Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Thursday, 20 January 2011

நாம் சமுதாய குடிமகனா(ளா)?

சமீப காலமாக திரு ஜெயமோகன் அவர்களின் எழுத்தை படித்த பின் வந்த சிந்தனை இது.அவரது கூற்றுப்படி நம்மை சுற்றி உள்ளவர்கள் (உங்களையும், என்னையும் சேர்த்துதான்) நவீன குடிமக்களாக ஆகவில்லை, இன்றும் மனதளவில்  சுமார் 100 வருடங்கள் பின்தங்கியே இருக்கின்றனர். இது எனக்கு சரியாகவே படுகிறது , இந்த பெங்களூரில் கார் ஓட்டினால் இந்த எண்ணம் சந்தேகமில்லாமல் ஊர்ஜிதமாகிறது.

நான் தகவல் தொழில்நுட்பத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு அறிமுகமான அமெரிக்க ஆங்கில வார்த்தை "community". இதற்கு அர்த்தமாக In human communities, intent, belief, resources,preferences, needs, risks, and a number of other conditions may be present and common, affecting the identity of the participants and their degree of cohesiveness. என்று கூறுகிறது Wikipedia.

மேலும் சுருக்கமாக, A community has been defined as a group of interacting people living in a common location என்று கூறுகிறது Wikipedia.

ஆனால் நாம் community என்பதற்கு ஒரு சிறப்பான பொருள் வைத்து இருக்கிறோம், அது நம்மை சுற்றி உள்ள மனிதர்கள் அல்ல, நாம் வாழும் இடம் அல்ல, சில பல நூற்றாண்டுகளுக்கு முன் பிரிந்த ஒரு clan என்பதே நாம் நமது community என்பதற்கான அர்த்தமாக கொண்டுள்ளோம்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம், என்னை பொறுத்தவரை wikipedia-வின் தரும் விளக்கம் சில நூற்றண்டுகளுக்கு முன்பு இந்த சாதிகளுக்கு பொருந்தி வந்து இருக்கிறது.ஆனால் இந்த 21-ஆம் நூற்றாண்டில் அல்ல!

இந்த நிலை மாறாதவரை ஊழலை, பொது சுகாதாரத்தை , மனித உரிமையை, உண்மையான ஜனநாயகத்தை, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை, மற்றும் பல பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாது.

இந்த மாற்றத்தை எப்படி கொண்டு வருவது? இது சாதாரண மாற்றம் அல்ல, இது மிக மிக உறுதியான சாதியத்தையும் , படித்தவர் படிக்காதவர் வித்தியாசத்தையும் , இன்னும் பல புரையோடி போன விஷயங்களை மாற்ற வல்லது, இதற்கு வரும் தலைமுறையினரை ஒரு 'குடிமகனாக' , நம் நாட்டின் அங்கத்தினனாக அதன் நிர்வாக இயந்திரத்தின் சிக்கல்கள் தெரிந்தவனாக , ஒரு நவீன கால கட்ட குடிமகனின் கடமையையும் , உரிமையையும் அறிந்தவனாக உருவாக்க வேண்டும். அதற்கு கல்லூரி பாட திட்டத்தில் குடிமையியலை (civics) ஒரு பாடமாக வைக்க வேண்டியது அவசியம்.

இப்போது இது பள்ளிக்கூடங்களில் பாடமாக இருக்கிறது. அதாவது பத்தாவது வரைக்கும். இது உச்ச நீதிமன்றம் / இது நாடாளுமன்றம் என்ற அளவில். ஆனால் அதை கல்லூரி காலங்களில் மாணவர்களுக்கு குடுத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் பயனை தரும்.

