Wednesday 7 April 2010

ஏன் இந்த கரிசனம்?

"வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்திய அரசு என்னும் அமைப்பை உடைத்துவிட்டு ஆட்சியை பிடிப்பதே மாவோயிஸ்டுகளின் லட்சியம்".

இதை சொன்னது எந்த மாவோயிஸ்ட் தலைவரும் இல்லை. கடந்த மாதம் புது டெல்லியில் "இடதுசாரி தீவிரவாதம்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்திய உள்துறை செயலர் G.K.Pillai சொன்ன வார்த்தைகள் இவை. 2009 ஆம் ஆண்டு மட்டும் 908 பேர் மாவோயிஸ்ட் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் உதவி செய்துக்கொண்டு இருக்கலாம் என்றும் G.K.Pillai கூறியிருந்தார். அவர் பேசி ஒரு மாதம் கூட ஆகவில்லை. நேற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் எண்பது காவலர்களை மாவோயிஸ்டுகள் கொன்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதையே தான் திரு.A.K.Antony கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய போது தெரிவித்தார். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதில் என்ன தவறு? தீவிரவாதத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்று கூறும் இந்திய அரசு உள்நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கும் மாவோயிஸ்டுகளை அழிப்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறது? இந்திய நிலப்பரப்பில் 40% மாவோயிஸ்டுகள் வசம் இருக்கிறது என்கிறது விக்கிபீடியா.

"As of 2009, Naxalites are active across approximately 220 districts in twenty states of India accounting for about 40 percent of India's geographical area. They are especially concentrated in an area known as the "Red corridor", where they control 92,000 square kilometers. According to India's intelligence agency, the Research and Analysis Wing, 20,000 armed cadre Naxalites were operating apart from 50,000 regular cadres working in their various mass organizations and millions of sympathisers and their growing influence prompted Indian Prime Minister Manmohan Singh to declare them as the most serious internal threat to India's national security."

உள்நாட்டு பாதுகாப்பிற்கு இத்தனை பெரிய சவால் விடுக்கும் இந்த இயக்கத்தை வேரோடு அறுத்தெறிய வேண்டாமா? இவர்கள் மீது கரிசனம் ஏன்? நேற்று கொல்லப்பட்ட எண்பது காவலர்களின் குடும்பங்கள் என்ன செய்யும்? ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வேலையும் தந்தால் அரசின் பொறுப்பு முடிந்து விட்டதா? இவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து என்ன ஆகப் போகிறது?

இந்தியாவை குறிவைக்கும் லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் இவர்களை உபயோகிக்காது என்பது என்ன நிச்சயம்? உள்துறை செயலர் பிள்ளை அவர்கள் சொல்வது போல் முன்னாள் ராணுவ வீரர்கள் தான் இவர்களுக்கு போர் தந்திரங்களை கற்றுக் கொடுக்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்தால், அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பது அத்தனை கடினமா? திரு சிதம்பரம் அவர்களே, "The buck does not stop with the state. You are responsible too".

3 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

you arguments seems to be wrong, we have to find out the real causes of the problem. we have only seen the oneside of the situvation thru our media and officials.
any way keep writing. Thanks.

Vasu. said...

@aafrinasghar,

When you have a petty issue with your next door neighbour do you listen to his side of the story? We don't do that but we want to hear the other side of the story when we are not involved in it. Anyway, thats your view.