Tuesday 1 September 2009

விஜய்-ராகுல் என்ன பேசி இருப்பார்கள்?


தமிழக அரசியலில் சென்ற வாரம் சூடு கிளப்பிய செய்தி இவர்கள் சந்திப்பு தான். வெறும் வாய்க்கு அவல் என்கிற மாதிரி என்ன செய்தி வெளியிட்டால் ஜட்டியை கிழித்துக்கொண்டு ஜனங்கள் அலைவார்கள் என்று சதா சர்வ காலமும் ஏங்கிக்கொண்டிருக்கும் ஏடுகளுக்கு கிடைத்தது சரியான தீனி. ஒரு பத்திரிக்கை தனது அட்டைப்பட செய்தியில் "விஜய்-ராகுல் சந்திப்பு, விஜயகாந்த்துக்கு பேதி" என்றது. இன்னொன்றில் "காங்கிரசில் சேர்ந்தார் விஜய். மன்மோகன் பதவிக்கு ஆப்பு" என்றது. இப்படியே செய்தி வெளியிட்டான்களே தவிர அவங்க ரெண்டு பேரும் என்ன பேசினாங்க அப்படின்னு யாருக்குமே தெரியலை.

விஜய் அப்பா எஸ்.எ.சி கிட்ட கேட்டா "விரைவில் நல்ல அறிவிப்பு வரும்" என்கிறார். அவர் படம் எடுக்கறத நிறுத்திட்டார் அப்படின்னு வர செய்தியை விட எதாவது நல்ல செய்தி உண்டா என்ன? எது எப்படியோ, உண்மையிலேயே ரெண்டு பேரும் என்ன தான் பேசி இருப்பாங்க? நம்ம கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டி விடுவோம்.

விஜய்: அண்ணா, வணக்கம்ணா. என் படம் ஓடி தமிழ்நாட்ல மூணு வருஷம் ஆகுது. ஜனங்க மறக்கற மாதிரி இருந்த சமயத்துல நம்மள கூப்பிட்டு விட்டீங்க. நல்ல வேளை தப்பிச்சேன்.
ராகுல்: உங்களை பத்தி நெறைய கேள்விப்பட்டேன். அதான் நேர்ல சந்திக்கணும் அப்படின்னு நினைச்சேன்.
விஜய்: என்னன்னா கேள்விப்பட்டீங்க?
ராகுல்: தமிழ்நாட்டு மக்கள் மனசை உங்களை விட நல்ல தெரிஞ்சவர் யாரும் இல்லேன்னு சொன்னாங்க. எவ்வளவு கேவலமா நீங்க படம் எடுத்தாலும் அவங்க பார்கறாங்கலாமே? உங்களை வெச்சு தான் தமிழ்நாட்ல காங்கிரஸ் கட்சியை வளர்க்கணும் அப்படின்னு முடிவு பண்ணேன். ஏன்னா, தமிழ்நாட்ல எங்க கட்சி உங்க படத்தை விட கேவலமா இருக்கு.
விஜய்: இவ்வளவு தானா? கண்டிப்பா செய்யலாம்னா.
ராகுல்: அப்படியா? உங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்கா?
விஜய்: என்னன்னா இப்படி கேட்டுட்டீங்க? எங்க குடும்பமே வளர்ந்து கெட்ட குடும்பம்னா. எங்கப்பா என்னை வளர்த்து விட பட்ட கஷ்டத்தை நீங்க சங்கவி கிட்ட கேட்டுப்பாருங்கன்னா. அதே மாதிரி எங்க அம்மா பாடறேன் பாடறேன்னு அநியாயம் பண்ணும். அதை வளர்த்து விட நான் பட்ட கஷ்டம். இதுக்கு நடுவில என் கசின் விக்ராந்த் அப்படின்னு ஒருத்தன். அவனை வளர்த்து விட என் குடும்பமே போராடிச்சு. எங்களை பார்த்து கட்சியை வளர்க்க அனுபவம் இருக்கான்னு கேக்கறீங்க?
ராகுல்:(ஆச்சர்யத்துடன்) அப்படியா? சரி, உங்களை தமிழ்நாட்ல காங்கிரஸ் இளைஞர் அணி தலைவரா போட்டா நீங்க கட்சியை எப்படி வளர்ப்பீங்க?
விஜய்: அப்படி கேளுங்கண்ணா. இப்போ, எப்படி என் படத்துல ஓபனிங் சாங் இருக்கோ அந்த மாதிரி மொதல்ல நம்ம கட்சிக்கு ஒரு பாட்டு வேணும்ணா.உதாரணமா,