நாம் நம் கல்லூரிகளில் ஏன் குடிமையியலை (civics) ஒரு கட்டாய பாடமாக வைக்க கூடாது? இன்று கல்லூரி முடித்து வரும் 100-க்கு 5 மாணவர் கூட ஒரு குடிமகனாக , நவீன சமூகத்தின் அங்கமாக வாழ தகுதி கொண்டவர் இல்லை என்று துணிந்து கூறலாம். நான் சொல்வது பணம் சம்பாதிக்கும் திறமையையோ , பிற கருவிகளான வாகனம் , வங்கி , அரசு இயந்திரம் போன்றவற்றை உபயோகபடுத்துவதிலோ இல்லை , மாறாக தன்னுடைய இனம், மொழி, வட்டாரத்தை தன்னுடைய அடையாளமாக கொள்ளாமல் தான் வாழும் ஊரின், மாநிலத்தின், மாவட்டத்தின், தேசத்தின் ஒரு அங்கத்தினனாக தன்னை அடையாளம் கண்டு கொள்வதில் இருந்து ஆரம்பிக்கறது.

தமிழகத்தின் Elementary Education ஆன B.E , மற்றும்  M.B.B.S, B.Com, B.Sc, B.A, B.B.A என்று இருக்கும் எல்லாம் மாணவர்களும் இதனை படிக்க வேண்டும் , அதன் மூலமே , அவன் / அவள் கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது அரசு எதிர்பார்க்கும் குடிமகனாக வருவார்கள், இல்லை என்றால் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகத்தான் வருவார்கள். இதில் B.L படிப்பவர்கள் இப்போதே அதனை படிக்கிறார்கள்.

அந்த பாடதிட்டத்தில் குடிமகனது கடமை, உரிமை, பொது சொத்து பராமரிப்பு, அரசு நிர்வாக இயந்திரத்தின் பாதைகள்,அடிப்படை சட்ட அறிவு , ஜனநாயகம் குடிமக்களுக்கு குடுக்கும் உரிமைகள் என்று அனைத்தும் இருக்க வேண்டும், மேலும் தனி மனித உரிமை , தனி மனித விடுதலை, ஜாதி பற்றிய விழிப்புணர்வு , Consumer Rights , மனித உரிமை மீறல் பற்றிய case study, குறிப்பாக Right to Information Act (RTI)/ அது போன்ற சட்டங்கள்  போன்றவை இடம் பெற வேண்டும். நம்மை சுற்றி media கட்டும் பிம்பம் , mass media-வை எப்படி அணுகுவது போன்றவையும் பாடமாக இருக்கலாம்.இந்திய ஏன்  ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தது? அது ஏன் கம்யூனிஸ்ட் நாடாக இல்லை , நக்சலைட்டுகள்  என்றால் யார், அவர்கள் ஏன் உருவானார்கள்? நாம் ஏன் சோசியலிசம் என்ற கொள்கையில் இருந்து liberalization முறைக்கு மாறினோம், அதற்கு என்ன காரணம்?  அதற்கான எதிர்ப்பு ஏன் வருகிறது? ஆதரவு ஏன்? இன்றைய சூழ்நிலையில் ஒரு அரசுக்கான கடமைகள் என்ன?இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? மற்ற நாடுகளில் ஜாதி உள்ளதா? ஜாதியின் நன்மை தீமை என்ன? ஒட்டு போடுவதின் நன்மை , நமது எம்.எல்.ஏ-வின் கடமை என்ன, எம்.பி.யின் கடமை என்ன? ஒரு தானியம்/உணவு பொருள் எப்படி விலை நிலத்தில் இருந்து நமது வாய்க்கு வருகிறது? இவற்றை பற்றிய ஒரு தெளிவான பார்வை கல்லூரி விட்டு வெளியே செல்லும் மாணவனுக்கு வரவேண்டும். மேலும் ஒரு மாணவனுக்கான உரிமை, கடமை பற்றியும் அவனுக்கு ஒரு புரிதல் வேண்டும்.

இது ஒரு optional paper-ஆக இருக்காமல் , 4/5 வருடம் படிக்கும் ஒரு compulsory paper-ஆக இருக்க வேண்டும். இதற்கான ஒரு real time project paper வைத்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்! இதன் மூலம் நிச்சயம் ஒரு சமூக மாற்றம் கொண்டு வர முடியும்.

