Friday 8 August 2008

சமீபத்தில் ரசித்த பாடல் வரிகள்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும்
காற்றாக உருமாறி
முந்தானைப் படியேறவா
மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும்
உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும்
இம் என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தை குடி வைக்கவா

அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும்
கொடிப்பூக்கள் பிறந்தாலும்
உன்னை போலே இருக்காது அழகே
அழகே அழகே வியக்கும் அழகே



படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ஹரிசரன்

1 comment:

Vijai said...

sumaara iruku aana en kavithai maathiri tharama (Quality missing) illa :)