Friday 3 July 2009

லோகிததாஸ்

நான் பார்த்த மலையாள படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால், பார்த்த சில படங்கள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு என்னை பாதித்திருக்கின்றன. சில படங்கள் உடல் ரீதியாக பாதித்திருக்கின்றன:-)).சில படங்கள் உள்ளத்தை பாதித்திருக்கின்றன.அப்படி உள்ளத்தை பாதித்த படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை கிரீடம், தனியாவர்த்தனம். அந்த படங்களை பார்த்த போது எனக்கு லோகிததாஸ் யார் என்று தெரியாது. ஆனால், தனியாவர்த்தனம் பார்த்துவிட்டு அழுததை மறக்க முடியாது. இதை நான் சொல்வது பெரிய விஷயம் இல்லை. சினிமாவின் பாசாங்குகள் அறிந்த கலைஞர்கள் பலர் இதை சொல்லி கேட்டிருக்கிறேன். குறிப்பாக கமல். ஏனென்றால், கமல் அவ்வளவு சீக்கிரம் ஒருவரை புகழமாட்டார். தசாவதாரத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் மம்மூட்டியை பார்த்து சொன்னார் "I cry everytime when i watch thaniyavarthanam."

சினிமாவின் உண்மையான ஹீரோ கதையும் அது திரைக்கதையாக அமைக்கப்படும் வித்தையும் தான். அப்படி பார்த்தால் மலையாள சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் லோகிததாஸ். அவருக்கு கேரளா கொடுத்திருக்கும் மரியாதையை நீங்கள் இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம். லோகிததாஸ் யார் என்று நமது தமிழ் ரசிகர்களை கேட்டால், "மீரா ஜாஸ்மினை வெச்சிருக்கார் அப்படின்னு பேப்பர்ல எல்லாம் வந்துச்சே, அவர்தான?" என்பார்கள். அதற்கு மேல் நமக்கு அவரை பற்றி தெரியாது.

பெரும்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படத்தின் கதையாசிரியர் யார் என்றே தெரியாது. அதை தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. நமக்கு தேவை எல்லாம் ஹீரோ தான். நல்ல கதை மற்றும் திரைக்கதை வல்லுனர்களாக நாம் கருதும் பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலசந்தர்(அனந்து தான் இவருக்கு எல்லாம்),பாரதிராஜா ஆகியோருக்கு தமிழ்நாடு இப்படி ஒரு மரியாதையை செய்யும் என்று தோன்றவில்லை. அப்படியே செய்தாலும் அது அவர்களின் இலக்கிய ரசனைக்கோ அல்லது கதை எழுதும் திறனுக்கோ கிடைத்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.

2 comments:

Gokul said...

வாசு
உடல் ரீதியாக பாதித்த படங்களை கொஞ்சம் சொல்லேன்!

Vasu. said...

கோகுல்,
அந்த பட பெயர் எல்லாம் நினைவில் இல்லை. :-))