Friday, 2 October 2009

காந்தி பற்றி ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மகாத்மா காந்தியை பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறார் , பொதுவாக காந்தியை பற்றி வாசகர் வைக்கும் விமர்சனகங்களுக்கு பதில் என்ற வடிவில் மிக அடர்த்தியான கட்டுரைகளை எழுதுகிறார். பல கட்டுரைகளுக்கு நடுவில் இன்று நான் வாசித்த இந்த கட்டுரை ஒரு அற்புதம்; காந்தி என்ற பிரம்மாண்டமான ஆளுமையை தமிழில் விளக்க ஜெயமோகன் போன்றவர்களுக்குதான் சாத்தியம் போலும்...

                                   காந்தியும் - மகாத்மாவும்

Friday, 19 September 2008

இன்று...

ஜெயமோகனின் blog படிக்கும்போது தமிழ்நாட்டின் வாழ்க்கை தரம் மத்திய பிரதேசத்துடன் ஒப்பிடும்போது மிகவும் nanraaga தெரிகிறது.

India Today "State of the States" பற்றி எழுதும்போது தமிழ்நாடு இரண்டாவதாக வந்து இருக்கிறது, ஒண்ணுமே புரியலை... (அந்த article எழுதியது ஒரு தமிழர்)!

ஜெயமோகனின் பயணக்கட்டுரை படிக்க ஆசையாக இருக்கிறது, எப்பேர்பட்ட பயணம், எவ்வளவு ஊர்கள் , எவ்வளவு மக்கள், போக ஆசையாக இருக்கிறது...

சாரு நிவேதிதா போவது மேற்கு ஐரோப்பாவிற்கு , ஜெயமோகன் போவது வறுமை சூழ்ந்த மத்திய பிரதேசத்திற்கு! ஹ்ம்ம் ... அவரவர் destination அவரவருக்கு...

Sunday, 1 June 2008

ஜெயமோகனின் விமர்சனம்

இதனை ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி இருக்க வேண்டும் இப்போதுதான் முடிந்தது.

சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன் எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி பற்றியும் அவரது Blog-ல் குறிப்பிட்டு இருந்தார் அதற்காக அவர் தமிழ் சினிமா
துறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். (அவர் மன்னிப்பு கேட்காததனால்).


இது எந்த வகையில் நியாயம்? சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? காந்தியை பலரும் பல ஊடகங்களில் விமர்சனம்
செய்த பொது அவர்களுக்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு வரவில்லையே ஏன்?


சிவாஜியை சிம்ம குரலோன் நடிகர் திலகம் , அவரது ஒவ்வொரு நகக்கண்ணும் நடிக்கும் என்றெல்லாம் புகழ்ந்து எழுதும் போது அதை காது குளிர கேட்டவர்கள் அவர்களை விமர்சனம் செய்தபோதும் அதை கேட்டு இருக்க வேண்டும்.

ஒரு சினிமா நடிகரை (அவர் இறந்தவரோ உயிரோடு இருப்பவரோ) விமர்சனம் செய்ய கூடாது என்பது உலகிலேயே இங்குதான் நடக்க முடியும்.

இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?அதனால்தான் கேட்கிறேன் இறந்து போன காந்தியை விமர்சனம் செய்யும்போது எம்.ஜி.ஆரை / சிவாஜியை விமர்சனம் செய்ய கூடாதா?


ஜெயமோகன் விமர்சனம் செய்தது சிவாஜியின் சில முக பாவங்களை மற்றும் அவரது உருவ அமைப்பை. அது பொய்யே அல்ல , சிவாஜி 1976 முதல் 1982 வரை ஒரு மெகா சைஸ் தொப்பையை வைத்துக்கொண்டு அதை மறைக்க ஒரு கோட் மாட்டிக்கொண்டு சுமார் 50-60 படங்கள் நடித்து இருப்பார். இதை விமர்சிக்க கூடாதா?

