Monday 6 October 2008

சம்சாரம் அது மின்சாரம்

சனிக்கிழமை மதியம் கே டிவியில் சம்சாரம் அது மின்சாரம் படத்தை பார்த்த போது விசு ஏன் திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டார் என்று தோன்றியது. குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைபடங்களை கொடுத்த சிறந்த இயக்குனர். விசுவால் வாழ்ந்த நடிகர்/நடிகைகள் பலர். உடனே நினைவுக்கு வருபவர்கள் கமலா காமேஷ், இளவரசி, மாதுரி, கிஷ்மூ, S.Ve.சேகர் ஆகியோர் . ஹீரோக்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பற்ற விசு போன்றவர்கள் மீண்டும் படங்களை இயக்க வேண்டும்.

பின்குறிப்பு: இறுதிக்காட்சியில் லக்ஷ்மியின் நடிப்பை எத்தனையோ முறை பார்த்தாயிற்று. இருந்தும் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்ததை தவிர்க்க முடியவில்லை.நம்மவரில் கமல் சொல்வது போல் "கண்ணீர் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்".

1 comment:

GD said...

Very true! I happened to watch this film that day as well. I just love way Lakshmi carries her role with elan and ease! Superb!!