குரங்கு கையில் பூமாலை!