தென்னிந்திய திரைத்துறையில் ஆணாதிக்கம் என்ற கோட்பாட்டிற்கு உருவம் கொடுத்தால் அது சிவாஜி மற்றும் என்.டி.ஆர் ஆகியவர்களுக்குதான் கொடுக்க முடியும் (எம்.ஜி.ஆரின் இடம் வேறு!).

சுமார் 25 வருடங்கள் கழித்து இதனை ஒரு விமர்சனம் செய்தால் அதை கண்டிப்பதா? பாராட்டல்லவா வேண்டும்.

அதே போல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்று பல பட்டங்கள்.

அவரின் படங்களின் வசூல் பற்றியோ, அல்லது அவரின் உதவி செய்யும் குணத்தை பற்றியோ அல்லது அவரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியோ ஜெயமோகன் எந்த கிண்டலும் செய்யவில்லை, மாறாக அவர் திரையில் அவரது கதாநாயகியை எப்படி treat செய்தார் என்பது பற்றியே அவரது இருக்கிறது.அதற்காக அவரை குறை சொல்பவர்கள் 1972-1978 வருடங்களில் வந்த எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்தல் நலம்.(முக்கியமான condition, நாயகி லதா அல்லது மஞ்சுளாவாக இருக்க வேண்டும்).

அடுத்து அவரது உச்சரிப்பு. அது ஏனோ தெரியவில்லை தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் வித்தியாசமானதாகவே அமைகிறது.

எம்.ஜி.ஆரின் தமிழ் உச்சரிப்பு அவர் சுடப்படுவதற்கு முன் மிக நன்றாகவே இருந்து இருக்கிறது.


ஆனால் அவர் சுடப்பட்ட பின் மிகவும் மோசமானதாக ஆகிவிட்டது. இதை விஷயத்தை ஒரு சாதாரண மனிதனை கொண்டு ஒப்பிட்டு பார்ப்போம்.

ஒரு tailor அவருக்கு கண் பார்வை மிகவும் மங்கலாகி விட்டது, ஊசியில் நூல் கோர்க்க முடியவில்லை, நாம் என்ன செய்வோம்? அவரை பார்த்து பரிதாபப்படுவோம் ஆனால் அவரிடம் துணி கொடுப்போமா சில சமயம் பரிதாபத்தின்பால் கொடுப்போம் ஆனால் நிச்சயம் எல்லா துணிமணிகளையும் கொடுக்க மாட்டோம், சில பேர் ஒரு துணியை கூட கொடுக்க மாட்டார்கள்.

ஒரு வேலை துணியை கொடுத்து அந்த tailor நன்றாக தைக்கவில்லை என்றால் நிச்சயம் "என்னப்பா கண் சரியா தெரியாதவன் எப்படிப்பா ஒழுங்க தைப்பான்?" என்று கமெண்ட் அடிப்போம்.யாருமே "கண் தெரியாதவன் இவ்வளவுதான் தைக்க முடியும், எனவே தைத்த சட்டையை குறை சொல்லாமல் போட்டுக்கொள்" என்று கூற மாட்டார்கள்.


துணி விஷயத்தில் இப்படி என்றால், ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் சினிமாவில் அந்த வித்தியாசமான உச்சரிப்புக்கு விமர்சனங்கள் எழாமலா இருக்கும், நிச்சயம் அப்போதே எழுந்து இருக்கும், இப்போதும் ஜெயமோகன் அதைத்தான் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். இந்த விமர்சனத்தை தாங்காதவர்கள் உண்மையில் கலைஞர்கள்தானா என்ற சந்தேகம் வருகிறது.

ஆனந்த விகடனின் "சும்பன்" மற்றும் ஜெயமோகன் இருவருக்கும் நடந்த மோதலில் தோற்றதென்னவோ நகைச்சுவை உணர்வும் கருத்துரிமையும்தான்!