Wednesday 5 August 2009

கதை வாங்கலையோ கதை

தமிழ் திரையுலகில் இன்று பெரிய பிரச்சனையே கதை பஞ்சம் தான். உலக மொழியில் எல்லாம் படம் பார்த்தாலும் நம் இயக்குனர்களுக்கு கதை கிடைக்கிற பாடாய் தெரியவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உதவ நாம் ஒரு கதை தந்தால் அதை தமிழ் இயக்குனர்கள் திரைக்கு ஏற்றபடி எப்படி அமைப்பார்கள்? ஒரு சிறிய கற்பனை. இதற்காக நாம் தேர்ந்தெடுத்த இயக்குனர்கள், பாலா, கவுதம் மேனன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார். இப்போது கதை:

"பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு செல்லும் வழியில் நம் ஹீரோ ஹால் டிக்கெட்டை தொலைத்து விடுகிறார். அதை எப்படி அவர் தேடி கண்டுப்பிடித்து சென்று ஒரு வழியாக பரீட்சை எழுதுகிறார் என்பது தான் கதை".

முதலில் இயக்குனர் பாலா:

நாம்: சார், கதை சொல்லிட்டோம். இப்போ நீங்க இதை எப்படி திரைக்கதையா மாத்தப்போறீங்க?

பாலா: இந்த படம் எடுத்து முடிக்க அஞ்சு வருஷம் ஆகும். ஹீரோ மொதல்ல யோகா கத்துக்கணும். அப்பறம் பிணங்களோட வாழ கத்துக்கணும். பிணங்களை சாப்பிட கத்துக்கணும். உச்சி வெயில்ல நிர்வாணமா நின்னு மர்ம பாகங்கள் கலரை எல்லாம் மாத்தணும். இதையெல்லாம் அவர் செஞ்ச ஒடனே ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிதான்.

நாம்: சார், தப்பா நினைக்காதீங்க, இந்த கதைக்கு எதுக்கு சார் இதெல்லாம்?

பாலா: நீங்க ஏன் இதை வெறும் கதையா பாக்கறீங்க? ஹால் டிக்கெட் தேடல் என்பது தத்துவ விசாரணை செய்யற விஷயம். நான் தான் பெரியவன் அப்படின்னு நினைக்கிற ஒருத்தனுக்கு ஹால் டிக்கெட் தொலையும் போது தான் தன்னோட அகந்தை புரியுது. ஹால் டிக்கெட் தான் பெரிசு தான் ஒண்ணுமே இல்லை அப்படின்னு அவன் புரிஞ்சுக்கிற நேரம்.

நாம்: சரி சார், படத்துக்கு டைட்டில் என்ன?

பாலா: வாழ்க்கை சிறுசு, டிக்கெட் பெரிசு. சைடுல "எக்ஸாம் தத்வமசி" அப்படின்னு ஒரு லைன். மியூசிக் இளையராஜா. கிளைமாக்ஸ்ல அஞ்சாயிரம் வயலின் யூஸ் பண்ணி ஒரு பாட்டு வெக்கறோம்.

நாம்: படம் அஞ்சு வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா நல்லா இருக்குமா சார்?
பாலா: சினிமா தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ செய்யற முறுக்கோ, அதிரசமோ இல்ல கெட்டு போறதுக்கு. நல்ல படத்த ரசிகன் அம்பது வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா கூட பார்ப்பான்.

நாம்: படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் யாரு சார்?
பாலா: நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு தேனி கிட்ட இருக்காரு. கை, கால், கண், வாய், மூக்கு கிடையாது ஆனா ரொம்ப நல்லா நடிப்பாரு. ஹீரோயினா கரீனா கபூர் இல்லேன்னா ஐஸ்வர்யா ராய் போடலாம். ஆனா, அவங்க ஒரு வருஷம் பெரியகுளம் சந்தைல பிச்சை எடுத்து பழகிக்கணும்.


இப்போது நாம் சந்திக்க இருப்பது கவுதம் மேனன்.

(கவுதமுக்காக அவர் அலுவலகத்தில் நாம் காத்திருக்கிறோம்)

"மாதா சொத், பேகன் சொத், f*** the damn bitch என்று கூறியபடி உள்ளே நுழைகிறார் கவுதம்".
நாம்: என்ன சார், கோவமா இருக்கீங்க?
கவுதம்: நோ நோ, I am fine. It's just that i have been dubbing for my upcoming tamil movie and i still haven't got over with it. Yeah, tell me, wass up?
நாம்: நேத்து உங்க உதவியாளர் கிட்ட கதை கொடுத்துட்டு போனோம், அது விஷயமா..
கவுதம்: அது நீங்கதானா, real good story mate...but u see we need to make some changes when it comes to the story treatment looking at it from a movie viewpoint.
நாம்: அதான் சார், உங்க கிட்ட பேசிட்டு போலாம் அப்படின்னு வந்தோம். எப்படி திரைக்கதை எழுத போறீங்க?
கவுதம்: படம் யு.எஸ்ல நடக்கற மாதிரி மாத்துவோம். அங்க எல்லாம் ஹால் டிக்கெட் கிடையாது. Let's say that our man takes the exam from home and he is all alone during that time. திடீர்னு ரெண்டு Psychos அவன் வீட்டுக்குள்ள வராங்க. ஒரு பொண்ணு அண்ட் ஒன் பாய். அவங்க ரெண்டு போரையும் ஏமாத்தி அவன் எப்படி எக்ஸாம் எழுத போறான் அப்படிங்கறது தான் ஸ்டோரி.
நாம்: சரி சார், படத்துக்கு யார் ஹீரோ? விஜய் நடிச்சா நல்லா இருக்குமா?
கவுதம்: No No, அவர் திருப்பாச்சி, சிவகாசி ரெண்டும் கலந்து இந்த கதையை மாத்த சொல்வாரு. Let's have Surya. அவரு தான் கேள்வி கேட்காம நடிப்பாரு. Daniel Balaji ஒரு Psycho, female psycho ஜோதிகா.
நாம்: படம் எப்போ சார் ஸ்டார்ட் பண்ணலாம்?
கவுதம்: Give me 10 days time. I need to watch a few english movies and get the scenes ready
நாம்: படத்துக்கு பட்ஜெட் எவ்வளோ சார் வரும்?
கவுதம்: கிளைமாக்ஸ் சண்டை வேளச்சேரி மார்கெட்ல நடக்கும்.அதுக்கு அமெரிக்கால செட் போட்டுடலாம். சூர்யா அமெரிக்கால இருக்கற வீட்டோட செட், i guess we can have it in West Indies. Overall 200 crores should be fine but have a backup of 100 crores.