"ஏ, எருமை எருமை எருமை எருமை எருமை கிட்ட சாணியை கேட்டேன்.
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு குரங்கு கிட்ட பழத்தை கேட்டேன்
உங்க கிட்ட வோட்ட கேட்டேன், உங்க கிட்ட வோட்ட கேட்டேன்".
எப்படி இருக்கு?
ராகுல்: நல்லா தான் இருக்கு. சரி, அப்பறம்?
விஜய்: இந்த லல்லு, முலாயம் இவங்க எல்லாம் பயப்படற மாதிரி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லணும்னா.
ராகுல்: அது எப்படி?
விஜய்: ரோட்ல இருக்கற கல்லு என் கால்ல பட்டா நொறுங்குமே பாவம் அப்படின்னு பாத்து நடக்கிறவன் நான். நீ வெறும் லல்லு. உனக்கு என் கால் தேவையில்லை. என் பூ..
ராகுல்: ஐயோ வேணாம்.
விஜய்: என் புருவத்துல இருக்கற முடி போதும் அப்படின்னு சொல்ல வந்தேன்னா.
ராகுல்: சரி, முலாயம் சிங்கை எப்படி சமாளிப்பீங்க?
விஜய்: வெங்காயம், பெருங்காயம் ரெண்டும் செய்யும் சமையலுக்கு சகாயம். ஆனா முலாயம், உன்னால அமர் சிங்குக்கு மட்டும் தான் ஆதாயம்.எப்படி?
ராகுல்: இவங்க எல்லாம் கூட பரவாயில்ல, மாயாவதி இம்சை தான் தாங்க முடியல. அவங்களுக்கு எதாவது பஞ்ச் இருக்கா?
விஜய்: எனக்கு தல மாதிரி உங்களுக்கு மாயாவதி போல? அவங்க கிட்ட நேரடியா மோத வேண்டாம்.தேவைப்படும் போது உசுப்பேத்தி விடுவோம்.
ராகுல்: இதெல்லாம் சரி, கட்சியை எப்படி வளர்க்க போறீங்க?
விஜய்: பேரரசு,எங்கப்பா இவங்க ரெண்டு பேரையும் கொ.ப.செ அப்படின்னு அறிவிச்சுடுங்க.
என்னை வளர்த்த மாதிரியே கட்சியையும் வளர்த்துடுவாங்க.
ராகுல்: சரி, கட்சியை தமிழ்நாட்ல பெரிசா பண்றதுல உங்க பங்கு என்ன?
விஜய்: நம்ம கட்சி கொடில கை இருக்கற எடத்துல என் படத்தை போடறேன். ஒரு ஓரத்துல உங்க படம். எல்லா படத்திலயும் பிரகாஷ்ராஜ் நம்ம கட்சி கொடிய திருடற மாதிரி ஒரு சீன் வெச்சு அவரை பின்னி எடுக்கறேன். ஹீரோயின் டிரஸ் காணாம போற மாதிரி எல்லா படத்திலயும் ஒரு சீன் வெச்சு அவங்களுக்கு நான் நம்ம கட்சி கொடிய டிரெஸ்ஸா தர மாதிரி பண்ணறேன். வெளிநாட்ல பாடல் காட்சி எடுக்கும் போது ஹீரோயினோட பிக்கினி, பிரா ரெண்டுமே நம்ம கட்சி கொடி டிசைன்ல இருக்கற மாதிரி பாத்துக்கறேன்.
ராகுல்: இதெல்லாம் பண்ணா கட்சி வளர்ந்துடுமா?
விஜய்: என்ன இப்படி கேக்கறீங்க? தமிழ்நாடு ஜனங்களுக்கு சினிமா தான் வாழ்க்கை. ஹீரோயின் போடற டிரஸ் மாதிரியே போடுவாங்க. அதே பிரா, அதே உள்பாவாடை ஒன்னு விடாம அதே மாதிரி டிரஸ் பண்ணுவாங்க. எனக்கு தாய்க்குல ஆதரவு கொஞ்சம் ஜாஸ்தி வேற. கேக்கவே வேண்டாம். நம்ம கொடி செம ஹிட் ஆயிடும். அடுத்த தேர்தல்ல வாக்குபதிவு இயந்திரம் வெச்சாலும் சரி, இல்ல பேப்பர்ல எழுதி போட்டாலும் சரி, நம்ம கட்சிக்கு தான் அதிக ஒட்டு விழும். நம்ம கொடிய பார்த்த உடனே ஆம்பிளைங்க எல்லாருக்கும் ஹீரோயின் பிக்கினி போட்டுக்கிட்டு ஆடின டான்ஸ் ஞாபகம் வரும். அவங்க ஓட்டும் நமக்கு தான்.எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி, ஹீரோயின் பிகினிக்கு இணையாகுமா? சந்தேகமே இல்லாம எல்லா தொகுதிலயும் நம்ம தான் ஜெயிப்போம்.இதை விட சிறப்பா கட்சியை எப்படி வளர்க்க முடியும்? சொல்லுங்க.
ராகுல்: ரொம்ப சந்தோஷம். நீங்க தான் இனிமே தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

2 comments:

Gokul said...

//இன்னொன்றில் "காங்கிரசில் சேர்ந்தார் விஜய். மன்மோகன் பதவிக்கு ஆப்பு" என்றது.//

வர வர நீ கிண்டல் பண்றியா இல்லை உண்மையிலேயே இப்படி ஒரு செய்தி வந்துச்சான்னு தெரியவே மாட்டேங்குது..:-))

Vasu. said...

கோகுல்,

முதல் செய்தி உண்மை, இரண்டாவது என் கற்பனை. ஆனால், அப்படி ஒரு செய்தி வந்தாலும் வரலாம் "விஜய் ரசிகன்" புத்தகத்தில்.