Wednesday 21 October 2009

இருபத்தியொரு நாட்களில் தமிழ் சினிமா பாடலாசிரியர் ஆவது எப்படி?

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளவரா நீங்கள்?சங்க இலக்கியம், உலக இலக்கியம் இதெல்லாம் படிக்காமல் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக உருவெடுப்பது கடினம் என்கிற பீதி உங்களை பீடித்திருக்கிறதா? கவலை வேண்டாம் நண்பரே. வேட்டைக்காரன்,கந்தசாமி பட பாடல்களை இரண்டு முறை கேளுங்கள். நீங்களும் கவிஞராகலாம்.உங்களுக்காக சில சாம்பிள் இதோ:

"நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாளு தூங்க மாட்ட
மோதிப் பாரு முழுசா வூடு போய் சேர மாட்ட"

மேலே உள்ள வரிகள் வேட்டைக்காரன் படத்திலிருந்து. அதே படத்தின் ஒபெனிங் சாங் வரிகள் இதோ:

"புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடிக்குது வேட்டைக்காரன் வராண்டா"

எவ்வளவு கருத்தாழம் கொண்ட வரிகள்? புலி உறுமும், இடி இடிக்கும் என்று தமிழனை ஆதி மனிதனாய் கற்பனை செய்து அவனுக்கு கற்றுத் தருகிறார் கவிஞர்.அற்புதம்.இப்போது கந்தசாமி பாடல் வரிகள் சிலவற்றை பார்ப்போம்:

"மியாவ் மியாவ் பூனை மீசை இல்ல பூனை
திருடி தின்ன பாக்கிறியே திமுசு கட்ட மீனை"

அடுத்த ஆண்டு கீழ்பாலர்(LKG) வகுப்பிற்கான தமிழ் பாடத்திட்டத்தில் இதை கண்டிப்பாக "Rhymes" பகுதியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு தகப்பனாக நான் அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதே படத்திலிருந்து மற்றுமொரு பாடல்

Hey excuse me ms subulakshmi
ur activites are தப்பு லக்ஷ்மி
உன் பேச்சும் தோற்றம் ரொம்ப குப்ப லக்ஷ்மி
போடா போடா

ஏய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விடமாற்றியே
நீ படிச்ச பொண்ணு தானா
உன்ன படிக்க முடியலையே
ஏய் தள்ளி போ
என்ன தள்ளிட்டு போ
கொஞ்சம் மூடு
ரொம்ப மூடு
ஐயையையோ

இது சாம்பிள் தான். இந்த படங்களின் எல்லா பாடல்களையும் நீங்கள் இரண்டு முறை கேட்டால் நீங்கள் பாடலாசிரியர் ஆவது உறுதி. இந்த படத்தின் பாடல்களை கேட்ட பின் நான் எழுதிய பாடலை கீழே பாருங்கள்.

Situation: காதலன் காதலியிடம் தன் ஆண்மை பற்றி கூறுகிறான்

ஏய் நீ Maruti Swift டி
நான் Hyundai Santro டி
நீ டீசல் வண்டி டி
நான் பெட்ரோல் வண்டி டி
உன் என்ஜின் எப்போவென பிரச்சனை பண்ணும் டி
என் என்ஜின் ரொம்ப soft and smooth டி
நம்ம ரெண்டு என்ஜின் ஒன்ன சேர்ந்த மத்த காருக்கெல்லாம் பீதி டி
நீ மேற்கு வங்காளம்னா நான் நக்சல் டி
உன்னை சின்னாபின்னமாக்க வந்த ஆம்பள சிங்கம் டி

இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. உடனே எடுங்கள் பேனாவை...

2 comments:

Zahoor said...

இந்தப் பாடல்கள் வரிகள் எல்லாம் பின்நவினத்துவ இலக்கியங்கள். நமக்கெல்லாம் புரியாது. :-) :-) :-)

Unknown said...

யப்பா ஆ ஆ ....
சூப்பரப்பூ ஊ ஊ ...

அப்ப ஞானும் கவுஞன் தானா ?! :)