இறுதியாக கே.எஸ்.ரவிக்குமார்

நாம்: சார், கதை எப்படி இருக்கு?
கே.எஸ்: கமல் சார் தான் ஹீரோ. அப்படி இருந்த நான் டைரக்ட் பண்றேன்.
நாம்: சார், படம் ஸ்கூல் பையன் பத்தி சார்??
கே.எஸ்: கமல் ஸ்கூல் பையனா நடிக்க முடியாது அப்படின்னு சொல்றீங்களா?
நாம்: சார், அவர் பண்ணாத பாத்திரமா?
கே.எஸ்: அப்பறம், வேற என்ன பிரச்சனை? அவர் ஸ்டுடென்ட், ஹால் டிக்கெட், அது தொலஞ்சு போற தெரு, எல்லா ரோலும் பண்ணிடுவாரு. உங்களுக்கு செலவு மிச்சம்.
நாம்: சரி சார், அதெல்லாம் விடுங்க, திரைக்கதை எப்படி?
கே.எஸ்: ஒரு தீவிரவாதி கைல அந்த ஹால் டிக்கெட் கெடைக்குது. அவன் அதை ஒரு பாட்டில் உள்ள போட்டு வாஷிங்டன் அனுப்பறான். கமல் அதை தேடிட்டு போறாரு. அங்க வாஷிங்டன் ஊர்ல ஒரு நாட்டாமை இருக்காரு. அது தான் விஜயகுமார். அவர் அந்த பாட்டில் உள்ள என்ன இருக்கு அப்படின்னு தெரியாம வெத்தல கொதப்பி துப்பராரு. இப்போ கமல் சாருக்கு ரெண்டு வேலை. ஹால் டிக்கெட் கண்டு பிடிச்சு கழுவி அதை இந்தியாக்கு எடுத்துட்டு வரணும்.கழுவறதுக்கு சாதா தண்ணி அமெரிக்கால கெடைக்கல. அதுக்காக கமல் சிதம்பரம் வராரு. அங்க ஹீரோயின் காலைல வாசல் தெளிக்க தண்ணிய பக்கெட்ல வெச்சு இருக்காங்க. அதை கமல் சார் எடுத்து யூஸ் பண்ணிடறாரு. கமல் சாருக்கும் ஹீரோயினுக்கும் லவ் வருது. அது ஹீரோயின் பாட்டிக்கு புடிக்கல. கமலும் ஹீரோயினும் லிப் கிஸ் பண்ணும் போது பாட்டி அந்த ஹால் டிக்கெட் இருக்கற பாட்டில்லை ஒளிச்சு வெச்சிடறாங்க. இப்படி போகுது கதை.

நாம்: எப்போ சார் படம் முடியும்?
கே.எஸ்: கமல் சார் போதும் அப்படின்னு சொன்ன ஒடனே நிறுத்திட வேண்டிதான்.

நாம்: படத்துக்கு பட்ஜெட் என்ன சார்?
கே.எஸ்: பட்ஜெட் அப்படின்னு எதுவும் இல்ல. நீங்க கோமணம் ஒன்னு வாங்கிகிட்டு பாக்கி எல்லா சொத்தையும் வித்துடுங்க.

3 comments:

Gokul said...

வாசு,

சூப்பர், இருப்பதிலேயே கௌதம் மேனன் வசனங்கள் பின்னுது.. நான் ரசித்த வரிகள் ...

//கை, கால், கண், வாய், மூக்கு கிடையாது ஆனா ரொம்ப நல்லா நடிப்பாரு//

//"மாதா சொத், பேகன் சொத், f*** the damn bitch என்று கூறியபடி உள்ளே நுழைகிறார் கவுதம்".//

//அப்பறம், வேற என்ன பிரச்சனை? அவர் ஸ்டுடென்ட், ஹால் டிக்கெட், அது தொலஞ்சு போற தெரு, எல்லா ரோலும் பண்ணிடுவாரு. உங்களுக்கு செலவு மிச்சம்.//

Lol

Saran said...

Nalla oru karkpanai vasu!!!
Serious ah naan vilunthu vilunthu sirichean ovoru kathai mudiyum pothum!!!

Mahalakshmi Swaminathan said...

This one was damn good....Sari Vasu sir direct panna thiraikadhai eppadi irukkum...and who will be the hero and heroine????