Wednesday 5 August 2009

மறதி மன்னார்சாமிகளுக்கு

சில நாட்கள் / வாரங்கள் / மாதங்கள் முன்பு நாம் கடந்து வந்த செய்திகளை பார்ப்போம் ,
சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் - ஒரு மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது - அதன் முதலாளி தலைமறைவாகிவிட்டார் - அந்த வழக்கின் கதி என்ன? தீ.விபத்து தொடர்பாக ஏதாவது செய்தார்களா? புது விதிகள் அல்லது அந்த ரங்கநாதன் தெருவில் உள்ள மற்ற கட்டிடங்கள் எல்லாம் தீயணைப்பு துறை விதிப்படி கட்டப்பட்டதா என்று சோதனை செய்து யாரையாவது கைது செய்தார்களா? எந்த கடையை பூட்டினார்கள்? ஏதாவது தகவல் உண்டா?


அந்த வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து இருப்பார் , ஆக அந்த file பற்றி தகவல் இல்லை.அடுத்த வருஷம் சுமார் ஐநூறு பேர் தீயிலும், நெரிசலிலும் சாவார்கள் - அது வரை பிரச்சினை இல்லை-ஜாலி!

swiz பாங்கில் உள்ள கோடிக்கணக்கான கருப்பு பணம் - என்ன ஆனது? இந்திய அரசு அதை தொடர்ந்து என்ன செய்தது? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?

சட்டக்கல்லூரி மாணவர் அடிதடி பிரச்சினை - அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏதோ விசாரணை கமிஷன் போடப்பட்டதாக கேள்வி - அந்த கமிஷனின் சிபாரிசை அரசு அமல் படுத்தியதா? இல்லையா?

சரி விடுங்க கந்தசாமி எப்போ ரிலீஸ்?

No comments: